search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்காளதேச பந்துவீச்சாளர்கள் பதிலடி: 145 ரன் சேசிங்கில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா
    X

    ஷுப்மான் கில் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் லித்தன் தாஸ், மெகிடி ஹசன்

    வங்காளதேச பந்துவீச்சாளர்கள் பதிலடி: 145 ரன் சேசிங்கில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியா

    • ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 26 ரன்களுடனும், உனத்கட் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.
    • வங்காளதேச பந்துவீச்சாளர் மெகிடி ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 227 ரன்களும், இந்தியா 314 ரன்களும் சேர்த்தன. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்தியாவின் வெற்றிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி தடுமாறியது. கேப்டன் கே.எல்.ராகுல் (2), ஷூப்மான் கில் (7), புஜாரா (6), விராட் கோலி (1), என முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் 26 ரன்களுடனும், உனத்கட் 3 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள். வங்காளதேசம் தரப்பில் மெகிடி ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். ஷாகிப் அல் ஹசன் ஒரு விக்கெட் எடுத்தார்.

    நாளை 4வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 100 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்திருப்பதால் நாளைய ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பவுண்டரியுடன் இன்றைய ஆட்டத்தை முடித்து வைத்த அக்சர் பட்டேல், நாளை தனது இன்னிங்ஸை மீண்டும் உத்வேகத்துடன் தொடங்குவார். அவரது ஆட்டம்தான் இன்று இந்தியாவை சற்று முன்னிலையில் வைத்துள்ளது. எனவே, நாளை அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர், அஷ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து களமிறங்க உள்ளனர். வங்காளதேச அணி இந்த இன்னிங்சில் சரியான பதிலடி கொடுத்திருப்பதால், நாளை அதே வேகத்தில் கடும் நெருக்கடி கொடுக்கும். எனவே, ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×