search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ராஜ்கோட் டெஸ்டின்போது மெடிக்கல் எமர்ஜென்சி: விவரிக்கும் அஸ்வின் மனைவி
    X

    ராஜ்கோட் டெஸ்டின்போது மெடிக்கல் எமர்ஜென்சி: விவரிக்கும் அஸ்வின் மனைவி

    • ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் 500 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • விக்கெட் வீழ்த்திய நாளில், உடனடியாக சென்னை திரும்பினார்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழந்து வருகிறார். தற்போது இங்கிலாந்து அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.

    ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது அஸ்வின் 2-வது நாள் ஆட்டத்தின்போது தனது 500-வது விக்கெட்டை கைப்பற்றினார். அனில் கும்ப்ளேவிற்குப் பிறகு 500 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    அந்த மகிழ்ச்சி அவரது முகத்தில் நீண்ட நேரம் தங்கவில்லை. உடனடியாக அவர் சென்னை திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. மெடிக்கல் எமர்ஜென்சி காரணமாக அஸ்வின் சொந்த ஊர் திரும்பியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது.

    அதன்பின் அதேடெஸ்டில் அஸ்வின் மீண்டும் இணைந்து விக்கெட் கைப்பற்றினார். ஆனால், தான் எதற்காக அவசரமாக சொந்த ஊர் சென்றேன் என அஸ்வின் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் இது தொடர்பாக அஸ்வின் மனைவி பிரீத்தி வெளியிட்டுள்ள தகவல் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரையாக வெளியாகியுள்ளது.

    அதில் அஸ்வின் மனைவி ப்ரீத்தி கூறியிருப்பதாவது:-

    தனது கணவர் அஸ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியதும், செல்போனில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு குழந்தைகளுடன் பதில் அளித்துக் கொண்டிருந்தோம்.

    அப்போது திடீரென மாமியாரின் அலறல் சத்தம் கேட்டது. அத்துடன் நிலைகுலைந்து கிழே விழுந்தார். சிறிது நேரத்தில் நாங்கள் மருத்துமனையில் இருந்தோம். அந்த நேரத்தில் நாங்கள் அஸ்வினுக்கு சொல்ல வேண்டாம் என நினைத்தோம். ஏனென்றால், சென்னை- ராஜ்கோட் இடையிலான சிறந்த முறையிலான விமான சேவை கிடையாது.

    ஆகவே, நான் புஜாராவுக்கு போன் செய்தேன். அவருடைய குடும்பம் மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. அஸ்வின் விரைவாக சென்னை திரும்புவதற்கான ஒரு வழியை கண்டுபிடித்த உடன், நான் அஸ்வினுக்கு போன் செய்தேன். ஏனென்றால், ஸ்கேன் பரிசோதனை முடிந்த பிறகு அவரது மகன் அருகில் இருந்தால் நன்றாக இருக்கும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். போனில் பேசும்போது அவர் உடைந்து போனார்.

    அஸ்வின் சென்னைக்கு திரும்ப அனைத்து முயற்சிகளும் மேற்கொண்ட ரோகித் சர்மா, ராகுல் டிராவிட், அணியின் உள்ள மற்ற அனைவருக்கும், பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அன்றைய தினம் நள்ளிரவு சென்னை வந்து சேர்ந்தார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் தாயாரை அவர் பார்த்தது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். அவரது தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததும், நாங்கள் அவரை அணியில் இணைந்து கொள்ள கேட்டுக்கொண்டோம். அவர் ஒருபோதும் இதுபோன்ற போட்டியை விட்டுவிட விரும்பமாட்டார். அவருடைய அணிக்கு அவர் வெற்றியை தேடிக்கொடுக்காவிடில், தீவிர குற்ற உணர்வை கொண்டிருப்பார்.

    அந்த இரண்டு நாட்களில், பெற்றோருடன் அதிக நேரம் இருப்பதற்கான அவரது ஏக்கம் இப்போது அதிகமாக இருப்பதையும், அது வயது மற்றும் முதிர்ச்சி காரணமாக வருகிறது என்பதையும் உணர்ந்தேன்.

    இவ்வாறு பரீத்தி அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×