என் மலர்

    கிரிக்கெட்

    உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறும்- கில்கிறிஸ்ட் கணிப்பு
    X

    உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அரை இறுதிக்கு முன்னேறும்- கில்கிறிஸ்ட் கணிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
    • உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

    அகமதாபாத்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட், அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான் முன்னேறும் என்று நினைக்கிறேன். அதேபோல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    உலகக்கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதனால் ஆஸ்திரேலியா, கொஞ்சம் முழு வலிமை கொண்ட அணியை உலகக்கோப்பைக்கு பெறுவார்கள்.

    ஆடம் ஜம்பா உலக தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர். அவர் 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது முழு திறமையை காட்டி உள்ளார். தற்போது அவருக்கு 50 ஓவர் உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ஆஸ்திரேலிய அணி தனது அனுபவத்தை, எதிரணி பேட்டிங் வரிசைக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். பயமின்றி விளையாட வேண்டும். டேவிட் வார்னர், முன் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன். அவர் எப்போதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை கொண்டவர். அவர் நன்றாக விளையா டினால் எதிரணியினர் பயப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×