என் மலர்
கிரிக்கெட் (Cricket)

7+18...டோனி குறித்து விராட் கோலியின் நெகிழ்ச்சி பதிவு
- விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
- ஆசிய தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாடுகள் மோதவுள்ள ஆசிய கோப்பை தொடர் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எம்எஸ் டோனி குறித்து இன்ஸ்டாகிராமில் விராட் கோலியின் பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அந்த பதிவில்:- டோனியுடன் துணைக்கேப்டனாக பணியாற்றிய காலங்கள் தான் எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ஆகும். டோனியும் நானும் அமைத்த பார்ட்னர்ஷிப்கள் தான் என்றுமே எனக்கு மிக சிறப்பான ஒன்று. மேலும் 7 + 18 என இருவரின் ஜெர்ஸி நம்பர்களையும் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
டோனி மற்றும் விராட் கோலி அமைத்த பார்ட்னர்ஷிப்கள் அதிகப்படியான வெற்றிகளை தேடி தந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதனை நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.
ஆசிய கோப்பை நடைபெறும் சூழலில் விராட் கோலி டோனியுடன் மகிழ்ச்சியாக இருந்தேன் என ஏன் பதிவிட்டார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.






