search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    வங்காளதேசம்- நியூசிலாந்து டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டம் முழுவதும் பாதிப்பு
    X

    வங்காளதேசம்- நியூசிலாந்து டெஸ்ட்: மழையால் 2-வது நாள் ஆட்டம் முழுவதும் பாதிப்பு

    • முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது.

    வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று மிர்புரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 66.2 ஒவரில் 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன் சேர்த்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 55 ரன் எடுத்து இருந்தது. இதனையடுத்து இன்று 2-வது நாள் தொடங்க இருந்தது. ஆனல் மழை பெய்ததால் ஆட்டம் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கவில்லை.

    தொடர்ந்து மழை பெய்து வருந்ததால் 2-வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசாமல் முடிவுக்கு வந்தது. நாளை 3-வது நாள் ஆட்டம் தொடங்கும்.

    Next Story
    ×