search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்
    X

    ரசிகர்களுக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்

    • இந்த பதிவு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குளை குவித்துள்ளது.
    • அவர் டுவிட்டரில் 38 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

    வண்ணங்களின் திருவிழாவான ஹோலி நெருங்கி வரும் நிலையில், கிரிக்கெட் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டர் மூலம் தனது ரசிகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தனது கிரிக்கெட் திறமையால் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜாம்பவான் தற்போது சமூக வலைதளங்களிலும் பிசியாக இருக்கிறார்.

    வெவ்வேறு வண்ணங்களில் மூடப்பட்டிருக்கும் உணவு தட்டை வைத்திருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்ட சச்சின், "அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்!" "என் தட்டில் என்ன இருக்கிறது என்று உங்களால் யூகிக்க முடியுமா?" என்று ரசிகர்களிடம் கேட்டார்.


    இந்த பதிவு சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான லைக்குளை குவித்துள்ளது. அவர் டுவிட்டரில் 38 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஹோலி பண்டிகை மார்ச் 8-ம் தேதியும், சோட்டி ஹோலி அல்லது ஹோலிகா தஹனம் மார்ச் 7-ம் தேதியும் கொண்டாடப்படும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 2013-ல் விளையாட்டில் இருந்து விடைபெற்றார்.

    Next Story
    ×