search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நெருக்கடியான சூழலில் அமைதியாக இருக்க ஐ.பி.எல். போட்டி நம்பிக்கை அளித்தது- ரிங்குசிங்
    X

    நெருக்கடியான சூழலில் அமைதியாக இருக்க ஐ.பி.எல். போட்டி நம்பிக்கை அளித்தது- ரிங்குசிங்

    • நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன்.
    • ஐ.பி.எல். போட்டியில் 6 ஆண்டுகளாக ஆடி வருகிறேன்.

    பெங்களூரு:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் 44 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 4-வது ஆட்டத்தில் 20 ரன்னிலும் இந்தியா வெற்றி பெற்றது. கவுகாத்தியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

    இந்த போட்டியிலும் இந்தியாவின் வெற்றி நீடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த 2 ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது;-

    நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். ஐ.பி.எல். போட்டியில் 6 ஆண்டுகளாக ஆடி வருகிறேன். ஐ.பி.எல். எனக்கு நம்பிக்கை அளித்தது. நெருக்கடியான நிலையில் அமைதியாக இருக்க இந்த போட்டி கற்றுக் கொடுத்தது.

    உடற்பயிற்சி கூடத்துக்கு தினசரி சென்று பளுதூக்குதல் உள்ளிட்ட உடற் பயிற்சிகளை மேற்கொள்வேன். இந்த உடற்பயிற்சியால் அதிக தூரத்துக்கு சிக்சர் அடிப்பதற்கான ஆற்றலை அளிக்கிறது.

    இவ்வாறு ரிங்குசிங் கூறி உள்ளார்.

    Next Story
    ×