என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
கேப்டனுக்கு முக்கியமானதே அர்ப்பணிப்பும் விசுவாசமும் தான்- சுப்மன் கில்
- ஒரு அணிக்கு கேப்டனாகும் போது பல்வேறு பொறுப்புகள் நமக்கு வந்துவிடும்.
- நான் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியதாகவும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் நினைக்கிறேன்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.
அந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியது. இதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அணிக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என குஜராத் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு அணிக்கு கேப்டனாகும் போது பல்வேறு பொறுப்புகள் நமக்கு வந்துவிடும். அர்ப்பணிப்புடன் இருப்பது, கட்டுப்பாடுடன் இருப்பது, கடினமாக உழைப்பது, அணிக்கு விஸ்வாசமாக இருப்பது. இவையெல்லாம் ஒரு கேப்டனின் முக்கியமான தேவைகள்.
மேலும் நான் சிறந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடியதாகவும் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் நினைக்கிறேன். அவர்களின் கீழ் விளையாடிய அனுபவத்திலிருந்து நான் பெற்ற அந்த கற்றல் இந்த ஐபி எல்லில் எனக்கு மிகவும் உதவும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு கில் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்