search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் 2024: பூரன், க்ரூனல் பாண்டியா மிரட்டல் - 199 ரன்களை குவித்தது லக்னோ
    X

    ஐபிஎல் 2024: பூரன், க்ரூனல் பாண்டியா மிரட்டல் - 199 ரன்களை குவித்தது லக்னோ

    • குவிண்டன் டி காக் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.
    • பஞ்சாப் அணிக்கு சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணிக்கு குவிண்டன் டி காக் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கே.எல். ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டி கார் 38 பந்துகளில் 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 9 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. கடைசியில் சிறப்பாக ஆடிய க்ரூனல் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்களை குவித்தார்.

    பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×