என் மலர்
தரவரிசை
ரவிதேஜா-நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் ‘ஆஞ்சநேயலு’ பெயரில் வெளிவந்த படம் தமிழில் ‘அதிரடி அர்ஜுன்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இப்படம் எப்படி உள்ளது என்பதை கீழே பார்ப்போம்..
கிராமத்தில் பள்ளி தலைமையாசிரியராக இருக்கும் நாசரின் மகன் ரவிதேஜா. படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் கிராமத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வம்பிழுத்து வருகிறார் ரவி தேஜா. இதனால் அவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் அவரது அம்மா. சென்னையில் வேலை தேடி அலையும் ரவிதேஜாவுக்கு சிறிய டிவி கம்பெனியில் வேலை கிடைக்கிறது.
சென்னையில் ஒருநாள் நயன்தாராவை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ரவிதேஜா, அன்றுமுதல் நயன்தாராவை காதலிக்க தொடங்குகிறார். பல்வேறு சந்திப்புகளுக்கு பிறகு ரவிதேஜாவின் நடவடிக்கைகள் பிடித்துப்போகவே நயன்தாராவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், உள்துறை மந்திரியான காதல் தண்டபாணியின் ஊழல்களை ஒருவர் பட்டியலிட்டு போலீசில் ஒப்படைக்க பார்க்கிறார். இதை அறியும் தண்டபாணி, எம்.எல்.ஏ. மூலமாக அவனை தீர்த்துக்கட்ட லோக்கல் ரவுடியான சோனு சூத்தை நியமிக்கிறார். சோனு சூத், அவனை கொலை செய்ய முயற்சி செய்யும்போது, மற்றொரு லோக்கல் ரவுடியான கோட்டா சீனிவாசராவ் உள்ளே புகுந்து கலைத்துவிடுகிறார். இதனால், இரண்டு பேர் கூட்டத்துக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
மறுமுனையில், ரவிதேஜா பணிபுரிந்துவரும் டிவி கம்பெனி ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதே கம்பெனியில் வேலை செய்துவரும் ஒருவர் மக்களுக்கு பயன்தரும்படியான ஏதாவது ஒரு செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரகாஷ் ராஜுடன் நேரடி பேட்டி ஒன்றை எடுக்கின்றனர். ரவிதேஜாவின் முன்னிலையில் இது நடக்கிறது.
அந்த பேட்டியில் தான் ஓய்வு பெறுவதற்கு காரணம் சோனு சூத்தின் ஆட்களின் அட்டகாசம்தான் என்பதை போட்டு உடைக்கிறார் பிரகாஷ்ராஜ். இதை பார்த்துக்கொண்டிருக்கும் சோனு சூத், பிரகாஷ் ராஜை அடித்து உதைக்க ஆட்கள் அனுப்புகிறார். அவர்களிடமிருந்து பிரகாஷ்ராஜை காப்பாற்றுகிறார் ரவிதேஜா.
இதனால், சோனுசூத்தின் ஆட்கள் ரவிதேஜாவை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். இதிலிருந்து ரவிதேஜா தப்பித்தாரா? சோனுசூத் மற்றும் உள்துறை மந்திரியின் தில்லுமுல்லு வேலைகளுக்கு சரியான தண்டனை கிடைத்ததா? என்பதுதான் மீதிக்கதை.
ரவிதேஜா வழக்கம்போல் இந்த படத்திலும் குழந்தைத்தனமான நடிப்பு, ஆக்ஷன், என அனைத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். நயன்தாராவுடனான காதல் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது.
நயன்தாரா இப்படத்தில் நாயகனை காதலிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறார். நேர்மையான அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். பேட்டியளிக்கும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தத்துடன் நடித்திருக்கிறார். சோனு சூத் வில்லனாக மிரட்டுகிறார். நாசர் பொறுப்பான அப்பாவாக மனதில் பதிகிறார். மற்றொரு தாதாவாக வரும் கோட்டா சீனிவாசராவும் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார்.
தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் இது. தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற பெயரில் வெளிவந்த இப்படம் தமிழில் அதிரடி அர்ஜுன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வந்துள்ளது. தெலுங்கு ரசிகர்களை இப்படம் பெரிதளவில் கவர்ந்தாலும், சில இடங்களில் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகள் இல்லாதது படத்திற்கு குறைவே.
தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. ரவீந்திரபாபுவின் ஒளிப்பதிவு கதைக்கேற்றவாறு சிறப்பாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அதிரடி அர்ஜுன்’ ஆட்டம் காட்டவில்லை.
சென்னையில் ஒருநாள் நயன்தாராவை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ரவிதேஜா, அன்றுமுதல் நயன்தாராவை காதலிக்க தொடங்குகிறார். பல்வேறு சந்திப்புகளுக்கு பிறகு ரவிதேஜாவின் நடவடிக்கைகள் பிடித்துப்போகவே நயன்தாராவும் அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
இந்நிலையில், உள்துறை மந்திரியான காதல் தண்டபாணியின் ஊழல்களை ஒருவர் பட்டியலிட்டு போலீசில் ஒப்படைக்க பார்க்கிறார். இதை அறியும் தண்டபாணி, எம்.எல்.ஏ. மூலமாக அவனை தீர்த்துக்கட்ட லோக்கல் ரவுடியான சோனு சூத்தை நியமிக்கிறார். சோனு சூத், அவனை கொலை செய்ய முயற்சி செய்யும்போது, மற்றொரு லோக்கல் ரவுடியான கோட்டா சீனிவாசராவ் உள்ளே புகுந்து கலைத்துவிடுகிறார். இதனால், இரண்டு பேர் கூட்டத்துக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.
மறுமுனையில், ரவிதேஜா பணிபுரிந்துவரும் டிவி கம்பெனி ஒன்றுக்கும் உதவாத நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அதே கம்பெனியில் வேலை செய்துவரும் ஒருவர் மக்களுக்கு பயன்தரும்படியான ஏதாவது ஒரு செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரகாஷ் ராஜுடன் நேரடி பேட்டி ஒன்றை எடுக்கின்றனர். ரவிதேஜாவின் முன்னிலையில் இது நடக்கிறது.
அந்த பேட்டியில் தான் ஓய்வு பெறுவதற்கு காரணம் சோனு சூத்தின் ஆட்களின் அட்டகாசம்தான் என்பதை போட்டு உடைக்கிறார் பிரகாஷ்ராஜ். இதை பார்த்துக்கொண்டிருக்கும் சோனு சூத், பிரகாஷ் ராஜை அடித்து உதைக்க ஆட்கள் அனுப்புகிறார். அவர்களிடமிருந்து பிரகாஷ்ராஜை காப்பாற்றுகிறார் ரவிதேஜா.
இதனால், சோனுசூத்தின் ஆட்கள் ரவிதேஜாவை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்கள். இதிலிருந்து ரவிதேஜா தப்பித்தாரா? சோனுசூத் மற்றும் உள்துறை மந்திரியின் தில்லுமுல்லு வேலைகளுக்கு சரியான தண்டனை கிடைத்ததா? என்பதுதான் மீதிக்கதை.
ரவிதேஜா வழக்கம்போல் இந்த படத்திலும் குழந்தைத்தனமான நடிப்பு, ஆக்ஷன், என அனைத்திலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். நயன்தாராவுடனான காதல் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. அதேபோல், ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது.
நயன்தாரா இப்படத்தில் நாயகனை காதலிக்க மட்டுமே பயன்பட்டிருக்கிறார். நேர்மையான அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். பேட்டியளிக்கும் காட்சிகளில் எல்லாம் எதார்த்தத்துடன் நடித்திருக்கிறார். சோனு சூத் வில்லனாக மிரட்டுகிறார். நாசர் பொறுப்பான அப்பாவாக மனதில் பதிகிறார். மற்றொரு தாதாவாக வரும் கோட்டா சீனிவாசராவும் தனக்கே உரித்தான ஸ்டைலில் நடித்து அசத்தியிருக்கிறார்.
தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கிய பரசுராம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் இது. தெலுங்கில் ஆஞ்சநேயலு என்ற பெயரில் வெளிவந்த இப்படம் தமிழில் அதிரடி அர்ஜுன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வந்துள்ளது. தெலுங்கு ரசிகர்களை இப்படம் பெரிதளவில் கவர்ந்தாலும், சில இடங்களில் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் காட்சிகள் இல்லாதது படத்திற்கு குறைவே.
தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. ரவீந்திரபாபுவின் ஒளிப்பதிவு கதைக்கேற்றவாறு சிறப்பாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அதிரடி அர்ஜுன்’ ஆட்டம் காட்டவில்லை.
ரத்தன் மௌலி, ஸ்ரவியா, சுஜாகுமார் ஆகியோர் நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள ‘வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
தன்னுடைய பொருளை யாரும் தொடக்கூடாது என்ற பிடிவாத குணம், மற்றும் தைரியம், பாசத்துடன் வளர்ந்து வருகிறார் நாயகி ஸ்ரவியா. இவளது அப்பா சித்ரா லட்சுமணன் மகள் எது கேட்டாலும் அது செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரவியா பெயரில் ஒரு நிலத்தை வாங்கி, அதில் திருமண மண்டபம் கட்ட சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.
இதற்கிடையில், ஸ்ரவியா, ஒருவனை காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவிக்கிறாள். அவர்களும் மகளின் விருப்பத்திற்கேற்ப அவள் காதலித்தவனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். திருமணம் மண்டபம் கட்டும் பணி நடந்துகொண்டிருப்பதால், மண்டபம் கட்டி முடிந்ததும், தனது மகள் திருமணத்தை முதன்முதலாக அந்த மண்டபத்தில் நடத்த சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.
மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்நிலையில், ஸ்ரவியாவின் தாய்மாமனுக்கு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், வேறொருவனுடன் அவளுக்கு திருமணம் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதவன், திருமணத்துக்கு முந்தைய நாள் மண்டபத்திற்கு தீவைத்து கொளுத்தி விடுகிறான்.
இந்த சம்பவத்தில் ஸ்ரவியா உள்ளிட்ட 13 பேர் அந்த மண்டபத்திலேயே இறந்துபோகிறார்கள். மண்டபமும் எரிந்து நாசமாகிறது. இதன்பின்னர் இறந்துபோன 13 பேரும் அந்த மண்படத்திற்குள்ளேயே ஆவியாக சுற்றுகிறார்கள். அங்கிருந்து அந்த ஆவிகளை விரட்டி, மண்டபத்தை புதுப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை.
கடைசியாக மந்திரவாதி ஒருவர் ஒரு இளம் தம்பதிகளுக்கு அந்த மண்டபத்தில் திருமணம் செய்துவைத்தால் அந்த ஆவிகள் அனைத்தும் அங்கிருந்து ஓடிவிடும் என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி, ஸ்ரவியாவின் அண்ணனான ராம்ஜி, நாயகன் ரத்தன் மௌலி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களை மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு நியமிக்கிறார்.
அங்கு சென்று அவர்கள் மண்டபத்தை புதுப்பித்து, திருமணத்தை நடத்தி ஆவிகளை விரட்டினார்களா? அல்லது அந்த ஆவிகள் இவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சினையை கொடுத்தது? என்பதே மீதிக்கதை.
இயக்குனர் புகழ்மணியின் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘13ம் பக்கம் பார்க்க’ படத்தின் ஹீரோ ரத்தன் மௌலிதான் இந்த படத்திற்கும் ஹீரோ. ஹீரோயிசம் இல்லாத ஒரு ஹீரோவாக இப்படத்தில் பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளிலும், ஆவிகளுக்கும் பயந்து நடுங்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகி ஸ்ரவியாவுக்கு படத்தில் சிறப்பான கதாபாத்திரம். பிடிவாத குணம், துணிச்சலான பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆவியாக வரும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் சுஜாகுமார் இடைவேளைக்கு பிறகுதான் கதைக்குள் வருகிறார். கடைசி கட்டத்தில் இவருடைய நடிப்பும் மெச்சும்படியாக உள்ளது.
சிவாஜி ரசிகராக வரும் லிவிங்ஸ்டன், அவர் ஸ்டைலில் பேசி நடிக்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், வையாபுரி, மனோபாலா என காமெடிக்கு நிறைய பேர் இருந்தாலும் பெரியதாக காமெடி ஒன்றும் இல்லை.
ஏற்கெனவே ஒரு பேய் படத்தை இயக்கி அனுபவமடைந்துள்ள இயக்குனர் புகழ்மணி மீண்டும் ஒரு பேய் படத்தை கொடுத்திருக்கிறார். தனது முந்தைய படத்திற்கும் இதற்கும் பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறார். நிறைய பேய் படங்களை பார்த்து அனுபவப்பட்டுவிட்ட நமக்கு, இந்த படத்தில் வரும் பேய்கள் பெரிதாக அச்சுறுத்தவில்லை. அதேபோல், காமெடியும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
தாஜ்நூரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி’ திகில் குறைவு.
இதற்கிடையில், ஸ்ரவியா, ஒருவனை காதலிப்பதாகவும் அவனையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தனது பெற்றோரிடம் தெரிவிக்கிறாள். அவர்களும் மகளின் விருப்பத்திற்கேற்ப அவள் காதலித்தவனையே திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். திருமணம் மண்டபம் கட்டும் பணி நடந்துகொண்டிருப்பதால், மண்டபம் கட்டி முடிந்ததும், தனது மகள் திருமணத்தை முதன்முதலாக அந்த மண்டபத்தில் நடத்த சித்ரா லட்சுமணன் முடிவு செய்கிறார்.
மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது. இந்நிலையில், ஸ்ரவியாவின் தாய்மாமனுக்கு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. ஆனால், வேறொருவனுடன் அவளுக்கு திருமணம் நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியாதவன், திருமணத்துக்கு முந்தைய நாள் மண்டபத்திற்கு தீவைத்து கொளுத்தி விடுகிறான்.
இந்த சம்பவத்தில் ஸ்ரவியா உள்ளிட்ட 13 பேர் அந்த மண்டபத்திலேயே இறந்துபோகிறார்கள். மண்டபமும் எரிந்து நாசமாகிறது. இதன்பின்னர் இறந்துபோன 13 பேரும் அந்த மண்படத்திற்குள்ளேயே ஆவியாக சுற்றுகிறார்கள். அங்கிருந்து அந்த ஆவிகளை விரட்டி, மண்டபத்தை புதுப்பிக்க பல்வேறு முயற்சிகள் செய்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை.
கடைசியாக மந்திரவாதி ஒருவர் ஒரு இளம் தம்பதிகளுக்கு அந்த மண்டபத்தில் திருமணம் செய்துவைத்தால் அந்த ஆவிகள் அனைத்தும் அங்கிருந்து ஓடிவிடும் என்று ஆலோசனை கூறுகிறார். அதன்படி, ஸ்ரவியாவின் அண்ணனான ராம்ஜி, நாயகன் ரத்தன் மௌலி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ் உள்ளிட்டவர்களை மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு நியமிக்கிறார்.
அங்கு சென்று அவர்கள் மண்டபத்தை புதுப்பித்து, திருமணத்தை நடத்தி ஆவிகளை விரட்டினார்களா? அல்லது அந்த ஆவிகள் இவர்களுக்கு எந்தமாதிரியான பிரச்சினையை கொடுத்தது? என்பதே மீதிக்கதை.
இயக்குனர் புகழ்மணியின் இயக்கத்தில் ஏற்கெனவே வெளிவந்த ‘13ம் பக்கம் பார்க்க’ படத்தின் ஹீரோ ரத்தன் மௌலிதான் இந்த படத்திற்கும் ஹீரோ. ஹீரோயிசம் இல்லாத ஒரு ஹீரோவாக இப்படத்தில் பளிச்சிடுகிறார். காதல் காட்சிகளிலும், ஆவிகளுக்கும் பயந்து நடுங்கும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கதாநாயகி ஸ்ரவியாவுக்கு படத்தில் சிறப்பான கதாபாத்திரம். பிடிவாத குணம், துணிச்சலான பெண் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆவியாக வரும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் சுஜாகுமார் இடைவேளைக்கு பிறகுதான் கதைக்குள் வருகிறார். கடைசி கட்டத்தில் இவருடைய நடிப்பும் மெச்சும்படியாக உள்ளது.
சிவாஜி ரசிகராக வரும் லிவிங்ஸ்டன், அவர் ஸ்டைலில் பேசி நடிக்கும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. மற்றபடி, எம்.எஸ்.பாஸ்கர், சாம்ஸ், வையாபுரி, மனோபாலா என காமெடிக்கு நிறைய பேர் இருந்தாலும் பெரியதாக காமெடி ஒன்றும் இல்லை.
ஏற்கெனவே ஒரு பேய் படத்தை இயக்கி அனுபவமடைந்துள்ள இயக்குனர் புகழ்மணி மீண்டும் ஒரு பேய் படத்தை கொடுத்திருக்கிறார். தனது முந்தைய படத்திற்கும் இதற்கும் பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கிறார். நிறைய பேய் படங்களை பார்த்து அனுபவப்பட்டுவிட்ட நமக்கு, இந்த படத்தில் வரும் பேய்கள் பெரிதாக அச்சுறுத்தவில்லை. அதேபோல், காமெடியும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
தாஜ்நூரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக பொருந்தியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘வெள்ளிக்கிழமை 13ஆம் தேதி’ திகில் குறைவு.
ரவிதேஜா-நயன்தாரா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ’துபாய் சீனு’ படம் தமிழில் ‘துபாய் ராணி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
துபாய் செல்வதற்காக மும்பை வரை சென்று ஏமாற்றப்பட்ட நிலையில், மும்பையில் சிலகாலம் வாழ்ந்துவிட்டு தனது சொந்த ஊரான ஐதராபாத்துக்கே திரும்பி வருகிறார் நாயகன் ரவிதேஜா. மும்பையில் தான் காதலித்த நயன்தாரா ஐதராபாத்தில் இருப்பதை அறிந்து, அவளை தேடி அலைகிறார். ஒருகட்டத்தில் ரேடியோ ஜாக்கியாக இருக்கும் நயன்தாராவை கண்டுபிடித்து, தனது காதலை உறுதிபடுத்துகிறார் ரவிதேஜா.
இதற்கிடையில், ஐதராபாத்தின் மிகப்பெரிய தாதாவான ஜின்னா பாய், போலீசுக்கு பயந்து மும்பையில் தலைமறைவாக இருக்கிறார். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட அவரிடம் வேலைபார்த்த மக்கா நாயக், தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஐதராபாத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார். இது ஜின்னா பாயின் ஆட்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இரண்டு கோஷ்டிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.
இந்நிலையில், தனக்கு எதிராக செயல்பட்டு வரும் மக்கா நாயக்கை தீர்த்துக்கட்ட ஜின்னா பாய் முடிவெடுக்கிறார். இதற்காக மும்பையிலிருந்து ஐதராபாத் திரும்புகிறார். ஜின்னா பாய் ஐதராபாத் திரும்புவதை பற்றி அறியும் போலீசார் அவரை எப்படியாவது கைது செய்யவேண்டும் என தீவிரமாக இருக்கின்றனர்.
அவர்களையும் மீறி ஐதராபாத்திற்குள் நுழையும் ஜின்னா பாய், மக்கா நாயக்கின் தம்பியை கடத்தி வைத்துக் கொண்டு தன் பெயரை சொல்லி சம்பாதித்த பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி எச்சரிக்கிறார். மக்கா நாயக்கும் தனது தம்பியை மீட்பதற்காக அந்த பணத்தை ஒருவனிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால், அவன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு இடத்தில் வைத்துவிட்டு, ஜின்னா பாயின் அழைப்புக்காக காத்திருக்கிறான். இதற்குள், ஜின்னா பாய், மக்கா நாயக்கையும், அவனது தம்பியையும் கொன்றுவிடுகிறார். இதையெல்லாம் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
இதனால், பணம் எடுத்துச் சென்றவனுக்கு ஜின்னா பாய் போன் செய்து, போலீசுக்கு சந்தேகம் வராத ஆள் மூலமாக அந்த பணத்தை கொடுத்துவிடுமாறு கூறுகிறார். அதன்படி, நாயகன் ரவிதேஜா அந்த பணத்தை ஜின்னா பாயிடம் ஒப்படைக்க புறப்பட்டு செல்கிறார். ஜின்னா பாயிடம் சென்று பணத்தை ஒப்படைக்கும் ரவிதேஜா, திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்குள்ள அனைவரையும் சுட்டுத் தள்ளுகிறார். இதில் அனைவரும் இறந்துபோக ஜின்னா பாய் மட்டும் கையில் குண்டு காயத்துடன் தப்பிக்கிறார்.
ரவிதேஜா, ஜின்னா பாயின் ஆட்களை சுட்டுக் கொல்ல காரணம் என்ன? ஜின்னா பாயுக்கும், ரவிதேஜாவுக்கும் அப்படி என்ன பகை இருந்தது? என்பதை விளக்கிச் சொல்கிறது பின்பாதி.
தெலுங்கில், துபாய் சீனு என்ற பெயரில் வெளிவந்த படமே ‘துபாய் ராணி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது. நாயகன், ரவிதேஜா இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தில் இவருக்கென்று நிறைய மாஸ் காட்சிகளும் இருக்கின்றன. வசனங்களும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்படி வைத்திருப்பது சிறப்பு.
நயன்தாராவும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரம்மானந்தம் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் சாயாஜி ஷிண்டே தனக்கே உரித்த ஸ்டைலில் கலக்குகிறார்.
காதல், செண்டிமெண்ட், ஆக்ஷனுடன் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி காரசாரமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்
இயக்குனர் ஸ்ரீனு வைத்லா. ஆனால், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இது தமிழ் ரசிகர்களை கவருமா? என்பதுதான் கேள்வி.
மணிசர்மாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போடவைக்கின்றன. பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது. பரணி கே.தரணின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘துபாய் ராணி’ சபாஷ் ராணி
இதற்கிடையில், ஐதராபாத்தின் மிகப்பெரிய தாதாவான ஜின்னா பாய், போலீசுக்கு பயந்து மும்பையில் தலைமறைவாக இருக்கிறார். இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட அவரிடம் வேலைபார்த்த மக்கா நாயக், தனக்கென்று ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு ஐதராபாத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறார். இது ஜின்னா பாயின் ஆட்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதனால், இரண்டு கோஷ்டிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.
இந்நிலையில், தனக்கு எதிராக செயல்பட்டு வரும் மக்கா நாயக்கை தீர்த்துக்கட்ட ஜின்னா பாய் முடிவெடுக்கிறார். இதற்காக மும்பையிலிருந்து ஐதராபாத் திரும்புகிறார். ஜின்னா பாய் ஐதராபாத் திரும்புவதை பற்றி அறியும் போலீசார் அவரை எப்படியாவது கைது செய்யவேண்டும் என தீவிரமாக இருக்கின்றனர்.
அவர்களையும் மீறி ஐதராபாத்திற்குள் நுழையும் ஜின்னா பாய், மக்கா நாயக்கின் தம்பியை கடத்தி வைத்துக் கொண்டு தன் பெயரை சொல்லி சம்பாதித்த பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும்படி எச்சரிக்கிறார். மக்கா நாயக்கும் தனது தம்பியை மீட்பதற்காக அந்த பணத்தை ஒருவனிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால், அவன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு இடத்தில் வைத்துவிட்டு, ஜின்னா பாயின் அழைப்புக்காக காத்திருக்கிறான். இதற்குள், ஜின்னா பாய், மக்கா நாயக்கையும், அவனது தம்பியையும் கொன்றுவிடுகிறார். இதையெல்லாம் போலீஸ் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.
இதனால், பணம் எடுத்துச் சென்றவனுக்கு ஜின்னா பாய் போன் செய்து, போலீசுக்கு சந்தேகம் வராத ஆள் மூலமாக அந்த பணத்தை கொடுத்துவிடுமாறு கூறுகிறார். அதன்படி, நாயகன் ரவிதேஜா அந்த பணத்தை ஜின்னா பாயிடம் ஒப்படைக்க புறப்பட்டு செல்கிறார். ஜின்னா பாயிடம் சென்று பணத்தை ஒப்படைக்கும் ரவிதேஜா, திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்குள்ள அனைவரையும் சுட்டுத் தள்ளுகிறார். இதில் அனைவரும் இறந்துபோக ஜின்னா பாய் மட்டும் கையில் குண்டு காயத்துடன் தப்பிக்கிறார்.
ரவிதேஜா, ஜின்னா பாயின் ஆட்களை சுட்டுக் கொல்ல காரணம் என்ன? ஜின்னா பாயுக்கும், ரவிதேஜாவுக்கும் அப்படி என்ன பகை இருந்தது? என்பதை விளக்கிச் சொல்கிறது பின்பாதி.
தெலுங்கில், துபாய் சீனு என்ற பெயரில் வெளிவந்த படமே ‘துபாய் ராணி’ என்ற பெயரில் தமிழில் வெளிவந்திருக்கிறது. நாயகன், ரவிதேஜா இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட், ஆக்ஷன் என எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தில் இவருக்கென்று நிறைய மாஸ் காட்சிகளும் இருக்கின்றன. வசனங்களும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும்படி வைத்திருப்பது சிறப்பு.
நயன்தாராவும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். பிரம்மானந்தம் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் சாயாஜி ஷிண்டே தனக்கே உரித்த ஸ்டைலில் கலக்குகிறார்.
காதல், செண்டிமெண்ட், ஆக்ஷனுடன் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி காரசாரமான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்
இயக்குனர் ஸ்ரீனு வைத்லா. ஆனால், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இது தமிழ் ரசிகர்களை கவருமா? என்பதுதான் கேள்வி.
மணிசர்மாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போடவைக்கின்றன. பின்னணி இசையும் கதையின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறது. பரணி கே.தரணின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘துபாய் ராணி’ சபாஷ் ராணி
ரஜினி நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் அவரிடம் ஜான் விஜய், 25 வருடத்தில் மலேசியாவில் நடந்த மாற்றங்களை அவரிடம் விளக்கிக் கொண்டு வருகிறார்.
அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டதாக அவனின் பாஸிடம் தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்.
அங்கு ‘கபாலி’ பெயரில் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கூடம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூடத்துக்கு ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரஜினி, தனது பெயரில் நல்லது நடப்பது நினைத்து பூரித்து போகிறார். அப்போது மாணவர்களிடையே நடக்கும் உரையாடும் நிகழ்ச்சியில் தான் கேங்ஸ்டராக எப்படி மாறினேன் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன்பிறகு பிளாஸ்பேக் விரிகிறது.
பிளாஸ்பேக் காட்சியில், ரஜினி ஜெயிலுக்கு போகும்போது, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, குண்டு காயத்துடன் கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். இதனால், தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவி உயிருடன் இருக்கிறாளா? தனது குழந்தை என்னவாயிற்று? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். இந்நிலையில், கிஷோரின் கும்பலில் போதை மருந்து சப்ளை செய்துவரும் மைம் கோபியை ரஜினி கொன்றுவிடுகிறார். இதையடுத்து, கிஷோர், இனி ரஜினியால் தனது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்கும் என்றுகூறி அவரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்.
இதன்பின்னர், ரஜினி தனது மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்தாரா? கிஷோரின் அராஜகத்தை அடித்து ஒடுக்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் மிகப்பெரிய பலமே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். வழக்கமான மாஸ் காட்சிகள் மட்டுமில்லாது சென்டிமெண்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிறைச்சாலையில் வெளிவரும்போதே மாஸ் காட்டியிருக்கிறார். இவர் படத்தில் பேசும் முதல் வசனமே ‘மகிழ்ச்சி’ என்று சொல்லும்போது நமக்கே மகிழ்ச்சி வருகிறது.
அந்த மாஸ் காட்சியை தொடர்ந்து, லிங்கேஷை அடித்து துவம்சம் செய்து, டீசரில் வரும் டயலாக்கை பேசிவிட்டு, கடைசியில் நக்கலாக ‘கோழிக்கறி’ என்று சொல்லிவிட்டு செல்லும் காட்சிகளில் எல்லாம் மாஸ் காட்டுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் இன்னமும் தன்னுடைய அதே ஸ்டைலில் நடித்து கலக்கியிருக்கிறார். வயதானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம்தான் நமக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல், பள்ளி மாணவர்களிடம் தான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.
ரஜினியின் நண்பராக கூடவே வரும் ஜான் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவருக்கான வசனங்கள் எல்லாம் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அதை எதார்த்தமாக செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார். தன்ஷிகாவுக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். ஸ்டைலான பெண்ணாகவும் அழகாக இருக்கிறார். இடைவேளைக்கு பிறகு இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும். பிளாஸ் பேக் காட்சியில் வரும் நாசரின் நடிப்பும் அற்புதம்.
கிஷோர் மிரட்டலான வில்லனாக அசத்துகிறார். கலர் கலரான உடையில் ஹைடெக் வில்லனாக தெரிந்தாலும், லோக்கல் ரவுடிபோல்தான் நமக்கு தெரிகிறார். லிங்கேஷ், ரஜினிக்கு இணையாக அவருக்கு எதிரில் அமர்ந்து பேசும் காட்சிகளில் கெத்து காட்டுகிறார். மெட்ராஸ் படத்தில் பார்த்த கலையரசன், இப்படத்தில் அப்படியே நேர் எதிராக வந்து நிற்கிறார். குழந்தைதனமான முகத்தில் எதார்த்தம் கலந்து நடித்திருக்கிறார். தினேஷ், ரஜினிக்கு பாடிகார்டாக வந்திருக்கிறார். படம் முழுக்க ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டி போல் படத்தில் ரஜினி செய்யும் கட்டளைகளை செய்துவருகிறார். இருந்தாலும், இறுதிக்காட்சிகளில் தனது நடிப்பால் ரசிகர்களை செண்டிமென்டால் கவர்கிறார்.
சூப்பர் ஸ்டாரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான கெட்டப்பிலும், ரஜினியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 25 வருடத்திற்கு பிறகு தனது கணவனை பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.
படத்தில் 43 கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, தோற்றத்திலேயே மிரட்டுகிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர் ரஜினியை எதிர்த்து பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.
இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிக்கு ஏற்ற கதையை உருவாக்கி, அதை தனது பாணியில் உருவாக்கியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே எதார்த்தமான வசனங்கள்தான். ஆங்காங்கே, ரஜினி பேசும் வசனங்கள், பஞ்ச் டயலாக்காக இல்லாவிட்டாலும், ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளது. ஆனால், ஒருசில காட்சிகளால் படத்திற்கு தொய்வு இருக்கிறது. ரஞ்சித் இயக்கியிருந்த இரண்டு படங்களும் ரஞ்சித் பெயரைச் சொல்லும்படமாக இருந்தது. ஆனால், ‘கபாலி’ முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டுமே குறிப்பிடும். அந்தளவுக்கு ரஞ்சித்தின் பங்கு இதில் குறைவுதான் என்று சொல்லவேண்டும்.
சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாயிருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்த பாடல்களுக்கு ஜீவன் பிறந்திருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது. முரளியின் ஒளிப்பதிவு மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறது. செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக தெரிகிறது. ரஜினிக்கு அமைத்த மாஸ் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா அழகாக வேலை செய்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கபாலி’ ரசிகர்களுக்கு மகிழ்ச்சி
அப்போது, 43 கேங்க் என்ற கேங்ஸ்டர் கும்பல் மாணவர்களை போதை மருந்துக்கு அடிமையாக்கி இருப்பதையும், அதுமட்டுமில்லாமல், கொலை, கடத்தல் வேலைகளை செய்துவருவதாகவும் ரஜினியிடம் கூறுகிறார். முதலாவதாக 43-வது கேங்கை சேர்ந்த லிங்கேஷை சந்திக்கிறார்கள். அவனது கும்பலை அடித்து துவம்சம்செய்துவிட்டு, தான் வெளியில் வந்துவிட்டதாக அவனின் பாஸிடம் தெரியப்படுத்துமாறு சொல்லிவிட்டு, தமிழர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்.
அங்கு ‘கபாலி’ பெயரில் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு கூடம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் போதைக்கு அடிமையான ரித்விகாவும் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூடத்துக்கு ஆசிரியராக கலையரசன் இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ரஜினி, தனது பெயரில் நல்லது நடப்பது நினைத்து பூரித்து போகிறார். அப்போது மாணவர்களிடையே நடக்கும் உரையாடும் நிகழ்ச்சியில் தான் கேங்ஸ்டராக எப்படி மாறினேன் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன்பிறகு பிளாஸ்பேக் விரிகிறது.
பிளாஸ்பேக் காட்சியில், ரஜினி ஜெயிலுக்கு போகும்போது, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி ராதிகா ஆப்தே, குண்டு காயத்துடன் கிடப்பதை பார்த்துவிட்டுத்தான் செல்கிறார். இதனால், தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்தவுடன் தனது மனைவி உயிருடன் இருக்கிறாளா? தனது குழந்தை என்னவாயிற்று? என்ற குழப்பத்திலேயே இருக்கிறார். இந்நிலையில், கிஷோரின் கும்பலில் போதை மருந்து சப்ளை செய்துவரும் மைம் கோபியை ரஜினி கொன்றுவிடுகிறார். இதையடுத்து, கிஷோர், இனி ரஜினியால் தனது தொழிலுக்கு இடைஞ்சல் இருக்கும் என்றுகூறி அவரை தீர்த்துக்கட்ட பார்க்கிறார்.
இதன்பின்னர், ரஜினி தனது மனைவியையும் குழந்தையையும் கண்டுபிடித்தாரா? கிஷோரின் அராஜகத்தை அடித்து ஒடுக்கினாரா? என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் மிகப்பெரிய பலமே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். வழக்கமான மாஸ் காட்சிகள் மட்டுமில்லாது சென்டிமெண்ட் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் சிறைச்சாலையில் வெளிவரும்போதே மாஸ் காட்டியிருக்கிறார். இவர் படத்தில் பேசும் முதல் வசனமே ‘மகிழ்ச்சி’ என்று சொல்லும்போது நமக்கே மகிழ்ச்சி வருகிறது.
அந்த மாஸ் காட்சியை தொடர்ந்து, லிங்கேஷை அடித்து துவம்சம் செய்து, டீசரில் வரும் டயலாக்கை பேசிவிட்டு, கடைசியில் நக்கலாக ‘கோழிக்கறி’ என்று சொல்லிவிட்டு செல்லும் காட்சிகளில் எல்லாம் மாஸ் காட்டுகிறார். ஆக்ஷன் காட்சிகளில் இன்னமும் தன்னுடைய அதே ஸ்டைலில் நடித்து கலக்கியிருக்கிறார். வயதானாலும் உங்க அழகும், ஸ்டைலும் குறையல என்ற படையப்பா வசனம்தான் நமக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல், பள்ளி மாணவர்களிடம் தான் எப்படி கேங்ஸ்டராக மாறினேன் என்பதை விளக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்.
ரஜினியின் நண்பராக கூடவே வரும் ஜான் விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். இவருக்கான வசனங்கள் எல்லாம் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அதை எதார்த்தமாக செய்துவிட்டு கைதட்டல் பெறுகிறார். தன்ஷிகாவுக்கு இப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம். ஸ்டைலான பெண்ணாகவும் அழகாக இருக்கிறார். இடைவேளைக்கு பிறகு இவரது கதாபாத்திரம் அப்படியே மாறுவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுக்கும். பிளாஸ் பேக் காட்சியில் வரும் நாசரின் நடிப்பும் அற்புதம்.
கிஷோர் மிரட்டலான வில்லனாக அசத்துகிறார். கலர் கலரான உடையில் ஹைடெக் வில்லனாக தெரிந்தாலும், லோக்கல் ரவுடிபோல்தான் நமக்கு தெரிகிறார். லிங்கேஷ், ரஜினிக்கு இணையாக அவருக்கு எதிரில் அமர்ந்து பேசும் காட்சிகளில் கெத்து காட்டுகிறார். மெட்ராஸ் படத்தில் பார்த்த கலையரசன், இப்படத்தில் அப்படியே நேர் எதிராக வந்து நிற்கிறார். குழந்தைதனமான முகத்தில் எதார்த்தம் கலந்து நடித்திருக்கிறார். தினேஷ், ரஜினிக்கு பாடிகார்டாக வந்திருக்கிறார். படம் முழுக்க ‘ரோபோ’ படத்தில் வரும் சிட்டி போல் படத்தில் ரஜினி செய்யும் கட்டளைகளை செய்துவருகிறார். இருந்தாலும், இறுதிக்காட்சிகளில் தனது நடிப்பால் ரசிகர்களை செண்டிமென்டால் கவர்கிறார்.
சூப்பர் ஸ்டாரின் மனைவியாக வரும் ராதிகா ஆப்தே, தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வயதான கெட்டப்பிலும், ரஜினியுடன் இவர் செய்யும் காதல் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்கிறது. 25 வருடத்திற்கு பிறகு தனது கணவனை பார்த்து கண்கலங்கி நிற்கும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார்.
படத்தில் 43 கேங்கின் தலைவராக வரும் மலேசியா நடிகர் வின்ஸ்டன் சா, தோற்றத்திலேயே மிரட்டுகிறார். இவருக்கும் ரஜினிக்கு இணையான மாஸ் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். போதைக்கு அடிமையான பெண்ணாக வரும் ரித்விகாவின் கதாபாத்திரத்தை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர் ரஜினியை எதிர்த்து பேசும் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.
இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினிக்கு ஏற்ற கதையை உருவாக்கி, அதை தனது பாணியில் உருவாக்கியிருக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலமே எதார்த்தமான வசனங்கள்தான். ஆங்காங்கே, ரஜினி பேசும் வசனங்கள், பஞ்ச் டயலாக்காக இல்லாவிட்டாலும், ரசிகர்களை விசிலடிக்க வைத்துள்ளது. ஆனால், ஒருசில காட்சிகளால் படத்திற்கு தொய்வு இருக்கிறது. ரஞ்சித் இயக்கியிருந்த இரண்டு படங்களும் ரஞ்சித் பெயரைச் சொல்லும்படமாக இருந்தது. ஆனால், ‘கபாலி’ முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டுமே குறிப்பிடும். அந்தளவுக்கு ரஞ்சித்தின் பங்கு இதில் குறைவுதான் என்று சொல்லவேண்டும்.
சந்தோஷ் நாராயணன் இசையில் ஏற்கெனவே பாடல்கள் ஹிட்டாயிருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்த பாடல்களுக்கு ஜீவன் பிறந்திருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டலாக இருக்கிறது. முரளியின் ஒளிப்பதிவு மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறது. செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக தெரிகிறது. ரஜினிக்கு அமைத்த மாஸ் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா அழகாக வேலை செய்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கபாலி’ ரசிகர்களுக்கு மகிழ்ச்சி
விஜய் சண்முகவேல் அய்யனார் இயக்கத்தில் கதிர், ஸ்வப்னா நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
கால் டாக்சி ஓட்டுனரான நாயகன் கதிர், ரேடியோ ஜாக்கியான நாயகி ஸ்வப்னாவின் குரலை கேட்டு அவரது தீவிர ரசிகர் ஆகிறார். ஒருநாள் ஸ்வப்னா, கதிரின் காரில் பயணம் செய்கிறாள். பயணத்தின்போது ஸ்வப்னா ரேடியோ ஜாக்கி என்று தெரியாத கதிர், அவளிடம் கடுப்பாக நடந்து கொள்கிறான். இதனால், இவர்களுக்குள் மோதல் ஏற்படுகிறது.
ஒருகட்டத்தில் கதிர் தன்னுடைய ரசிகர் என்பதை தெரிந்துகொள்கிறார் ஸ்வப்னா. இதனால், கதிரிடம் அன்பாக பேசுகிறார். இதை கதிர் காதல் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார். அதேநேரத்தில், சிட்டியில் நடந்துவரும் தொடர் கொலை விஷயமாக சிட்டி போலீஸ் கமிஷனரான சரவண சுப்பையா, ஹீரோவை தேடுகிறார்.
இந்நிலையில், ஸ்வப்னா ஹீரோவின் காரில் பயணமானது அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காகத்தான் சென்றது என்பதை கதிர் அறிகிறார். இதையறியும் கதிர், ஸ்வப்னாவின் மொத்த குடும்பத்தையும் தனது காரில் கடத்துகிறார். இப்படி ஏகப்பட்ட சிக்கல்களுடன் பயணிக்கும் கதையில், இறுதியில், ஸ்வப்னாவை கதிர் கரம்பிடித்தாரா? அவரை எதற்காக கடத்தினார்? தொடர் கொலைகளுக்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம்? என்பதை விறுவிறுப்பாக சொல்ல வந்திருக்கிறார்கள்.
கதிர் ஏற்கெனவே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது படம். இப்படத்திலும் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். டப்பிங்கில் இவரது குரல் காமெடியாகவே இருக்கிறது. நாயகி ஸ்வப்னா மேனன், ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் சிரமப்பட்டிருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குனர் சரவண சுப்பையா, கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும் மிகையான நடிப்பால் அவரை ரசிக்க முடியவில்லை. அரசியல்வாதியாக வரும் லிவிங்ஸ்டன் கலகலப்பூட்டியிருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவர்களும் பெரிதாக மனதில் பதியவில்லை.
பயணத்தை மையமாக வைத்து ஒரு திரில்லான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார். திரில்லாங்கான ஒரு கதையை திரில்லாக ரசிக்க முடியவில்லை. சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது இதற்கு காரணம். மேலும், படத்தில் சில லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.
எம்.கார்த்திக்கின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ராஜரத்தினம் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ சோக பயணம்.
ஒருகட்டத்தில் கதிர் தன்னுடைய ரசிகர் என்பதை தெரிந்துகொள்கிறார் ஸ்வப்னா. இதனால், கதிரிடம் அன்பாக பேசுகிறார். இதை கதிர் காதல் என்று தவறுதலாக புரிந்துகொள்கிறார். அதேநேரத்தில், சிட்டியில் நடந்துவரும் தொடர் கொலை விஷயமாக சிட்டி போலீஸ் கமிஷனரான சரவண சுப்பையா, ஹீரோவை தேடுகிறார்.
இந்நிலையில், ஸ்வப்னா ஹீரோவின் காரில் பயணமானது அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காகத்தான் சென்றது என்பதை கதிர் அறிகிறார். இதையறியும் கதிர், ஸ்வப்னாவின் மொத்த குடும்பத்தையும் தனது காரில் கடத்துகிறார். இப்படி ஏகப்பட்ட சிக்கல்களுடன் பயணிக்கும் கதையில், இறுதியில், ஸ்வப்னாவை கதிர் கரம்பிடித்தாரா? அவரை எதற்காக கடத்தினார்? தொடர் கொலைகளுக்கும் கதிருக்கும் என்ன சம்பந்தம்? என்பதை விறுவிறுப்பாக சொல்ல வந்திருக்கிறார்கள்.
கதிர் ஏற்கெனவே ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இது இவருக்கு இரண்டாவது படம். இப்படத்திலும் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். டப்பிங்கில் இவரது குரல் காமெடியாகவே இருக்கிறது. நாயகி ஸ்வப்னா மேனன், ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். பார்க்கவும் அழகாக இருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் சிரமப்பட்டிருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குனர் சரவண சுப்பையா, கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தாலும் மிகையான நடிப்பால் அவரை ரசிக்க முடியவில்லை. அரசியல்வாதியாக வரும் லிவிங்ஸ்டன் கலகலப்பூட்டியிருக்கிறார். மற்றபடி, படத்தில் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளன. அவர்களும் பெரிதாக மனதில் பதியவில்லை.
பயணத்தை மையமாக வைத்து ஒரு திரில்லான படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விஜய் சண்முகவேல் அய்யனார். திரில்லாங்கான ஒரு கதையை திரில்லாக ரசிக்க முடியவில்லை. சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதது இதற்கு காரணம். மேலும், படத்தில் சில லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. இதையெல்லாம் தவிர்த்தால் படம் நன்றாக இருந்திருக்கும்.
எம்.கார்த்திக்கின் பின்னணி இசை மிரட்டியிருக்கிறது. ராஜரத்தினம் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ சோக பயணம்.
‘புல்லுக்கட்டு முத்தம்மா’ என்ற கவர்ச்சி படத்தை இயக்கிய இயக்குனர் முத்துப்பாண்டி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்தான் ‘கோடம்பாக்கத்தில் கோகிலா’. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
மிகப்பெரிய நடிகையாக வேண்டும் ஆசையில் கிராமத்தில் இருந்து சென்னை கோடம்பாக்கம் ஏரியாவில் நுழைகிறாள் நாயகி கோகிலா. பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு தவறான தயாரிப்பு நிறுவனத்தில் நுழைந்து வாய்ப்பு கேட்கிறாள். அவர்கள் இவளிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்று, ஹீரோ மற்றும் அவரது நண்பர்களிடம் சென்று உதவி கேட்கிறாள்.
போதையில் இருக்கும் அவர்கள் கோகிலாவுக்கு உதவுவதாக கூறி, அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள். அப்போது அங்கு வரும் போலீஸ்காரர், கோகிலாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்து செல்கிறார். ஆனால், அந்த போலீஸ்காரர் அவளை கற்பழித்து, ஆந்திராவில் விபச்சாரத்துக்குள் தள்ளிவிடுகிறார்.
அங்கிருந்து தப்பித்து சென்னை திரும்பும் கோகிலாவை பிடிக்க அவரது வாழ்வை சீரழித்த போலீஸ்காரரும், விபச்சார கும்பலின் தலைவனும் தீவிரமாக இருக்கின்றனர். இவர்களின் கண்ணில் படாமல் தப்பிக்க கோகிலா தலைமறைவாகிறாள். இந்நிலையில், ஒருநாள் போதையில் இருக்கும் ஹீரோ மற்றும் அவருடைய நண்பர்களின் கண்ணில் படுகிறாள் கோகிலா. ஏற்கெனவே, கோகிலாவை தவறவிட்ட நண்பர்கள் இந்தமுறை அவளை கடத்தி சென்று அவளை கற்பழித்துவிடுகிறார்கள்.
விபச்சார கும்பலிடம் சிக்கியதால் எய்ட்ஸ் நோயாளியான கோகிலா, இவர்களின் முரட்டு தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைகிறாள். அவளை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிட முடிவெடுக்கிறார்கள். ஆனால், போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள். கோகிலாவும் கோமா நிலைக்கு சென்றுவிடுகிறாள்.
இதன்பிறகு நண்பர்களின் கதி என்னவாயிற்று? கோமா நிலைக்கு சென்ற கோகிலா என்னவானாள்? என்பதே மீதிக்கதை.
படத்தின் ஹீரோவான ராஜேஷ் ஹீரோவுக்கான தோற்றத்துடன் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். அவருடைய நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக செய்திருக்கிறார்கள். போலீஸ் உயரதிகாரியாக வரும் ‘பசங்க’ சிவகுமார், மிரட்டும் தொனியில் இருந்தாலும், அவரது நடிப்பு ஏனோ நம்மை ஈர்க்கவில்லை.
கோகிலாவாக வரும் ஜகின், படம் முழுக்க ஒருவித பயத்துடனேயே நடித்துள்ளார். நடிப்பையும் தன்னுடைய முகத்தில் வரவழைக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். அதேபோல், ஹீரோவின் நண்பனின் மனைவியாக நடித்திருப்பவர் ஒவ்வொரு பேச்சுக்கும் தனது கையாலேயே சைகை காட்டி நடித்திருப்பது, அனுதாபத்திற்கு பதில் சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கிறது.
இந்த படம் மூலம் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை இயக்குனர் முத்துப்பாண்டி சொல்ல வந்திருக்கிறார். சினிமா ஆசையில் கோடம்பாக்கத்தில் நுழையும் பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கிக் கொண்டால் அவர்களின் நிலை என்ன? என்பதையும் போதைக்கு அடிமையாகும் ஆண்கள் தவறான பாதையில் செல்வதால் அவர்களின் குடும்பம் எந்த நிலைமைக்கு செல்கிறது? என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார்.
ஆனால், சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாததால் சொல்ல வந்த கருத்தை அனைவரும் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. கதாபாத்திரங்களையும், காட்சியமைப்புகளையும் சிறப்பாக தேர்வு செய்திருந்தால் சமூகத்திற்கு இந்த படம் நல்லதொரு பாடமாக அமைந்திருக்கும்.
கண்ணன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பென் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கேற்றபடி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கோடம்பாக்கத்தில் கோகிலா’ அழகாய் இல்லை.
போதையில் இருக்கும் அவர்கள் கோகிலாவுக்கு உதவுவதாக கூறி, அவளிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள். அப்போது அங்கு வரும் போலீஸ்காரர், கோகிலாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்து செல்கிறார். ஆனால், அந்த போலீஸ்காரர் அவளை கற்பழித்து, ஆந்திராவில் விபச்சாரத்துக்குள் தள்ளிவிடுகிறார்.
அங்கிருந்து தப்பித்து சென்னை திரும்பும் கோகிலாவை பிடிக்க அவரது வாழ்வை சீரழித்த போலீஸ்காரரும், விபச்சார கும்பலின் தலைவனும் தீவிரமாக இருக்கின்றனர். இவர்களின் கண்ணில் படாமல் தப்பிக்க கோகிலா தலைமறைவாகிறாள். இந்நிலையில், ஒருநாள் போதையில் இருக்கும் ஹீரோ மற்றும் அவருடைய நண்பர்களின் கண்ணில் படுகிறாள் கோகிலா. ஏற்கெனவே, கோகிலாவை தவறவிட்ட நண்பர்கள் இந்தமுறை அவளை கடத்தி சென்று அவளை கற்பழித்துவிடுகிறார்கள்.
விபச்சார கும்பலிடம் சிக்கியதால் எய்ட்ஸ் நோயாளியான கோகிலா, இவர்களின் முரட்டு தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் மயக்கமடைகிறாள். அவளை யாருக்கும் தெரியாமல் கொலை செய்துவிட முடிவெடுக்கிறார்கள். ஆனால், போலீசிடம் மாட்டிக் கொள்கிறார்கள். கோகிலாவும் கோமா நிலைக்கு சென்றுவிடுகிறாள்.
இதன்பிறகு நண்பர்களின் கதி என்னவாயிற்று? கோமா நிலைக்கு சென்ற கோகிலா என்னவானாள்? என்பதே மீதிக்கதை.
படத்தின் ஹீரோவான ராஜேஷ் ஹீரோவுக்கான தோற்றத்துடன் அழகாக இருக்கிறார். நடிப்பிலும் மிளிர்கிறார். அவருடைய நண்பர்களாக வருபவர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக செய்திருக்கிறார்கள். போலீஸ் உயரதிகாரியாக வரும் ‘பசங்க’ சிவகுமார், மிரட்டும் தொனியில் இருந்தாலும், அவரது நடிப்பு ஏனோ நம்மை ஈர்க்கவில்லை.
கோகிலாவாக வரும் ஜகின், படம் முழுக்க ஒருவித பயத்துடனேயே நடித்துள்ளார். நடிப்பையும் தன்னுடைய முகத்தில் வரவழைக்க ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். அதேபோல், ஹீரோவின் நண்பனின் மனைவியாக நடித்திருப்பவர் ஒவ்வொரு பேச்சுக்கும் தனது கையாலேயே சைகை காட்டி நடித்திருப்பது, அனுதாபத்திற்கு பதில் சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கிறது.
இந்த படம் மூலம் சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களை இயக்குனர் முத்துப்பாண்டி சொல்ல வந்திருக்கிறார். சினிமா ஆசையில் கோடம்பாக்கத்தில் நுழையும் பெண்கள் தவறான நபர்களிடம் சிக்கிக் கொண்டால் அவர்களின் நிலை என்ன? என்பதையும் போதைக்கு அடிமையாகும் ஆண்கள் தவறான பாதையில் செல்வதால் அவர்களின் குடும்பம் எந்த நிலைமைக்கு செல்கிறது? என்பதையும் இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார்.
ஆனால், சரியான கதாபாத்திரங்கள் தேர்வு இல்லாததால் சொல்ல வந்த கருத்தை அனைவரும் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது. கதாபாத்திரங்களையும், காட்சியமைப்புகளையும் சிறப்பாக தேர்வு செய்திருந்தால் சமூகத்திற்கு இந்த படம் நல்லதொரு பாடமாக அமைந்திருக்கும்.
கண்ணன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். பென் ஒளிப்பதிவு படத்தின் கதைக்கேற்றபடி இருக்கிறது.
மொத்தத்தில் ‘கோடம்பாக்கத்தில் கோகிலா’ அழகாய் இல்லை.
பனியுகத்தில் வாழ்ந்த உயிரினங்கள் பற்றிய கற்பனை கலந்த அனிமேசன் படம்தான் ஐஸ் ஏஜ். குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த படவரிசையில் ஐந்தாவது பாகமாக தற்போது திரைக்கு வந்திருக்கிறது ‘ஐஸ் ஏஜ் 5 கோலிசன் கோர்ஸ்’.
பனியுக காலத்தில் மேனி-எல்லீ என்ற ஜோடிக்கு பிறந்த பெண் யானைக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மேனி-எல்லீயின் திருமண நாள் வருகிறது. அந்த திருமண நாளை பார்ப்பதற்காக காட்டிலுள்ள எல்லா மிருகங்களும் ஒன்று சேர்கின்றன. கொண்டாட்டத்தின் போது யாரும் எதிர்பாராத வண்ணம் ஒரு வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.
இது, மேனியின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வாணவேடிக்கை அல்ல, விண்ணிலிருந்து வந்துகொண்டிருக்கும் விண்கல் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது, இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒட்டுமொத்த விலங்குகள் கூட்டமும் திகைத்துக் கொண்டிருக்கும்போதுதான், டைனோசர்கள் உள்ள பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு திரும்பும் ‘பக்’ எனும் நரி, விண்ணில் இருந்து வரும் விண்கல்லால் இந்த பூமியே அழியப் போகிறது என்று விலங்குகள் அனைத்தையும் பயமுறுத்துகிறது.
இருப்பினும், அதை தடுக்க தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் அது கூறுகிறது. ‘பக்’கின் அந்த திட்டம் என்ன? பயமுறுத்திய பக்கின் திட்டத்தை விலங்குகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டனவா? பேரழிவிலிருந்து விலங்குகள் அனைத்தும் காப்பற்றப்பட்டனவா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
ஐஸ் ஏஜ் படங்களின் வரிசையில் 5-வது பாகமாக வெளிவந்துள்ள படம். முதல்பாகம் வெளிவந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இன்னமும் ஐஸ் ஏஜ் படங்களின் மீதான உள்ள எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளதா என்றால், அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், வழக்கமாக எல்லா பாகங்களிலும் சொல்லப்படுகிற கதைதான். அதேபோல், முடிவு என்னவென்பதை ஆரம்பத்திலேயே யூகிக்கும்படியான கதையமைப்பு ஆகியவற்றால்தான் படத்தை கடைசிவரை சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. அதேபோல், வழக்கமான முதல் பாகத்தில் வருகிற ஸ்க்ராட், சிட், மேனி, டியாகோ ஆகியவற்றுடன் அடுத்தடுத்த பாகங்களில் வந்த எல்லீ, பீச், ஜுலியன், ஷிரா, கிரானி ஆகிய கதாபாத்திரங்களும் இந்த பாகத்தில் வருகிறது. இதுமட்டுமில்லாமல், இந்த பாகத்தில் புதிதாக சில கதாபாத்திரங்களையும் இணைத்திருக்கிறார்கள்.
புதிதாக வந்த கதாபாத்திரங்களை ரசிக்க முடிந்த அளவுக்கு பழைய கதாபாத்திரங்களில் ஸ்க்ராட்டை தவிர மற்ற கதாபாத்திரங்களை ரசிக்க முடியவில்லை. தொடர்ந்து பார்த்து வரும் கதாபாத்திரங்கள் என்பதால் போரடிக்கிறது. அதேபோல், ‘பக்’ கதாபாத்திரத்திரத்தின் மூளையில் இருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரம் வியக்க வைக்கிறது.
அதேபோல், ஸ்க்ராட் அணில் மற்றும் பாட்டியாக வரும் க்ரானி ஆகியவை செய்யும் சேட்டைகளும் படத்தில் குழந்தைகளை குதூலகம் கொள்ள செய்கின்றன. இந்த கதாபாத்திரங்களுக்கு உண்டான காட்சிகள் குறைவாக இருப்பதால் படம் சுவாரஸ்யம் இல்லாமலே சென்றிருக்கிறது. எல்லா பாகங்களிலும் வரும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் இந்த படத்திலும் உண்டு. ஐஸ் ஏஜ் படங்கள் என்றாலே ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும். நண்பர்களென்றால் அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக காட்சிகள் இருக்கும். அது இந்த பாகத்திலும் தொடர்கிறது.
முந்தைய பாகங்களை விட இந்த பாகத்தில் நிறைய டெக்னிக் விஷயங்களை கையாண்டிருக்கிறார்கள். அதேபோல், கடந்த பாகங்களின் சுவாரஸ்யங்களையும் இந்த படம் இழந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காமெடியும் குறைவாகவே இருக்கிறது. எப்போவோ முடியவேண்டிய ஐஸ் ஏஜ் படவரிசையை தேவையில்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
மொத்தில் ‘ஐஸ் ஏஜ் -5 கோலிசன் கோர்ஸ்’ குளுமையில்லை.
இது, மேனியின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று அனைவரும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வாணவேடிக்கை அல்ல, விண்ணிலிருந்து வந்துகொண்டிருக்கும் விண்கல் என்பது அனைவருக்கும் தெரியவருகிறது, இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஒட்டுமொத்த விலங்குகள் கூட்டமும் திகைத்துக் கொண்டிருக்கும்போதுதான், டைனோசர்கள் உள்ள பாதாள உலகத்திலிருந்து பூமிக்கு திரும்பும் ‘பக்’ எனும் நரி, விண்ணில் இருந்து வரும் விண்கல்லால் இந்த பூமியே அழியப் போகிறது என்று விலங்குகள் அனைத்தையும் பயமுறுத்துகிறது.
இருப்பினும், அதை தடுக்க தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் அது கூறுகிறது. ‘பக்’கின் அந்த திட்டம் என்ன? பயமுறுத்திய பக்கின் திட்டத்தை விலங்குகள் அனைத்தும் ஏற்றுக் கொண்டனவா? பேரழிவிலிருந்து விலங்குகள் அனைத்தும் காப்பற்றப்பட்டனவா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
ஐஸ் ஏஜ் படங்களின் வரிசையில் 5-வது பாகமாக வெளிவந்துள்ள படம். முதல்பாகம் வெளிவந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இன்னமும் ஐஸ் ஏஜ் படங்களின் மீதான உள்ள எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்துள்ளதா என்றால், அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஏனென்றால், வழக்கமாக எல்லா பாகங்களிலும் சொல்லப்படுகிற கதைதான். அதேபோல், முடிவு என்னவென்பதை ஆரம்பத்திலேயே யூகிக்கும்படியான கதையமைப்பு ஆகியவற்றால்தான் படத்தை கடைசிவரை சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. அதேபோல், வழக்கமான முதல் பாகத்தில் வருகிற ஸ்க்ராட், சிட், மேனி, டியாகோ ஆகியவற்றுடன் அடுத்தடுத்த பாகங்களில் வந்த எல்லீ, பீச், ஜுலியன், ஷிரா, கிரானி ஆகிய கதாபாத்திரங்களும் இந்த பாகத்தில் வருகிறது. இதுமட்டுமில்லாமல், இந்த பாகத்தில் புதிதாக சில கதாபாத்திரங்களையும் இணைத்திருக்கிறார்கள்.
புதிதாக வந்த கதாபாத்திரங்களை ரசிக்க முடிந்த அளவுக்கு பழைய கதாபாத்திரங்களில் ஸ்க்ராட்டை தவிர மற்ற கதாபாத்திரங்களை ரசிக்க முடியவில்லை. தொடர்ந்து பார்த்து வரும் கதாபாத்திரங்கள் என்பதால் போரடிக்கிறது. அதேபோல், ‘பக்’ கதாபாத்திரத்திரத்தின் மூளையில் இருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரம் வியக்க வைக்கிறது.
அதேபோல், ஸ்க்ராட் அணில் மற்றும் பாட்டியாக வரும் க்ரானி ஆகியவை செய்யும் சேட்டைகளும் படத்தில் குழந்தைகளை குதூலகம் கொள்ள செய்கின்றன. இந்த கதாபாத்திரங்களுக்கு உண்டான காட்சிகள் குறைவாக இருப்பதால் படம் சுவாரஸ்யம் இல்லாமலே சென்றிருக்கிறது. எல்லா பாகங்களிலும் வரும் குடும்ப சென்டிமென்ட் காட்சிகள் இந்த படத்திலும் உண்டு. ஐஸ் ஏஜ் படங்கள் என்றாலே ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும். நண்பர்களென்றால் அவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக காட்சிகள் இருக்கும். அது இந்த பாகத்திலும் தொடர்கிறது.
முந்தைய பாகங்களை விட இந்த பாகத்தில் நிறைய டெக்னிக் விஷயங்களை கையாண்டிருக்கிறார்கள். அதேபோல், கடந்த பாகங்களின் சுவாரஸ்யங்களையும் இந்த படம் இழந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காமெடியும் குறைவாகவே இருக்கிறது. எப்போவோ முடியவேண்டிய ஐஸ் ஏஜ் படவரிசையை தேவையில்லாமல் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
மொத்தில் ‘ஐஸ் ஏஜ் -5 கோலிசன் கோர்ஸ்’ குளுமையில்லை.
தெலுங்கில் வெளிவந்த ‘டார்லிங்’ படம் பிரபாஸ் பாகுபலி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
காலேஜ் படிக்கும் காலத்தில் இருந்தே பிரபாஸின் அப்பா பிரபுவும், காஜலின் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் நண்பர்களாக இருப்பதால் பிரபாஸும், காஜலும் சிறுவயதிலிருந்தே நெருங்கி பழகுகிறார்கள். ஒருகட்டத்தில் காஜலின் அப்பா, அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்றுவிடுகிறார். பிரபாஸ் இந்தியாவிலேயே வளர்ந்து பெரியவனாகிறார்.
காலேஜில் படித்து வரும் பிரபாஸை பிரபல ரவுடியான முகேஷ் ரிஷியின் மகள் ஒருதலையாக காதலிக்கிறாள். பிரபாஸிடம் சென்று தனது காதலை சொல்லும்போது பிரபாஸ் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால், அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். தனது மகளின் காதலை புரிந்துகொண்ட முகேஷ் ரிஷி, பிரபாஸை அழைத்து தனது மகளின் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் அவனை மிரட்டுகிறார்.
உடனே, பிரபாஸ் தனக்கு ஏற்கெனவே ஒரு காதலி இருப்பதாகவும், அவள் தற்போது கோமா நிலையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு அனுதாப கதையை கூறி முகேஷ் ரிஷியிடமிருந்து தப்பிக்கிறார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற காஜல் அகர்வால் திரும்பவும் இந்தியாவுக்கு வருகிறார். அவரை சந்திப்பதற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் பிரபாஸ், அவளை சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டி மோதிக் கொள்கிறார். பின்னர், ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.
இதற்கிடையில், பிரபாஸ் தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறியதெல்லாம் பொய் என்பது முகேஷ் ரிஷிக்கு தெரிய வருகிறது. பிரபாஸ் தற்போது காஜலை காதலித்து வருவதும் ரிஷிக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடைந்த முகேஷ் ரிஷி, பிரபாஸின் காதலியை கொன்று தனது மகளுடன் பிரபாஸை சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார்.
இறுதியில், முகேஷ் ரிஷியின் திட்டம் பலித்ததா? பிரபாஸும், காஜலும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
தெலுங்கில் ‘டார்லிங்’ என்ற பெயரில் வெளிவந்த படம் தமிழில் ‘பிரபாஸ் பாகுபலி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. ‘பாகுபலி’ படத்தில் மாவீரனாக தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த பிரபாஸ், இப்படத்தில் மிகவும் சாக்லேட் பாயாக நடித்திருப்பது புது அனுபவத்தை கொடுத்திருக்கிறது. உயரமான தோற்றம், ஒல்லியான தேகம் என ஓரளவு கவர்ந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு மாவீரனாகவே கவர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு சண்டைக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
காஜல் அகர்வால் வழக்கம்போல் ரொமான்ஸ், பாடல் காட்சிகளில் எல்லாம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரபு பாசமுள்ள அப்பாவாகவும் கலகலப்பான மனிதராகவும் மனதில் பதிகிறார். பிரபுவின் நண்பர்களாக வருபவர்களும் நடிப்பில் மிளிர்கிறார்கள். முகேஷ் ரிஷி ஹைடெக் வில்லனாக மிரட்டுகிறார்.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கிறார் கருணாகரன். காதல் கதையில் அளவான காமெடி, அளவான ஆக்ஷன் கலந்து படத்தை எடுத்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களையும் இப்படம் கவரும் என்று எதிர்பார்க்கலாம். அந்தளவுக்கு இரண்டு தரப்பு ரசிகர்களும் கவர்கிற வகையில் படத்தை கொடுத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையை கதைக்கேற்றவாறு அமைத்திருக்கிறார். ஆண்ட்ரூ பாபுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் கலர்புல்லாகவும் அமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘பிரபாஸ் பாகுபலி’ ரசிக்கலாம்.
காலேஜில் படித்து வரும் பிரபாஸை பிரபல ரவுடியான முகேஷ் ரிஷியின் மகள் ஒருதலையாக காதலிக்கிறாள். பிரபாஸிடம் சென்று தனது காதலை சொல்லும்போது பிரபாஸ் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இதனால், அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். தனது மகளின் காதலை புரிந்துகொண்ட முகேஷ் ரிஷி, பிரபாஸை அழைத்து தனது மகளின் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் அவனை மிரட்டுகிறார்.
உடனே, பிரபாஸ் தனக்கு ஏற்கெனவே ஒரு காதலி இருப்பதாகவும், அவள் தற்போது கோமா நிலையில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு அனுதாப கதையை கூறி முகேஷ் ரிஷியிடமிருந்து தப்பிக்கிறார். இந்நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற காஜல் அகர்வால் திரும்பவும் இந்தியாவுக்கு வருகிறார். அவரை சந்திப்பதற்காக எதிர்பார்த்து காத்திருக்கும் பிரபாஸ், அவளை சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டி மோதிக் கொள்கிறார். பின்னர், ஒருகட்டத்தில் இருவரும் காதலர்களாகிறார்கள்.
இதற்கிடையில், பிரபாஸ் தனக்கு ஒரு காதலி இருப்பதாக கூறியதெல்லாம் பொய் என்பது முகேஷ் ரிஷிக்கு தெரிய வருகிறது. பிரபாஸ் தற்போது காஜலை காதலித்து வருவதும் ரிஷிக்கு தெரிய வருகிறது. இதனால் கோபமடைந்த முகேஷ் ரிஷி, பிரபாஸின் காதலியை கொன்று தனது மகளுடன் பிரபாஸை சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார்.
இறுதியில், முகேஷ் ரிஷியின் திட்டம் பலித்ததா? பிரபாஸும், காஜலும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
தெலுங்கில் ‘டார்லிங்’ என்ற பெயரில் வெளிவந்த படம் தமிழில் ‘பிரபாஸ் பாகுபலி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. ‘பாகுபலி’ படத்தில் மாவீரனாக தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த பிரபாஸ், இப்படத்தில் மிகவும் சாக்லேட் பாயாக நடித்திருப்பது புது அனுபவத்தை கொடுத்திருக்கிறது. உயரமான தோற்றம், ஒல்லியான தேகம் என ஓரளவு கவர்ந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு பிரபாஸ் ஒரு மாவீரனாகவே கவர்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு சண்டைக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
காஜல் அகர்வால் வழக்கம்போல் ரொமான்ஸ், பாடல் காட்சிகளில் எல்லாம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரபு பாசமுள்ள அப்பாவாகவும் கலகலப்பான மனிதராகவும் மனதில் பதிகிறார். பிரபுவின் நண்பர்களாக வருபவர்களும் நடிப்பில் மிளிர்கிறார்கள். முகேஷ் ரிஷி ஹைடெக் வில்லனாக மிரட்டுகிறார்.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு அழகான படத்தை கொடுத்திருக்கிறார் கருணாகரன். காதல் கதையில் அளவான காமெடி, அளவான ஆக்ஷன் கலந்து படத்தை எடுத்திருக்கிறார். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களையும் இப்படம் கவரும் என்று எதிர்பார்க்கலாம். அந்தளவுக்கு இரண்டு தரப்பு ரசிகர்களும் கவர்கிற வகையில் படத்தை கொடுத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையை கதைக்கேற்றவாறு அமைத்திருக்கிறார். ஆண்ட்ரூ பாபுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளையும் கலர்புல்லாகவும் அமைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘பிரபாஸ் பாகுபலி’ ரசிக்கலாம்.
முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள கிழக்கு சந்து கதவு எண் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்க்கவும்...
சென்னையில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார் நாயகி ஹசிகா. இவள் வேலைபார்க்கும் கம்பெனியின் மேனேஜர், அழகான பெண்களை பார்த்தால் அவர்களை அடைந்துவிட துடிப்பவர். இதனால், நாயகி மீதும் இவருக்கு ஒரு கண்.
இந்நிலையில், ஹசிகாவை காதலிப்பதாக அங்கு பணிபுரியும் திலீபன் என்பவர் அவருக்கு மெசேஜ் அனுப்புகிறார். இதையறியும் மேனேஜர், ஹசிகாவுக்கு மெசேஜ் அனுப்பியவரை கூலிப்படையை வைத்து கொலை செய்கிறார். பின்னர், ஒருநாள் நாயகி பணிபுரியும் கம்பெனியிலேயே வேலைக்கு சேருகிறார் நாயகன் சுபாஷ்.
நாயகியுடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கும் நாயகன், ஒருகட்டத்தில் அவளை காதலிக்கவும் தொடங்குகிறார். நாயகியும் இவரை காதலிக்க தொடங்குகிறாள். நாயகன் அவளிடம் காதலை சொல்வதற்கு முன்பாகவே, அனைவர் முன்னிலையிலும் தனது காதலை நாயகனிடம் வெளிப்படுத்துகிறாள் நாயகி.
இதனால் கோபமடையும் மேனேஜர், நாயகனையும் கொலை செய்ய திட்டம் போடுகிறார். ஆனால், அதிலிருந்து நாயகன் தப்பித்து விடுகிறார். பின்னர், நாயகியிடம் சென்று அவளை அடைய விரும்புவதாகவும், இதற்கு சம்மதிக்காவிட்டால் நாயகனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இதனால், பயந்துபோன நாயகி, நாயகனுக்கு போன்போட்டு தன்னை அவனுடைய சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிடுமாறு கூறுகிறாள்.
நாயகனும், நாயகியை அழைத்துக்கொண்டு அவனது சொந்த ஊருக்கு பஸ்ஸில் பயணம் செய்கிறார். செல்லும்வழியில் பஸ்ஸில் பயணம் செய்த திருடன் ஒருவன் நாயகனின் டிக்கெட்டையும், அவனது சூட்கேசையும் திருடிக் கொண்டு சென்றுவிடுகிறான். திருடன் தூக்கிச் சென்ற சூட்கேசில், ஒரு பிணம் இருப்பதை கண்டதும் அவன் அதிர்ச்சியடைகிறான். பின்னர், போலீஸ் விசாரிக்கையில், அது நாயகனுடைய சூட்கேஸ்தான் என்று போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.
இதனால் நாயகனை போலீசார் பின்தொடர்கின்றனர். இறுதியில், அந்த பிணத்துக்கும் நாயகனுக்கும் தொடர்பு உள்ளதா? அந்த சூட்கேசில் இருந்த பிணம் யாருடையது? என்ற மர்மமான முடிச்சுகளுக்கு பிற்பாதியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் சுபாஷுக்கு ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரம். இருப்பினும், தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி ஹசிகாவுக்கு கதையை தாங்கிச் செல்கிற வலுவான கதாபாத்திரம். ஆனால், அழுத்தமான காட்சிகளை நாயகிக்கு வழங்காததால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையே வலுவிழந்து போய்விட்டது.
திலீபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் முக்கியமான கதாபாத்திரமாக வலம்வந்திருக்கிறார். விசாரணை அதிகாரியாக வரும் சரவண சுப்பையா, போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.
மாறிவரும் நாகரீக உலகில் பெண்கள் மாடர்னாக இருக்க ஆசைப்பட்டு தவறான பாதைக்கு செல்கின்றனர். இதனால், கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், சரியான காட்சிப்படுத்துதல் இல்லாததால் சொல்ல வந்த கருத்து ரசிகர்களிடம் சரியாக சென்று சேரவில்லை. திரைக்கதை மிகவும் சொதப்பல்.
வேலன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாகவே இருக்கிறது.
மொத்தத்தில் ‘கிழக்கு சந்து கதவு எண் 108’ பொலிவு இல்லை.
இந்நிலையில், ஹசிகாவை காதலிப்பதாக அங்கு பணிபுரியும் திலீபன் என்பவர் அவருக்கு மெசேஜ் அனுப்புகிறார். இதையறியும் மேனேஜர், ஹசிகாவுக்கு மெசேஜ் அனுப்பியவரை கூலிப்படையை வைத்து கொலை செய்கிறார். பின்னர், ஒருநாள் நாயகி பணிபுரியும் கம்பெனியிலேயே வேலைக்கு சேருகிறார் நாயகன் சுபாஷ்.
நாயகியுடன் நெருங்கிப் பழக ஆரம்பிக்கும் நாயகன், ஒருகட்டத்தில் அவளை காதலிக்கவும் தொடங்குகிறார். நாயகியும் இவரை காதலிக்க தொடங்குகிறாள். நாயகன் அவளிடம் காதலை சொல்வதற்கு முன்பாகவே, அனைவர் முன்னிலையிலும் தனது காதலை நாயகனிடம் வெளிப்படுத்துகிறாள் நாயகி.
இதனால் கோபமடையும் மேனேஜர், நாயகனையும் கொலை செய்ய திட்டம் போடுகிறார். ஆனால், அதிலிருந்து நாயகன் தப்பித்து விடுகிறார். பின்னர், நாயகியிடம் சென்று அவளை அடைய விரும்புவதாகவும், இதற்கு சம்மதிக்காவிட்டால் நாயகனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இதனால், பயந்துபோன நாயகி, நாயகனுக்கு போன்போட்டு தன்னை அவனுடைய சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிடுமாறு கூறுகிறாள்.
நாயகனும், நாயகியை அழைத்துக்கொண்டு அவனது சொந்த ஊருக்கு பஸ்ஸில் பயணம் செய்கிறார். செல்லும்வழியில் பஸ்ஸில் பயணம் செய்த திருடன் ஒருவன் நாயகனின் டிக்கெட்டையும், அவனது சூட்கேசையும் திருடிக் கொண்டு சென்றுவிடுகிறான். திருடன் தூக்கிச் சென்ற சூட்கேசில், ஒரு பிணம் இருப்பதை கண்டதும் அவன் அதிர்ச்சியடைகிறான். பின்னர், போலீஸ் விசாரிக்கையில், அது நாயகனுடைய சூட்கேஸ்தான் என்று போலீசார் கண்டுபிடிக்கின்றனர்.
இதனால் நாயகனை போலீசார் பின்தொடர்கின்றனர். இறுதியில், அந்த பிணத்துக்கும் நாயகனுக்கும் தொடர்பு உள்ளதா? அந்த சூட்கேசில் இருந்த பிணம் யாருடையது? என்ற மர்மமான முடிச்சுகளுக்கு பிற்பாதியில் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் சுபாஷுக்கு ஹீரோயிசம் இல்லாத கதாபாத்திரம். இருப்பினும், தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி ஹசிகாவுக்கு கதையை தாங்கிச் செல்கிற வலுவான கதாபாத்திரம். ஆனால், அழுத்தமான காட்சிகளை நாயகிக்கு வழங்காததால் அந்த கதாபாத்திரத்தின் தன்மையே வலுவிழந்து போய்விட்டது.
திலீபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் முக்கியமான கதாபாத்திரமாக வலம்வந்திருக்கிறார். விசாரணை அதிகாரியாக வரும் சரவண சுப்பையா, போலீஸ் அதிகாரிக்குண்டான மிடுக்குடன் கச்சிதமாக கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார்.
மாறிவரும் நாகரீக உலகில் பெண்கள் மாடர்னாக இருக்க ஆசைப்பட்டு தவறான பாதைக்கு செல்கின்றனர். இதனால், கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது என்பதை இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். ஆனால், சரியான காட்சிப்படுத்துதல் இல்லாததால் சொல்ல வந்த கருத்து ரசிகர்களிடம் சரியாக சென்று சேரவில்லை. திரைக்கதை மிகவும் சொதப்பல்.
வேலன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாகவே இருக்கிறது.
மொத்தத்தில் ‘கிழக்கு சந்து கதவு எண் 108’ பொலிவு இல்லை.
‘காதல்’ சுகுமார் இயக்கத்தில் அருண், அர்ஜுன், லீமாபாபு ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘சும்மாவே ஆடுவோம்’. இப்படம் எப்படியிருக்கிறது என்பதை உள்ளே பார்ப்போம்...
ஒரு கிராமத்தில் ஜமீனாக இருக்கும் ஆனந்தன் அந்த ஊரில் உள்ள கூத்துக்கலைஞர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வரும் ஜமீனை, கூத்து கலைஞர்கள் அனைவரும் அவரை கடவுள் போல பார்த்து வருகின்றனர்.
இருந்தாலும், ஜமீன் ஆனந்துக்கும் யுவராணிக்கும் திருமணமாகி பல ஆண்டு ஆகியும் அவருக்கு குழந்தையே இல்லை என்ற கவலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவரது ஜோசியரான பாண்டு, ஜமீனுக்கு அவர் மனைவி மூலமாக முதல் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், இரண்டாவதாகவே குழந்தை பிறக்கும் என்றும் கூறுகிறார்.
இதனால் குழப்பத்தில் இருக்கும் ஜமீனின் சூழ்நிலையை புரிந்து, இந்த விஷயம் அறிந்து கூத்துக் கலைஞன் பாலாசிங்கின் மகளான அம்மு, ஜமீன் மூலமாக முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறாள். பாதி மனநிலையுடன் அம்முடன் ஒன்று சேருகிறார் ஜமீன். நாட்கள் கடந்ததும் அம்மு கர்ப்பமடைகிறாள். அதேநேரத்தில் யுவராணியும் கர்ப்பமடைகிறாள்.
இருவருக்கும் ஒருநேரத்தில் ஒரே மருத்துவமனையில் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அம்மு இறந்துபோகிறாள். ஜமீன் தான் செய்தது பெரிய குற்றமாக நினைத்து, அந்த குழந்தைக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி யுவராணிக்கு பிறந்த குழந்தையையும், அந்த குழந்தையையும் மாற்றி வைத்து விடுகிறார்.
இரண்டு குழந்தைகளுக்கும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். ஜமீன் வீட்டில் வளரும் குழந்தையான அர்ஜுன் சினிமாவில் பெரிய ஹீரோவாகிறார். கூத்துக் கலைஞர்களுடன் வளரும் அருண், மெக்கானிக் கடை வைத்துக் கொண்டு, அர்ஜுனின் தீவிர ரசிகராகவும் இருக்கிறார்.
அர்ஜுனின் தீவிர ரசிகராக இருக்கும் அருணுக்கு ஒரு சூழ்நிலையில், அர்ஜுனின் மாமாவால் அவமானம் நேரிடுகிறது. அர்ஜுனின் மாமா கூத்துக் கலைஞர்களுக்கு ஜமீன் வழங்கிய நிலத்தையெல்லாம் அபகரிக்க நினைக்கிறார். இதனால், சூழ்ச்சி செய்து அந்த நிலத்தை அபகரிக்க திட்டம் போடுகிறார்.
அதன்படி, அர்ஜுனை ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவமானப்படுத்துவதாக கூறி, அவர்களுக்கு ஒரு சவால் விடுகிறார். அதாவது 30 நாட்களுக்குள் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு படத்தை எடுத்துக் கொடுத்தால் ஜமீன் நிலத்தை அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்துவிடுவதாகவும், அப்படி அவர்களால் முடியாவிட்டால் ஜமீன் கொடுத்த நிலத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஊரைவிட்டே வெளியேறவேண்டும் என்றும் கூறுகிறார்.
இறுதியில், ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அந்த சவாலை எதிர்கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை மீட்டார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
நாயகன் அருண், மெக்கானிக் கடை வைத்திருப்பவராகவும், ஒரு நடிகனின் ரசிகராகவும் அழகாக நடித்திருக்கிறார். டான்ஸ் மற்றும் காதல் காட்சிகள், சண்டை காட்சிகளில் எல்லாம் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறார். நடிகராக வரும் அர்ஜுனுக்கு சில காட்சிகளே இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
ஜமீனாக வரும் ஆனந்தன், முரட்டுத் தோற்றத்தில் இருந்தாலும் மிகவும் மென்மையான கதாபாத்திரம். ஒரு சில இடங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும், முக்கியமான காட்சிகளில் எல்லாம் சரியான வசன உச்சரிப்பு இல்லாதது கொஞ்சம் சோர்வடைய வைக்கிறது. நாயகி லீமா பாபு படம் முழுக்க வந்தாலும், அவரது கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தவில்லை. பாடல் காட்சிகளுக்கு மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
கூத்து கலைஞராக வரும் பாலாசிங் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். பாலாசிங் மகளாக வரும் அம்மு, ஒருசில காட்சிகளே வந்தாலும், நிறைவாக செய்திருக்கிறார். சம்பத்ராம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இப்படத்தின் இயக்குனர் ‘காதல்’ சுகுமார் இப்படத்தில் இயக்குனராகவே நடித்திருக்கிறார்.
இயக்குனர் ‘காதல்’ சுகுமார், கூத்துக் கலைஞர்களின் வலியையும், வேதனையையும் இந்த படத்தில் காட்ட நினைத்திருக்கிறார். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை விட்டு விலகி, கதையை வேறு கோணத்தில் கொண்டு சென்றுவிட்டார். அதேபோல், கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையையும் இந்த படத்தில் பெரிதாக காட்டவில்லை. நடிகராக நம்மையெல்லாம் கவர்ந்த சுகுமார், இயக்குனராக மாறிய இரண்டு படங்களும் நம்மை கவரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் படத்தில் பெரிதாக எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘சும்மாவே ஆடுவோம்’ ஆட்டம் சரியில்லை.
இருந்தாலும், ஜமீன் ஆனந்துக்கும் யுவராணிக்கும் திருமணமாகி பல ஆண்டு ஆகியும் அவருக்கு குழந்தையே இல்லை என்ற கவலையில் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவரது ஜோசியரான பாண்டு, ஜமீனுக்கு அவர் மனைவி மூலமாக முதல் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும், இரண்டாவதாகவே குழந்தை பிறக்கும் என்றும் கூறுகிறார்.
இதனால் குழப்பத்தில் இருக்கும் ஜமீனின் சூழ்நிலையை புரிந்து, இந்த விஷயம் அறிந்து கூத்துக் கலைஞன் பாலாசிங்கின் மகளான அம்மு, ஜமீன் மூலமாக முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கிறாள். பாதி மனநிலையுடன் அம்முடன் ஒன்று சேருகிறார் ஜமீன். நாட்கள் கடந்ததும் அம்மு கர்ப்பமடைகிறாள். அதேநேரத்தில் யுவராணியும் கர்ப்பமடைகிறாள்.
இருவருக்கும் ஒருநேரத்தில் ஒரே மருத்துவமனையில் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்ததும் அம்மு இறந்துபோகிறாள். ஜமீன் தான் செய்தது பெரிய குற்றமாக நினைத்து, அந்த குழந்தைக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி யுவராணிக்கு பிறந்த குழந்தையையும், அந்த குழந்தையையும் மாற்றி வைத்து விடுகிறார்.
இரண்டு குழந்தைகளுக்கும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். ஜமீன் வீட்டில் வளரும் குழந்தையான அர்ஜுன் சினிமாவில் பெரிய ஹீரோவாகிறார். கூத்துக் கலைஞர்களுடன் வளரும் அருண், மெக்கானிக் கடை வைத்துக் கொண்டு, அர்ஜுனின் தீவிர ரசிகராகவும் இருக்கிறார்.
அர்ஜுனின் தீவிர ரசிகராக இருக்கும் அருணுக்கு ஒரு சூழ்நிலையில், அர்ஜுனின் மாமாவால் அவமானம் நேரிடுகிறது. அர்ஜுனின் மாமா கூத்துக் கலைஞர்களுக்கு ஜமீன் வழங்கிய நிலத்தையெல்லாம் அபகரிக்க நினைக்கிறார். இதனால், சூழ்ச்சி செய்து அந்த நிலத்தை அபகரிக்க திட்டம் போடுகிறார்.
அதன்படி, அர்ஜுனை ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அவமானப்படுத்துவதாக கூறி, அவர்களுக்கு ஒரு சவால் விடுகிறார். அதாவது 30 நாட்களுக்குள் ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு படத்தை எடுத்துக் கொடுத்தால் ஜமீன் நிலத்தை அவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்துவிடுவதாகவும், அப்படி அவர்களால் முடியாவிட்டால் ஜமீன் கொடுத்த நிலத்தையெல்லாம் தன்னிடம் ஒப்படைத்துவிட்டு இந்த ஊரைவிட்டே வெளியேறவேண்டும் என்றும் கூறுகிறார்.
இறுதியில், ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து அந்த சவாலை எதிர்கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தை மீட்டார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
நாயகன் அருண், மெக்கானிக் கடை வைத்திருப்பவராகவும், ஒரு நடிகனின் ரசிகராகவும் அழகாக நடித்திருக்கிறார். டான்ஸ் மற்றும் காதல் காட்சிகள், சண்டை காட்சிகளில் எல்லாம் ஓரளவுக்கு திருப்திப்படுத்தியிருக்கிறார். நடிகராக வரும் அர்ஜுனுக்கு சில காட்சிகளே இருந்தாலும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
ஜமீனாக வரும் ஆனந்தன், முரட்டுத் தோற்றத்தில் இருந்தாலும் மிகவும் மென்மையான கதாபாத்திரம். ஒரு சில இடங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தாலும், முக்கியமான காட்சிகளில் எல்லாம் சரியான வசன உச்சரிப்பு இல்லாதது கொஞ்சம் சோர்வடைய வைக்கிறது. நாயகி லீமா பாபு படம் முழுக்க வந்தாலும், அவரது கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தவில்லை. பாடல் காட்சிகளுக்கு மட்டுமே இவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
கூத்து கலைஞராக வரும் பாலாசிங் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். பாலாசிங் மகளாக வரும் அம்மு, ஒருசில காட்சிகளே வந்தாலும், நிறைவாக செய்திருக்கிறார். சம்பத்ராம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இப்படத்தின் இயக்குனர் ‘காதல்’ சுகுமார் இப்படத்தில் இயக்குனராகவே நடித்திருக்கிறார்.
இயக்குனர் ‘காதல்’ சுகுமார், கூத்துக் கலைஞர்களின் வலியையும், வேதனையையும் இந்த படத்தில் காட்ட நினைத்திருக்கிறார். ஆனால், சொல்ல வந்த விஷயத்தை விட்டு விலகி, கதையை வேறு கோணத்தில் கொண்டு சென்றுவிட்டார். அதேபோல், கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கையையும் இந்த படத்தில் பெரிதாக காட்டவில்லை. நடிகராக நம்மையெல்லாம் கவர்ந்த சுகுமார், இயக்குனராக மாறிய இரண்டு படங்களும் நம்மை கவரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். வில்லியம்ஸ் ஒளிப்பதிவும் படத்தில் பெரிதாக எடுபடவில்லை.
மொத்தத்தில் ‘சும்மாவே ஆடுவோம்’ ஆட்டம் சரியில்லை.
கன்னடத்தில் வெளிவந்த திகில் படம் தமிழில் ‘நான் மாயா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. இது எப்படி இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
நாயகன் ரவிச்சேத்தன், நாயகி காஜல் ராவத்தும் காதலர்கள். இருவரும் ஒரு பங்களாவுக்கு சென்று தனிமையில் உல்லாசமாக இருக்கிறார்கள். அப்போது, எதிர்பாராதவிதமாக காஜல் ராவத் இறந்துபோகிறாள். அவளை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கொண்டு சென்று ஹரிஷ் ராஜ் புதைத்துவிடுகிறான்.
அதன்பின்னர் சில ஆண்டுகள் கழித்து, அந்த பங்களாவுக்கு மாணவர்கள் நான்குபேர் வந்து தங்குகிறார்கள். அவர்களுக்கு அந்த வீட்டில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் தென்படுகிறது. பின்னர், சினிமா படம் எடுக்க வரும் நான்கு பேர் அந்த வீட்டில் தங்க, அவர்களுக்கும் அந்த அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் தெரிகிறது.
ஒருவழியாக அந்த பங்களாவுக்குள் பேய் இருப்பதை இவர்கள் உறுதி செய்கின்றனர். அந்த சூழ்நிலையில் பங்களாவின் காவலாளி மர்மமான முறையில் இறந்துபோக, இவர்களுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையில் பேய்தான் இவரை கொன்றதா? அல்லது வேறு யாராவது கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.
திகில் படத்தை கவர்ச்சி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சுரானா. ஆனால், காட்சிகள் கோர்வையாக இல்லாததால் படத்தை ரசிக்க முடியவில்லை. அதேபோல், திகில் காட்சிகளும் பெரிய அளவில் திகிலை ஏற்படுத்தவில்லை.
படத்தில் நாயகியான காஜல் ராவத், கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை கிளுகிளுப்பாக படமாக்கியிருக்கிறார்கள். நாயகன் ரவிச்சேத்தன் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் குறைவான கதாபாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தாலும், எந்த கதாபாத்திரமும் மனதில் பதியவில்லை.
டேனியலின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பேய் படத்திற்குண்டான பின்னணி இசையை கொடுக்காதது வருத்தமே. பாபு ஒளிப்பதிவு கச்சிதம். குறிப்பாக இரவு நேர காட்சிகளுக்கு சரியான ஒளியமைப்பு வைத்து அழகாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘நான் மாயா’ மயக்கவில்லை.
அதன்பின்னர் சில ஆண்டுகள் கழித்து, அந்த பங்களாவுக்கு மாணவர்கள் நான்குபேர் வந்து தங்குகிறார்கள். அவர்களுக்கு அந்த வீட்டில் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் தென்படுகிறது. பின்னர், சினிமா படம் எடுக்க வரும் நான்கு பேர் அந்த வீட்டில் தங்க, அவர்களுக்கும் அந்த அமானுஷ்ய சக்தி இருப்பதுபோல் தெரிகிறது.
ஒருவழியாக அந்த பங்களாவுக்குள் பேய் இருப்பதை இவர்கள் உறுதி செய்கின்றனர். அந்த சூழ்நிலையில் பங்களாவின் காவலாளி மர்மமான முறையில் இறந்துபோக, இவர்களுக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. உண்மையில் பேய்தான் இவரை கொன்றதா? அல்லது வேறு யாராவது கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.
திகில் படத்தை கவர்ச்சி கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய் சுரானா. ஆனால், காட்சிகள் கோர்வையாக இல்லாததால் படத்தை ரசிக்க முடியவில்லை. அதேபோல், திகில் காட்சிகளும் பெரிய அளவில் திகிலை ஏற்படுத்தவில்லை.
படத்தில் நாயகியான காஜல் ராவத், கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை கிளுகிளுப்பாக படமாக்கியிருக்கிறார்கள். நாயகன் ரவிச்சேத்தன் தனது கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் குறைவான கதாபாத்திரங்களையே பயன்படுத்தியிருந்தாலும், எந்த கதாபாத்திரமும் மனதில் பதியவில்லை.
டேனியலின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பேய் படத்திற்குண்டான பின்னணி இசையை கொடுக்காதது வருத்தமே. பாபு ஒளிப்பதிவு கச்சிதம். குறிப்பாக இரவு நேர காட்சிகளுக்கு சரியான ஒளியமைப்பு வைத்து அழகாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘நான் மாயா’ மயக்கவில்லை.
கேசவராஜன், சாக்ஷி அகர்வால், பவர்ஸ்டார் சீனிவாசன், ஆதவன், கருணாஸ், ரோபா சங்கர் ஆகியோர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கககபோ’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
நாயகன் கேசவராஜன் படித்து விட்டு சென்னையில் தனது நண்பன் ஆதவன் உடன் தங்கி வேலை தேடி வருகிறார். கேசவனுக்கு, அவன் தொட்டதெல்லாம் துலங்காது என்ற ராசி. இப்படியிருக்கும் பட்சத்தில் அவனது குடும்பத்திலும் நிறைய பிரச்சினை இருக்கிறது. அவனுக்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.
அதேநேரத்தில், நாயகி சாக்ஷி அகர்வாலுக்கு நாயகனுக்கு நேர் எதிரான ராசி. தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய ராசி அவளுடையது. இவர்கள் இரண்டு பேருடைய ராசி ஒரேயொரு ஜோசியக்காரருக்கு மட்டுமே தெரியும். அந்த ஜோசியக்காரர் மூலம் நாயகியின் ராசி பற்றி தெரிந்துகொள்ளும் தொழிலதிபர் பஞ்சு சுப்பு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். மறுமுனையில் நாயகியை எதேச்சையாக பார்க்கும் நாயகனும் அவளை ஒருதலையாக காதலித்து வருகிறார்.
நாயகியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக தனது நெருங்கிய நண்பர்கள் 7 பேர் மற்றும் நாயகியின் குடும்பத்தாருக்கும் பஞ்சு சுப்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்தில் மதுவும் பரிமாறப்படுகிறது. அந்த விருந்துக்கு நண்பனுடன் அழையா விருந்தாளியாக வருகிறான் நாயகன். விருந்தில் அனைவரும் மது அருந்த, நாயகியும் மது அருந்து விடுகிறாள்.
பின்னர், மாடிப்படியில் இருந்து இறங்கும்போது, நாயகனும் நாயகியும் மோதி ஒருவருக்கொருவர் உதட்டோடு உதடு முத்தமிட்டு கொள்கிறார்கள். போதையில் இருக்கும் நாயகி என்ன நடந்ததென்று தெரியாமல் எழுந்து போகிறாள். நாயகனும் வீடு திரும்புகிறான். மறுநாள் பார்க்கும்போது நாயகனுக்கு தொடர்ந்து நல்ல விஷயங்களாக நடக்கிறது. அதேநேரத்தில், நாயகிக்கு கெட்ட விஷயங்களாக நடக்கிறது.
தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியாமல் முழிக்கும் நாயகிக்கு அதற்காக காரணம் தெரிய வந்ததா? அவளுடைய வாழ்க்கை எந்த நிலைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கேசவராஜன் ஹீரோயிசம் இல்லாத ஒரு ஹீரோவாக நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். புதுமுகம் என்றாலும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். படம் வெளிவந்துள்ள இந்த சமயத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதுதான் சோகம்.
சாக்ஷி அகர்வாலுக்கு ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம். படத்தின் கதை முழுவதும் இவரைச் சுற்றித்தான் நடக்கிறது. அதனால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் இவரது கதாபாத்திரத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு. மேக்கப் மட்டும் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.
தொழிலதிபராக வரும் பஞ்சு சுப்பு அந்த கெட்டப்புக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேபோல், திருநங்கை கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பஞ்சு சுப்புவின் நண்பர்களாக வரும் பவர் ஸ்டார், ரோபோ சங்கர், கருணாஸ், மதன்பாப், மயில்சாமி, சாண்டி உள்ளிட்டோரும் நாயகனின் நண்பனாக வரும் ஆதவனும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மந்திரவாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வரும் காட்சிகள் எல்லாம் கலகல காமெடி.
இயக்குனர் விஜய் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை படமாக கொடுத்திருக்கிறார். மூடநம்பிக்கையாக கருதப்படும் ராசி, ஜோசியத்தை வைத்துக்கொண்டு அதில், நகைச்சுவை கலந்து ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், எல்லோருக்கும் சமமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக, பவர் ஸ்டாருக்கு இந்த படத்தில் தனியாக ஒரு பாடல் வேறு கொடுத்து அசத்தியிருக்கிறார்.
தினா, ஹமரா, பி.சி.சிவம் ஆகியோர் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசை ரொம்பவும் நன்றாகவே உள்ளது. இக்பால் ஒளிப்பதிவு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையாக உள்ளது.
மொத்தத்தில் ‘கககபோ’ கலகல காமெடி.
அதேநேரத்தில், நாயகி சாக்ஷி அகர்வாலுக்கு நாயகனுக்கு நேர் எதிரான ராசி. தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய ராசி அவளுடையது. இவர்கள் இரண்டு பேருடைய ராசி ஒரேயொரு ஜோசியக்காரருக்கு மட்டுமே தெரியும். அந்த ஜோசியக்காரர் மூலம் நாயகியின் ராசி பற்றி தெரிந்துகொள்ளும் தொழிலதிபர் பஞ்சு சுப்பு அவளை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். மறுமுனையில் நாயகியை எதேச்சையாக பார்க்கும் நாயகனும் அவளை ஒருதலையாக காதலித்து வருகிறார்.
நாயகியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக தனது நெருங்கிய நண்பர்கள் 7 பேர் மற்றும் நாயகியின் குடும்பத்தாருக்கும் பஞ்சு சுப்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த விருந்தில் மதுவும் பரிமாறப்படுகிறது. அந்த விருந்துக்கு நண்பனுடன் அழையா விருந்தாளியாக வருகிறான் நாயகன். விருந்தில் அனைவரும் மது அருந்த, நாயகியும் மது அருந்து விடுகிறாள்.
பின்னர், மாடிப்படியில் இருந்து இறங்கும்போது, நாயகனும் நாயகியும் மோதி ஒருவருக்கொருவர் உதட்டோடு உதடு முத்தமிட்டு கொள்கிறார்கள். போதையில் இருக்கும் நாயகி என்ன நடந்ததென்று தெரியாமல் எழுந்து போகிறாள். நாயகனும் வீடு திரும்புகிறான். மறுநாள் பார்க்கும்போது நாயகனுக்கு தொடர்ந்து நல்ல விஷயங்களாக நடக்கிறது. அதேநேரத்தில், நாயகிக்கு கெட்ட விஷயங்களாக நடக்கிறது.
தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியாமல் முழிக்கும் நாயகிக்கு அதற்காக காரணம் தெரிய வந்ததா? அவளுடைய வாழ்க்கை எந்த நிலைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கேசவராஜன் ஹீரோயிசம் இல்லாத ஒரு ஹீரோவாக நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். புதுமுகம் என்றாலும் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார். படம் வெளிவந்துள்ள இந்த சமயத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதுதான் சோகம்.
சாக்ஷி அகர்வாலுக்கு ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம். படத்தின் கதை முழுவதும் இவரைச் சுற்றித்தான் நடக்கிறது. அதனால், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாகவே நடித்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகு யாரும் எதிர்பார்க்காத வகையில் இவரது கதாபாத்திரத்தை கொண்டு போயிருப்பது சிறப்பு. மேக்கப் மட்டும் குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.
தொழிலதிபராக வரும் பஞ்சு சுப்பு அந்த கெட்டப்புக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதேபோல், திருநங்கை கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பஞ்சு சுப்புவின் நண்பர்களாக வரும் பவர் ஸ்டார், ரோபோ சங்கர், கருணாஸ், மதன்பாப், மயில்சாமி, சாண்டி உள்ளிட்டோரும் நாயகனின் நண்பனாக வரும் ஆதவனும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மந்திரவாதியாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் வரும் காட்சிகள் எல்லாம் கலகல காமெடி.
இயக்குனர் விஜய் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை படமாக கொடுத்திருக்கிறார். மூடநம்பிக்கையாக கருதப்படும் ராசி, ஜோசியத்தை வைத்துக்கொண்டு அதில், நகைச்சுவை கலந்து ரசிகர்களின் ரசனைக்கேற்ப ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், எல்லோருக்கும் சமமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். குறிப்பாக, பவர் ஸ்டாருக்கு இந்த படத்தில் தனியாக ஒரு பாடல் வேறு கொடுத்து அசத்தியிருக்கிறார்.
தினா, ஹமரா, பி.சி.சிவம் ஆகியோர் இசையில் பாடல்கள் சூப்பர். பின்னணி இசை ரொம்பவும் நன்றாகவே உள்ளது. இக்பால் ஒளிப்பதிவு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையாக உள்ளது.
மொத்தத்தில் ‘கககபோ’ கலகல காமெடி.






