search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு
    X

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு

    • அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிட தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் பிரபு
    • கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

    சென்னை:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் தலைவர் பதவி தேர்வு செய்யப்படாமல் இருந்தது. துணைத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி இருந்து வந்தார்.

    இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் சிகாமணி, பிரபு ஆகியோர் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரபு தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வானார். இதேபோல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×