search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா
    X

    ஆஸ்திரேலியா வீரர்கள் 

    இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

    • முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 355 ரன்கள் குவித்தது.
    • ஆஸ்திரேலிய வீரர் டிராவிட் ஹெட் 152 ரன்கள் அடித்தார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மழை காரணமாக இந்த போட்டி 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் டிராவிட் ஹெட்152 ரன் குவித்தார். மற்றொரு வீரர் வார்னர் 106 ரன்கள் அடித்தார்.

    இதன் மூலம் 48 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 355 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஒல்லி ஸ்டோன் 4 விக்கெட் எடுத்தார். திருத்தப்பட்ட 364 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜெசன் ராய் 33 ரன் அடித்தார். வின்ஸ் 22 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னுடன் பெவிலியன் திரும்பினர்.

    இங்கிலாந்து 31.4 ஓவர்களில் 142 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஆடம் சம்பா 4 விக்கெட்களை வீழ்த்தினார். கம்மின்ஸ், அபோட் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

    Next Story
    ×