என் மலர்
முன்னோட்டம்
ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொம்மை’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்
மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். பாடல்களை மதன் கார்க்கி எழுதி உள்ளார். ராஜூ சுந்தரம் மற்றும் பிருந்தா நடனம் அமைத்துள்ளனர்.
ரவி சீனிவாசன் இயக்கத்தில் முருகானந்தம், மேக்னா ஹெலன், பாக்யராஜ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் கபாலி டாக்கீஸ் படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படம் கபாலி டாக்கீஸ். இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், கதாநாயகன் படத்தின் இயக்குனராவார். ஏற்கனவே இவர் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" "மரகத நாணயம்" படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர்.
மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

கபாலி டாக்கீஸ் படக்குழு
ஜெயசீலன் - முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா - சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் - முரளி இரட்டையர் இசையையும் கவனிக்க, ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார். கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து ரவிசீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் கார்பன் படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விதார்த் நடிப்பில் 25 வது திரைப்படமாக உருவாகும் படத்திற்கு “கார்பன்” என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி, டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதையை சரியாக பிரதிபலிக்கும் பொருட்டே, இத்தலைப்பை வைத்ததாக இயக்குநர் ஶ்ரீனிவாசன் கூறியுள்ளார். படத்தில் விதார்த் கதாப்பாத்திரம், கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப்பிசகாமல் அடி பேப்பரில் பதிவது போல் இந்த சம்பவம் நடைபெறுவதால் படத்திற்கு ‘கார்பன்’ தலைப்பு பொருத்தமாக இருக்குமென இத்தலைப்பை வைத்ததாக கூறியுள்ளார் இயக்குநர்.

தன்யா, விதார்த்
சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கம் செய்ய, பிரவீன் கே.எல் எடிட்டிங் செய்துள்ளார். கனல் கண்ணன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளது. பென்ச்மார்க் பிலிம்ஸ் சார்பில் ஜோதி முருகன் மற்றும் ஸ்ரீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'கருங்காப்பியம்' படத்தின் முன்னோட்டம்.
'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். விஜய் படத்தைத் தொகுக்க, செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளை அசோக் அமைத்திருக்கிறார்.
பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ. பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், அபி ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் முன்னோட்டம்.
ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. அசோக் செல்வன், அபிஹாசன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அஞ்சு குரியன், ரித்விகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படத்தை விஷால் வெங்கட் இயக்குகிறார்.
மேலும் இப்படத்தில் நாசர், அனுபமா குமார், இளவரசு, கே.எஸ்.ரவிக்குமார், பானுப்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

அசோக் செல்வன், அபி ஹாசன்
மணிகண்டன் வசனம் எழுதி உள்ளார். பெலிக்ஸ்ராஜா, மனோஜ் குமார் ஆகியோர் கலை இயக்குனர்களாக பணியாற்ற உள்ளனர். தினேஷ் மற்றும் ஸ்ரீகிரிஷ் நடனம் அமைக்கின்றனர். பாடல்களை சினேகன் மற்றும் மிர்ச்சி விஜய் எழுதுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஐங்கரன்' படத்தின் முன்னோட்டம்.
காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். காளி வெங்கட், சித்தார்த்தா சங்கர், ரவி வெங்கட்ராமன், ஹரீஷ் பேரடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

மஹிமா நம்பியார், ஜி.வி.பிரகாஷ் குமார்
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.எம்.ராஜா முகமது படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை இயக்குனராக ஜி.துரைராஜ் பணியாற்றி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் பாடல்களை மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக் ஆகியோர் எழுதி உள்ளனர். நடன இயக்குனராக ராஜு சுந்தரம், ஷோபி பணியாற்றி உள்ளனர்.
செ.ஹரி உத்ரா இயக்கத்தில் புதுமுகம் சரத், ஐரா நடிப்பில் உருவாகி வரும் ‘நம்பர் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ படத்தின் முன்னோட்டம்.
தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா ஆகிய படங்களை இயக்கியவர், செ.ஹரி உத்ரா. இவர், ‘நம்பர் 6, வாத்தியார் கால் பந்தாட்ட குழு’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. விளையாட்டில் எவ்வாறு அரசியல் புகுத்தப்படுகிறது? என்பதே திரைக்கதை. 90 சதவீத சம்பவங்கள் இரவில் நடைபெறுகின்றன.

வாத்தியார் கால்பந்தாட்ட குழு படக்குழுவினர்
கதாநாயகன் புதுமுகம் சரத். கதாநாயகி ஐரா. சேவார தீனா, ப்ரீத்தி சங்கர், உசா, செ.ஹரி உத்ரா ஆகியோர் தயாரிக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நிஜ கால்பந்து வீரர்கள் சிலர், படத்தில் நடிக்கிறார்கள். பெரும்பகுதி காட்சிகள் மதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன.
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள டைரி படத்தின் முன்னோட்டம்.
பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் டைரி. அருள்நிதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர், டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

அருள்நிதி
உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து டைரி படம் உருவாகியுள்ளது. யோகான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜன், சினாமிகா நடிப்பில் உருவாக உள்ள ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் கன்னடம் மலையாளம் மராட்டி என பன்மொழி படங்களுக்கு இசையமைத்து, உலகத் திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருக்கும் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் புதிய படம் "நினைவெல்லாம் நீயடா".
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் இந்த படத்தை, சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க இருக்கிறார். மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார்.

பிரஜன்
முக்கிய வேடத்தில் பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா நடிக்கிறார். மேலும் மனோபாலா, காளி வெங்கட், மயில்சாமி, செல்முருகன், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை தளபதி தினேஷ் அமைக்கிறார். பாடல்களை பழநிபாரதி சினேகன் ஆகியோர் எழுதுகின்றனர். நடன கட்சிகளை பிருந்தா, தீனா அமைக்கின்றனர்.
ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் டேய் தகப்பா படத்தின் முன்னோட்டம்.
பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் மகன் சஞ்சய், ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக சி. வி.விக்ரம் சுர்யவர்மா தயாரிப்பில் கௌசிக் ஶ்ரீபுஹர் இயக்கத்தில் உருவாகும் "டேய் தகப்பா" எனும் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
விருது பெற்ற குறும்படங்களை இயக்கிய கௌசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். C.V. விக்ரம் சுர்யவர்மா தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கு இசை ஜான் ராபின்ஸ், ஒளிப்பதிவு - S.J.சுபாஷ். நடன இயக்கத்தை பாபா பாஸ்கர் மேற்கொள்கிறார்.
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தின் முன்னோட்டம்.
மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் `கள்ளபார்ட்'. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாராகிறது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகியாக ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆனந்த்ராஜ் நடிக்கிறார்.

அரவிந்த்சாமி
என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் வசனங்களை ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். மேலும் அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இளையராஜா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேல் இயக்கத்தில் விக்டர், இலக்கியா நடிப்பில் உருவாகி வரும் ‘மரபு’ படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குனர் விக்டர் இம்மானுவேலின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மரபு’. விக்டர் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இலக்கியா நடிக்கிறார். மேலும் ஆனந்த் பாபு வில்லனாக நடித்துள்ளார். சவுந்தர்யன் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக மகேஷும், ஸ்டண்ட் இயக்குனராக ஜாகுவார் தங்கமும் பணியாற்றுகின்றனர்.
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும், உலகில் பல்வேறு வகையான பாரம்பரிய பெருமைகளை கொண்டுள்ளன. இந்த பாரம்பரிய பெருமைகள் அல்லது பழக்கவழக்கம், நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து அல்லது தலைமுறை தலைமுறையாக வந்த சிறப்பு அல்லது வழிவழியாகச் சந்ததிகளிடம் தொடரும் ஒன்று என்று சுருக்கமாக கூறலாம்.

இலக்கியா, விக்டர்
அதேவேளை மரபு என்ற சொல்லும் பலரால் பாவிக்கப் படுகின்றன, அறிவுடையோர் எந்தப் பொருளை அல்லது அவர்கள் மேற்கொண்ட செயல்களை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ, அதே முறைப்படி வழங்குதல் அல்லது பின்பற்றுதல் மரபாகும். ஆனால் தற்போது தனது மரபுசார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம் மரபு”. இவ்வாறு அவர் கூறினார்.






