search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே- கண்கலங்க வைத்த சிராஜின் இன்ஸ்டா ஸ்டோரி
    X

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே- கண்கலங்க வைத்த சிராஜின் இன்ஸ்டா ஸ்டோரி

    • சிராஜின் தந்தை 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.
    • அந்த நேரத்தில் சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. முதல் அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் 2-வது அரையிறுதியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது.

    முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் 4-வது முறையாக இந்தியா இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

    இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில் இந்திய அணியில் இடம் பிடித்த முகமது சிராஜின் இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் தனது தந்தையிடம் இருந்து கால் வருமா என எதிர்ப்பார்க்கிறேன் என பதிவிட்டிருந்தார். மிஸ் யூ எனவும் அதில் தெரிவித்தார். இந்த ஸ்டோரி கண்கலங்க வைப்பதாக இருந்தது.

    சிராஜின் தந்தை 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார். அந்த நேரத்தில் சிராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




    Next Story
    ×