என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
X
2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
Byமாலை மலர்12 Oct 2022 10:05 AM GMT
- ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 5-வது விக்கெட்டுக்கு மலான் - மொய்ன் அலி ஜோடி 92 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 54 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து மலான் - மொய்ன் அலி ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய மொய்ன் அலி 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாம் கரண் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி ஓவர் வரை விளையாடிய மலான் 82 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டோய்னிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X