search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டூ பிளசிஸ், விராட் கோலி அரை சதம் - பஞ்சாப் வெற்றிபெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு
    X

    டூ பிளசிஸ், விராட் கோலி அரை சதம் - பஞ்சாப் வெற்றிபெற 175 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

    • முதலில் ஆடிய பெங்களூரு 174 ரன்கள் எடுத்தது.
    • தொடக்க ஆட்டக்காரர்கள் விராட் கோலி, டூ பிளசிஸ் ஆகியோர் அரை சதமடித்தனர்.

    மொகாலி:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    மொகாலியில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டூ பிளசிஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில், விராட் கோலி 59 ரன்னில் அவுட்டானார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல் டக் அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 56 பந்தில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×