search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசுப்போட்டி- ஐ.பி.எல். கிரிக்கெட்டை நேரில் காண 25 இலவச டிக்கெட்
    X

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடத்திய பரிசுப்போட்டி- ஐ.பி.எல். கிரிக்கெட்டை நேரில் காண 25 இலவச டிக்கெட்

    • கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில ‘டாஸ்க்’குகளும் கொடுக்கப்பட்டன.
    • ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ‘ஜெர்சி’ வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    டி.என்.பி.எல். தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையுடன் வலம் வரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் ஐ.பி.எல். தொடருக்காக இலவச டிக்கெட் போட்டி களை நடத்தி வருகிறது.

    அதன்படி சென்னை சேப் பாக்கத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான 55- வது ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு, இலவச டிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதற்காக கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சமூக வலைதள பக்கங்களில் கேள்விகள் கேட்கப்பட்டன.

    கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு போட்டியாளர்களுக்கு சில 'டாஸ்க்'குகளும் கொடுக்கப்பட்டன. அவை அனைத்தையும் சிறப்பாக நிறைவு செய்த 12 வெற்றியாளர்களுக்கு மொத்தம் 25 ஐ.பி.எல். டிக்கெட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.

    மேலும், ஆறுதல் பரிசாக 100 பேருக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் 'ஜெர்சி' வழங்கப்பட்டு உள்ளது. இந்த போட்டியில் ஐ.பி.எல். டிக்கெட்டை வென்ற பிரஷாந்த் என்பவர், 'தனது நண்பர்கள் யாருமே இந்தப் போட்டியில் பரிசு கிடைக்கும் என நம்பவில்லை. இருப்பினும் நம்பிக்கையோடு தொடர்ந்து முயற்சித்ததால் இந்த வெற்றியை பெற்றதாக' கூறினார்.

    அதேபோல் சென் னையை சேர்ந்த ராகுல் என்பவர், '3 மணி நேரம் சேப்பாக்கத்தில் காத்தி ருந்தும் டிக்கெட் கிடைக்க வில்லை. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மூலமாக 2 டிக் கெட்டுகள் இலவசமாக கிடைத்துவிட்டது.' என்று கூறினார்.

    Next Story
    ×