search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நான் ரன் அவுட் ஆனது துரதிருஷ்டவசமானது- இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் வேதனை
    X

    நான் ரன் அவுட் ஆனது துரதிருஷ்டவசமானது- இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் வேதனை

    • கடைசி பந்து வரை சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம்.
    • நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்சுகளை தவர விட்டோம்.

    கேப்டவுன்:

    8-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த முதல் அரை இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை.

    பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52ரன்), ரோட்ரிக்ஸ் (43 ரன்) ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இதனால் இந்திய அணி வெற்றியை நெருங்கியது.

    ஆனால் இருவரும் அவுட் ஆன பிறகு நெருக்கடி ஏற்படுத்தியது. ஹர்மன்பிரீத் கவுரின் ரன் அவுட் திருப்புமுனையாக அமைந்தது.

    இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்னே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    இந்தியா போராடி தோற்று வெளியேறியது. தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் கூறியதாவது:-

    இதை விட துரதிருஷ்டவசமாக உணர முடியாது. ரோட்ரிக்ஸ் ஆட்டத்தில் மீண்டும் வேகத்தை பெற்றோம். நான் ரன்-அவுட் ஆன விதம் துரதிருஷ்டவசமானது. இங்கிருந்து தான் தோற்றோம். இதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

    கடைசி பந்து வரை சென்றதில் மகிழ்ச்சி அடைந்தோம். தொடக்கத்தில் முதல் 2 விக்கெட் இழந்தாலும் எங்களிடம் ஒரு நல்ல பேட்டிங் வரிசை உள்ளது என்று எங்களுக்கு தெரியும். ரோட்ரிக்சை பாராட்ட வேண்டும். அவர் எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தார். ஒட்டு மொத்தமாக நாங்கள் சில நல்ல கிரிக்கெட் விளையாடினோம். எங்களின் இயல்பான ஆட்டத்தை விளையாட விரும்பினோம். அதை எங்களில் சிலர் செய்தோம்.

    நாங்கள் மீண்டும் சில எளிதான கேட்சுகளை தவர விட்டோம். வெற்றி பெற வேண்டு மென்றால் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று நடைபெறும் 2-வது அரை இறுதியில் இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    Next Story
    ×