என் மலர்
தரவரிசை
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் ‘பெய்யென பெய்யும் குருதி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சியின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூடுகிறது. இந்த கூட்டத்திற்கு வரும் முக்கிய தலைவர்களில் 40 பேரை மட்டும் மர்ம நபர்கள் சிலர், கொன்று அவர்களுடைய இதயத்தை எடுத்து சென்று விடுகிறார்கள்.
இந்த சம்பவம் தமிழகம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில் இறங்கும் போலீஸ் குழு, சம்பவ இடத்தில் இருந்த நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோரை பிடித்து வைத்து விசாரிக்கிறது. அந்த விசாரணையில், இவர்கள் ஐந்து பேரும்தான் அந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
அப்பாவிகளான இவர்களுக்கு பணத்தாசை காட்டி, இவர்களை கொலை செய்ய வைத்தது வேறொரு நபர் என்றும் தெரிய வருகிறது. இவர்களை கொலை செய்ய தூண்டிய அந்த மர்ம நபர் யார்? எதற்காக அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்களை அவர் கொலை செய்ய வைத்தார்? என்பதே மீதிக்கதை.
நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய கதாபாத்திரத்தையும் வெவ்வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த கதாபாத்திரங்களை உணர்ந்து இவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இயக்குனர் சுதாகர் சண்முகம் இன்றைய சினிமா உலகில் பெண்களே இல்லாத ஒரு படத்தை தைரியமாக இயக்கியிருக்கிறார். கதையாக இப்படத்தை கேட்கும்போது சுவாரஸ்யமாகவும், திரில்லாகவும் இருக்கிறது. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதத்தில் சுவாரஸ்யத்தையும், திரில்லையும் கொடுக்க தவறிவிட்டார். கொலை, கொலைக்கான விசாரணை என குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால் படத்தை தொடர்ந்து ரசிக்க முடியவில்லை.
தமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதை என்றாலும், அதை மாறுபட்ட கோணத்தில் சொன்னவிதம் அருமை.
சீனிவாசன், கணேஷ் பாபு ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறிது பலம் கூட்டியிருக்கிறது. ஜோஸ் பிராங்களின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘பெய்யென பெய்யும் குருதி’ புதிய முயற்சி.
இந்த சம்பவம் தமிழகம் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. இதுகுறித்த விசாரணையில் இறங்கும் போலீஸ் குழு, சம்பவ இடத்தில் இருந்த நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோரை பிடித்து வைத்து விசாரிக்கிறது. அந்த விசாரணையில், இவர்கள் ஐந்து பேரும்தான் அந்த கொலையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
அப்பாவிகளான இவர்களுக்கு பணத்தாசை காட்டி, இவர்களை கொலை செய்ய வைத்தது வேறொரு நபர் என்றும் தெரிய வருகிறது. இவர்களை கொலை செய்ய தூண்டிய அந்த மர்ம நபர் யார்? எதற்காக அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்களை அவர் கொலை செய்ய வைத்தார்? என்பதே மீதிக்கதை.
நாயகர்களான ஜனா, சீனிவாசன், ஹரிஸ், கணேசன், ராபின் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடைய கதாபாத்திரத்தையும் வெவ்வேறு கோணத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அந்த கதாபாத்திரங்களை உணர்ந்து இவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இயக்குனர் சுதாகர் சண்முகம் இன்றைய சினிமா உலகில் பெண்களே இல்லாத ஒரு படத்தை தைரியமாக இயக்கியிருக்கிறார். கதையாக இப்படத்தை கேட்கும்போது சுவாரஸ்யமாகவும், திரில்லாகவும் இருக்கிறது. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதத்தில் சுவாரஸ்யத்தையும், திரில்லையும் கொடுக்க தவறிவிட்டார். கொலை, கொலைக்கான விசாரணை என குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை சுற்றியே கதை நகர்வதால் படத்தை தொடர்ந்து ரசிக்க முடியவில்லை.
தமிழ் சினிமாவுக்கு வழக்கமான பழிவாங்கும் கதை என்றாலும், அதை மாறுபட்ட கோணத்தில் சொன்னவிதம் அருமை.
சீனிவாசன், கணேஷ் பாபு ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு சிறிது பலம் கூட்டியிருக்கிறது. ஜோஸ் பிராங்களின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘பெய்யென பெய்யும் குருதி’ புதிய முயற்சி.
கிறிஸ் பிராட், ஜெனிஃபர் லாரன்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'பாசஞ்சர்ஸ்' திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்...
ஹோம்ஸ்டெட் என்ற நிறுவனம் 'தி குளோனி வேர்ல்ட் ஆப் ஹோம்ஸ்டெட்' என்ற உலகத்தை உருவாக்குகின்றனர். இந்த உலகத்திற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என ஹோம்ஸ்டெட் நிறுவனம் கூறுகிறது. இதனைத் தொடர்ந்து கதாநாயகன் கிறிஸ் பிராட், கதாநாயகி ஜெனிஃபர் லாரன்ஸ் உட்பட கம்பெனியின் 258 ஊழியர்களுடன், 5000 பயணிகள் விண்கலமொன்றில் அந்த உலகத்துக்கு பயணம் செய்கின்றனர்.
அந்த உலகத்துக்கு பயணம் செய்ய 120 ஆண்டுகள் ஆகுமென்பதால் விண்கலத்தில் பயணம் செய்யும் அனைவரும், விண்வெளித் தூக்கத்துக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். (இந்த விண்வெளித் தூக்கத்தால் 120 ஆண்டுகள் பயணம் செய்தாலும் தூங்கி அடுத்த நாள் எழுந்தது போல இருக்கும்). பயணத்தின் இடையில் கதாநாயகன் கிறிஸ் பிராட்டுக்கு திடீரென விழிப்பு வந்துவிடுகிறது.
விண்கலத்தில் இருக்கும் கணினி நாம் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது. பயணத்துக்கான ஆயத்தங்களை செய்து கொள்ளுங்கள் எனக் கூறுகிறது. இதனை நம்பி கிறிஸ் பிராட்டும் தனது வேலைகளைத் தொடர்கிறார். ஆனால் விண்கலத்தில் பயணிக்கும் மற்ற யாரும் தங்களது உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. இதனால் கிறிஸ் பிராட்டுக்கு சந்தேகம் வந்து இதற்கான காரணத்தை ஆராய்கிறார். அப்போது 90 ஆண்டுகளுக்கு முன்பே தான் எழுந்துவிட்ட உண்மை அவருக்குத் தெரிகிறது.
90 ஆண்டுகள் தனியாக என்ன செய்வது எனத் தெரியாமல் கிறிஸ் பிராட் தவிக்கிறார். தனது வாழ்க்கை வீணாகி விட்டதே என சோகமாகிறார். தனிமையில் தவிக்கும்போது சில நேரங்களில் கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பலாமா? என யோசிக்கிறார். இப்படியே ஒரு வருடம் செல்கிறது. தனிமையில் தவிக்கும் கிறிஸ் பிராட் ஒரு கட்டத்தில் துணிந்து கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றனர். இதற்கிடையில் ஜெனிபர் லோபஸ்-கிறிஸ் பிராட் இடையே காதல் மலர்கிறது.
இறுதியில் விண்கலத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அந்த உலகத்துக்கு சென்றனரா? தன்னை உறக்கத்தில் இருந்து எழுப்பியது யார் என்ற உண்மை நாயகி ஜெனிபருக்குத் தெரிந்ததா? தான் எழுந்ததற்கான காரணத்தை கதாநாயகன் கிறிஸ் பிராட் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
குறைவான கதாபாத்திரங்கள் என்றாலும் இயக்குனர் மோர்டென் டில்டம் கதையை ரசிகர்களுக்கு போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். கிறிஸ் பிராட், ஜெனிபர் லோபஸ் இருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். ரோட்ரிகோ பிரிட்டோவின் ஒளிப்பதிவும், தாமஸ் நியுமேன் இசையும் படத்திற்கு பக்கபலம்.
மொத்தத்தில் இந்த 'பாசஞ்சர்ஸ்' பயணம் இனிதானது...
அந்த உலகத்துக்கு பயணம் செய்ய 120 ஆண்டுகள் ஆகுமென்பதால் விண்கலத்தில் பயணம் செய்யும் அனைவரும், விண்வெளித் தூக்கத்துக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். (இந்த விண்வெளித் தூக்கத்தால் 120 ஆண்டுகள் பயணம் செய்தாலும் தூங்கி அடுத்த நாள் எழுந்தது போல இருக்கும்). பயணத்தின் இடையில் கதாநாயகன் கிறிஸ் பிராட்டுக்கு திடீரென விழிப்பு வந்துவிடுகிறது.
விண்கலத்தில் இருக்கும் கணினி நாம் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது. பயணத்துக்கான ஆயத்தங்களை செய்து கொள்ளுங்கள் எனக் கூறுகிறது. இதனை நம்பி கிறிஸ் பிராட்டும் தனது வேலைகளைத் தொடர்கிறார். ஆனால் விண்கலத்தில் பயணிக்கும் மற்ற யாரும் தங்களது உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. இதனால் கிறிஸ் பிராட்டுக்கு சந்தேகம் வந்து இதற்கான காரணத்தை ஆராய்கிறார். அப்போது 90 ஆண்டுகளுக்கு முன்பே தான் எழுந்துவிட்ட உண்மை அவருக்குத் தெரிகிறது.
90 ஆண்டுகள் தனியாக என்ன செய்வது எனத் தெரியாமல் கிறிஸ் பிராட் தவிக்கிறார். தனது வாழ்க்கை வீணாகி விட்டதே என சோகமாகிறார். தனிமையில் தவிக்கும்போது சில நேரங்களில் கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பலாமா? என யோசிக்கிறார். இப்படியே ஒரு வருடம் செல்கிறது. தனிமையில் தவிக்கும் கிறிஸ் பிராட் ஒரு கட்டத்தில் துணிந்து கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றனர். இதற்கிடையில் ஜெனிபர் லோபஸ்-கிறிஸ் பிராட் இடையே காதல் மலர்கிறது.
இறுதியில் விண்கலத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அந்த உலகத்துக்கு சென்றனரா? தன்னை உறக்கத்தில் இருந்து எழுப்பியது யார் என்ற உண்மை நாயகி ஜெனிபருக்குத் தெரிந்ததா? தான் எழுந்ததற்கான காரணத்தை கதாநாயகன் கிறிஸ் பிராட் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
குறைவான கதாபாத்திரங்கள் என்றாலும் இயக்குனர் மோர்டென் டில்டம் கதையை ரசிகர்களுக்கு போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். கிறிஸ் பிராட், ஜெனிபர் லோபஸ் இருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். ரோட்ரிகோ பிரிட்டோவின் ஒளிப்பதிவும், தாமஸ் நியுமேன் இசையும் படத்திற்கு பக்கபலம்.
மொத்தத்தில் இந்த 'பாசஞ்சர்ஸ்' பயணம் இனிதானது...
அறிமுக நடிகர் குரு அரவிந்த், சாமந்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் 'சூரத்தேங்காய்' படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்.
சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகிறார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான். தானுண்டு தனது வேலையுண்டு என அமைதியாக இருக்கும் குரு அரவிந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.
குரு அரவிந்தின் மாமன் மகள் சாமந்தி (கதாநாயகி) அதே ஊரில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். சாமந்திக்கு குரு அரவிந்த் மீது காதல். அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் நாயகன் குரு அரவிந்த் நாயகியைக் கண்டுகொள்ளாமல் சதாசர்வகாலமும் குடித்துக் கொண்டே இருக்கிறார்.
அந்த ஊரின் கவுன்சிலர் தனது நான்கு தம்பிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சிறு வயதில் குரு அரவிந்தின் தந்தையிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் கவுன்சிலர் அவரது தந்தையைக் கொன்று விடுகிறார். இதனை நேரில் பார்க்கும் குரு அரவிந்த் இதன் காரணமாக மிகுந்த அமைதியுடன் தனது வேலைகளைப் பார்த்து வருகிறார்.
ஒருகட்டத்தில் குரு அரவிந்த்தின் அம்மா குடியை விட்டுவிடும்படி மகனிடம் கெஞ்சுகிறார். அம்மாவின் வார்த்தைகள் குரு அரவிந்தின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடியை விட்டு விடுகிறார்.
மேலும், சாமந்தியிடமும் நன்றாகப் பேசி பழகுகிறார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாமந்தியின் பெற்றோர் இடத்தை கவுன்சிலர் தனது தம்பிகளுடன் சேர்ந்து அபகரிக்கப் பார்க்கிறார். இதனால் குரு அரவிந்துக்கும், கவுன்சிலருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.
இந்த மோதலில் கவுன்சிலர் மற்றும் அவரது தம்பிகளை எதிர்த்து குரு அரவிந்த் வெற்றி பெற்றாரா? சாமந்தியைக் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் குரு அரவிந்த் நன்றாக நடித்திருக்கிறார். நடனம், ஆக்ஷன் காட்சிகளிலும் நன்றாக செய்திருக்கிறார். துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக நடித்திருக்கும் நாயகி சாமந்தி தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். நாயகன் குரு அரவிந்த்தின் உறவினராக படம் முழுவதும் வரும் துணை நடிகர் ஜெயமணி படத்தில் காமெடி நடிகர் இல்லாத குறையைப் போக்கி படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.
சக்தியின் இசையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. குடி தொடர்பாக இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் நன்றாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் அழுத்தம் இல்லை. இதனால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது.
மொத்தத்தில் 'சூரத்தேங்காய்' பலம் குறைவு.
குரு அரவிந்தின் மாமன் மகள் சாமந்தி (கதாநாயகி) அதே ஊரில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். சாமந்திக்கு குரு அரவிந்த் மீது காதல். அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் நாயகன் குரு அரவிந்த் நாயகியைக் கண்டுகொள்ளாமல் சதாசர்வகாலமும் குடித்துக் கொண்டே இருக்கிறார்.
அந்த ஊரின் கவுன்சிலர் தனது நான்கு தம்பிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சிறு வயதில் குரு அரவிந்தின் தந்தையிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் கவுன்சிலர் அவரது தந்தையைக் கொன்று விடுகிறார். இதனை நேரில் பார்க்கும் குரு அரவிந்த் இதன் காரணமாக மிகுந்த அமைதியுடன் தனது வேலைகளைப் பார்த்து வருகிறார்.
ஒருகட்டத்தில் குரு அரவிந்த்தின் அம்மா குடியை விட்டுவிடும்படி மகனிடம் கெஞ்சுகிறார். அம்மாவின் வார்த்தைகள் குரு அரவிந்தின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடியை விட்டு விடுகிறார்.
மேலும், சாமந்தியிடமும் நன்றாகப் பேசி பழகுகிறார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாமந்தியின் பெற்றோர் இடத்தை கவுன்சிலர் தனது தம்பிகளுடன் சேர்ந்து அபகரிக்கப் பார்க்கிறார். இதனால் குரு அரவிந்துக்கும், கவுன்சிலருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.
இந்த மோதலில் கவுன்சிலர் மற்றும் அவரது தம்பிகளை எதிர்த்து குரு அரவிந்த் வெற்றி பெற்றாரா? சாமந்தியைக் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் குரு அரவிந்த் நன்றாக நடித்திருக்கிறார். நடனம், ஆக்ஷன் காட்சிகளிலும் நன்றாக செய்திருக்கிறார். துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக நடித்திருக்கும் நாயகி சாமந்தி தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். நாயகன் குரு அரவிந்த்தின் உறவினராக படம் முழுவதும் வரும் துணை நடிகர் ஜெயமணி படத்தில் காமெடி நடிகர் இல்லாத குறையைப் போக்கி படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.
சக்தியின் இசையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. குடி தொடர்பாக இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் நன்றாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் அழுத்தம் இல்லை. இதனால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது.
மொத்தத்தில் 'சூரத்தேங்காய்' பலம் குறைவு.
ராம் சரண், பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'சூப்பர் போலீஸ்' திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்.
அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக இருக்கும் ஹீரோ ராம்சரண் எங்கு அநியாயம் நடந்தாலும் உடனே தட்டிக் கேட்கிறார். இதன் காரணமாக 21 முறை வெவ்வேறு ஊர்களுக்கு ராம்சரண் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். எனினும் டிரான்ஸ்பருக்கு அஞ்சாத ராம்சரண் போராட்டம் நடத்தி போக்குவரத்தைக் தொந்தரவு செய்ததாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை அடித்து விடுகிறார். இதனால் 22-வது முறையாக மும்பைக்கு ராம்சரண் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.
இதற்கிடையில் தந்து தோழியின் திருமணத்திற்காக நியூயார்க்கிலிருந்து ஹீரோயின் பிரியங்கா சோப்ரா மும்பை வருகிறார். திருமணம் முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு பிரியங்கா சோப்ரா திரும்பும்போது வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் இறங்குகிறார்.
அங்கு ஒரு கும்பல் பெட்ரோலில் கலப்படம் செய்கிறது. இதனை அந்த வழியாக செல்லும் துணை கலெக்டர் தட்டிக்கேட்க அவரை அந்தக் கும்பல் உயிருடன் எரித்து விடுகிறது. இதனைப் பார்க்கும் பிரியங்கா சோப்ரா போலீசுக்கு போன் செய்து இந்த கொலை நடந்ததாக தெரிவிக்கிறார்.
இந்த வழக்கு ராம்சரண் கைக்கு வருகிறது. இதுகுறித்து விசாரணை செய்யும் ராம்சரண் கொலை தொடர்பாக பிரியங்கா சோப்ராவை சந்தித்து விளக்கம் கேட்கிறார். ஆரம்பத்தில் ராம்சரண் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பிரியங்கா சோப்ரா, ராம்சரணின் அறிவுரையால் மனம் மாறி தனக்குத் தெரிந்த விவரங்களை ராம்சரணிடம் தெரிவிக்கிறார்.
இதற்கிடையில் போலீசில் உண்மையை சொன்னதற்காக பிரியங்கா சோப்ராவை அந்த கும்பல் தொந்தரவு செய்கிறது. இதனால் ராம்சரண், பிரியங்கா சோப்ராவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துக்கொள்கிறார். பின்னர், பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இது ஒரு சாதாரண வழக்கு இல்லை, ஆயில் மாபியா என்ற மிகப்பெரிய நெட்வொர்க் கும்பல் இந்த வழக்குக்குப் பின்னால் இருக்கிறது என்ற உண்மை ராம்சரணுக்குத் தெரிய வருகிறது. இதனால் ஆயில் மாபியா நெட்வொர்க் குறித்த விவரங்களை ராம்சரண் சேகரிக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில் அந்த ஆயில் மாபியா கும்பலை ராம்சரண் ஒழித்தாரா? பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இடையிலான காதல் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் ராம்சரண் தனது பாணியில் நடிப்பு, நடனம், ஆக்ஷன் என எதிலும் குறைவைக்கவில்லை. ஏசிபி வேடத்திற்கு ராம்சரண் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கதாநாயகி பிரியங்கா சோப்ரா தனது வழக்கமான நாயகி ரோலை நிறைவாக செய்திருக்கிறார்.
இயக்குனர் அபூர்வா லாகியா ஒரு ஆக்ஷன் படத்தை விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறார். ஆர்.ஜே.குருராஜின் ஒளிப்பதிவில் பாடல்கள், காட்சிகள் அனைத்தும் கலர்புல் ரகம். வழக்கம்போல இல்லாமல் அமர் முஹில், ஆனந்த் ராய் ஆனந்த், சிரந்தன் பத், மீட் புரோஸ் அஞ்சன் என இப்படத்துக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.
காட்சிகள், திரைக்கதை ஆகியவற்றில் ஒருசில குறைகள் இருந்தாலும் ராம்சரணின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
மொத்தத்தில் 'சூப்பர் போலீஸ்' ஆக்ஷன் மசாலா.
இதற்கிடையில் தந்து தோழியின் திருமணத்திற்காக நியூயார்க்கிலிருந்து ஹீரோயின் பிரியங்கா சோப்ரா மும்பை வருகிறார். திருமணம் முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு பிரியங்கா சோப்ரா திரும்பும்போது வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் இறங்குகிறார்.
அங்கு ஒரு கும்பல் பெட்ரோலில் கலப்படம் செய்கிறது. இதனை அந்த வழியாக செல்லும் துணை கலெக்டர் தட்டிக்கேட்க அவரை அந்தக் கும்பல் உயிருடன் எரித்து விடுகிறது. இதனைப் பார்க்கும் பிரியங்கா சோப்ரா போலீசுக்கு போன் செய்து இந்த கொலை நடந்ததாக தெரிவிக்கிறார்.
இந்த வழக்கு ராம்சரண் கைக்கு வருகிறது. இதுகுறித்து விசாரணை செய்யும் ராம்சரண் கொலை தொடர்பாக பிரியங்கா சோப்ராவை சந்தித்து விளக்கம் கேட்கிறார். ஆரம்பத்தில் ராம்சரண் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பிரியங்கா சோப்ரா, ராம்சரணின் அறிவுரையால் மனம் மாறி தனக்குத் தெரிந்த விவரங்களை ராம்சரணிடம் தெரிவிக்கிறார்.
இதற்கிடையில் போலீசில் உண்மையை சொன்னதற்காக பிரியங்கா சோப்ராவை அந்த கும்பல் தொந்தரவு செய்கிறது. இதனால் ராம்சரண், பிரியங்கா சோப்ராவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துக்கொள்கிறார். பின்னர், பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இது ஒரு சாதாரண வழக்கு இல்லை, ஆயில் மாபியா என்ற மிகப்பெரிய நெட்வொர்க் கும்பல் இந்த வழக்குக்குப் பின்னால் இருக்கிறது என்ற உண்மை ராம்சரணுக்குத் தெரிய வருகிறது. இதனால் ஆயில் மாபியா நெட்வொர்க் குறித்த விவரங்களை ராம்சரண் சேகரிக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில் அந்த ஆயில் மாபியா கும்பலை ராம்சரண் ஒழித்தாரா? பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இடையிலான காதல் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் ராம்சரண் தனது பாணியில் நடிப்பு, நடனம், ஆக்ஷன் என எதிலும் குறைவைக்கவில்லை. ஏசிபி வேடத்திற்கு ராம்சரண் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கதாநாயகி பிரியங்கா சோப்ரா தனது வழக்கமான நாயகி ரோலை நிறைவாக செய்திருக்கிறார்.
இயக்குனர் அபூர்வா லாகியா ஒரு ஆக்ஷன் படத்தை விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறார். ஆர்.ஜே.குருராஜின் ஒளிப்பதிவில் பாடல்கள், காட்சிகள் அனைத்தும் கலர்புல் ரகம். வழக்கம்போல இல்லாமல் அமர் முஹில், ஆனந்த் ராய் ஆனந்த், சிரந்தன் பத், மீட் புரோஸ் அஞ்சன் என இப்படத்துக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.
காட்சிகள், திரைக்கதை ஆகியவற்றில் ஒருசில குறைகள் இருந்தாலும் ராம்சரணின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
மொத்தத்தில் 'சூப்பர் போலீஸ்' ஆக்ஷன் மசாலா.
பகவதி பாலா, செல்வா, காயத்ரி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘தலையாட்டி பொம்மை’ திரைப்படம் எப்படியிருக்கிறது? என்பதைக் கீழே பார்ப்போம்.
ஒரு வீட்டில் வசிக்கும் மூன்று நண்பர்கள் பெண்களை ஏமாற்றி தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களைக் கெடுத்துக் கொன்று விடுகின்றனர். ஒருநாள் ஹீரோயின் காயத்ரி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி வருகிறார். மூன்று நண்பர்களில் ஆட்டோ டிரைவராக வரும் பகவதி பாலா காயத்ரி மற்றும் அவரது காதலனை ஏமாற்றி தங்களது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து காயத்ரியின் காதலனைக் கொன்று விடுகின்றனர். காதலனை காப்பாற்றப் போராடும் காயத்ரியையும் அடித்து விடுகின்றனர். இதில் காயத்ரி மயக்கமடைந்து விடுகிறார். ஆனால், காயத்ரி இறந்து விட்டதாகக் கருதும் மூவரும் வீட்டின் தோட்டக்காரனை அழைத்து நாயகியை வீட்டிற்கு பின்னால் புதைத்து விடும்படி கூறுகின்றனர்.
இதற்கிடையில் காயத்ரி உயிரோடு இருப்பதை அறிந்த தோட்டக்காரன் அவர் மீது இரக்கம் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுக்கிறார். நண்பர்கள் மூவரும் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் அமெரிக்காவிலிருந்து வர, தோட்டக்காரன் மற்றும் வீட்டின் உரிமையாளர் உதவியுடன் காயத்ரி அந்த வீட்டில் வந்து தங்குகிறார்.
வீட்டில் அவரைப் பார்க்கும் நண்பர்கள் மூவரும் காயத்ரி பேய் வடிவில் வந்து விட்டதாக பயப்படுகின்றனர். அதற்கேற்றவாறு காயத்ரியும் பேய் போல நடித்து நண்பர்கள் மூவரையும் மிரட்டுகிறார். ஒருகட்டத்தில் காயத்ரிக்கு உண்மையிலேயே பேய் பிடிக்கிறது. இறுதியில் காயத்ரியைப் பிடித்த பேய் அவளைவிட்டு விலகியதா? நண்பர்கள் மூவரும் திருந்தினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
'தலையாட்டி பொம்மை' என தலைப்பு வைத்து பேய்க்கதை ஒன்றை திகிலுடன் சொல்ல இயக்குனர் பகவதி பாலா முயற்சி செய்திருக்கிறார். ஆனால், தொடர்பில்லாத கதை, வலுவில்லாத திரைக்கதை, மோசமான ஒளிப்பதிவு, தெரிந்த நடிகர்கள் இல்லாதது போன்றவற்றால் அவரின் முயற்சி ரசிகர்களைக் கவரவில்லை.
மொத்தத்தில் 'தலையாட்டி பொம்மை' தள்ளாட்டம்.
நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து காயத்ரியின் காதலனைக் கொன்று விடுகின்றனர். காதலனை காப்பாற்றப் போராடும் காயத்ரியையும் அடித்து விடுகின்றனர். இதில் காயத்ரி மயக்கமடைந்து விடுகிறார். ஆனால், காயத்ரி இறந்து விட்டதாகக் கருதும் மூவரும் வீட்டின் தோட்டக்காரனை அழைத்து நாயகியை வீட்டிற்கு பின்னால் புதைத்து விடும்படி கூறுகின்றனர்.
இதற்கிடையில் காயத்ரி உயிரோடு இருப்பதை அறிந்த தோட்டக்காரன் அவர் மீது இரக்கம் கொண்டு தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அடைக்கலம் கொடுக்கிறார். நண்பர்கள் மூவரும் தங்கியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் அமெரிக்காவிலிருந்து வர, தோட்டக்காரன் மற்றும் வீட்டின் உரிமையாளர் உதவியுடன் காயத்ரி அந்த வீட்டில் வந்து தங்குகிறார்.
வீட்டில் அவரைப் பார்க்கும் நண்பர்கள் மூவரும் காயத்ரி பேய் வடிவில் வந்து விட்டதாக பயப்படுகின்றனர். அதற்கேற்றவாறு காயத்ரியும் பேய் போல நடித்து நண்பர்கள் மூவரையும் மிரட்டுகிறார். ஒருகட்டத்தில் காயத்ரிக்கு உண்மையிலேயே பேய் பிடிக்கிறது. இறுதியில் காயத்ரியைப் பிடித்த பேய் அவளைவிட்டு விலகியதா? நண்பர்கள் மூவரும் திருந்தினார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
'தலையாட்டி பொம்மை' என தலைப்பு வைத்து பேய்க்கதை ஒன்றை திகிலுடன் சொல்ல இயக்குனர் பகவதி பாலா முயற்சி செய்திருக்கிறார். ஆனால், தொடர்பில்லாத கதை, வலுவில்லாத திரைக்கதை, மோசமான ஒளிப்பதிவு, தெரிந்த நடிகர்கள் இல்லாதது போன்றவற்றால் அவரின் முயற்சி ரசிகர்களைக் கவரவில்லை.
மொத்தத்தில் 'தலையாட்டி பொம்மை' தள்ளாட்டம்.
வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ‘அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், அதே பெயரில் ஹாலிவுட் திரைப்படமாக உருவாகியுள்ளது. கடும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
வீடியோ விளையாட்டுகளாக உருவான கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பெரிய திரைக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் பல பெரிய அளவிலான வெற்றியை தரவில்லை என்ற மனக்குறையும், அதிருப்தியும் பலகாலமாக ரசிகர்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.
அவ்வகையில், வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ’அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், ஹாலிவுட்டில் பெரிய திரைக்கான சினிமாப் படமாக உருவாகவுள்ளது என்ற செய்திகளும், இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலும், அதையடுத்து வெளியான ஆர்ப்பாட்டமான டிரெய்லரும் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒருவிதமான ஆர்வத்தீயை மூட்டி விட்டிருந்தன என்றால், அது மிகையல்ல.
சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ’அஸஸின்ஸ் கிரீட்’ திரைப்படம், அந்த ஆர்வத்தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்துள்ளதா? அல்லது, நீர்த்துப்போக வைத்துள்ளதா? என்பதை இங்கே பார்ப்போம்!
விபச்சார தரகரை கொன்ற குற்றத்துக்காக படத்தின் நாயகன் கேல்லம் லின்ச்-க்கு (மைக்கேல் ஃபாஸ்பென்டர்) மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அவனது நன்னடத்தையை காரணம் காட்டி, தண்டனை ரத்து செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.
இந்த மன்னிப்புக்கும், விடுதலைக்கும் பின்னணியில் பிரபல கோடீஸ்வரருக்கு சொந்தமான ஒரு தொழில் நிறுவனம் இருந்துள்ள ரகசியம் கேல்லம் லின்ச்சுக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், சாலமன் மன்னரின் காலத்திலும் நடைபெற்ற சிலுவை யுத்தங்களை எதிர்த்துவந்த புனிதப் போராளிகளின் வம்சாவழியை சேர்ந்த அகுலய்ர் டி நெர்ஹா என்பவரின் நேரடி வழித்தோன்றலான கேல்லம் லின்ச்சை வைத்து, உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கோடீஸ்வரரின் ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் தெரிவிக்கிறது.
‘அனிமஸ்’ என்ற இயந்திரத்துடன் கேல்லம் லின்ச் இணைக்கப்படுகிறான். அந்த இயந்திரத்தின் உதவியுடனும், அவனது மூதாதையரான அகுலய்ர் டி நெர்ஹாவின் பழைய நினைவலைகளின் துணையுடனும் ’ஏடனின் ஆப்பிள்’ என்ற கருவியைத் தேடி, கண்டுபிடிக்கும் காரியத்தில் கடந்தகாலத்தை நோக்கி, கேல்லம் லின்ச் களமிறக்கப்படுகிறான்.
ஆனால், இந்த சாகசத் தேடலில் எல்லாமே திட்டமிட்டப்படி நடக்க சாத்தியமில்லை. தனது வாழ்க்கையைப்பற்றி அறியவந்த சில உண்மைகள் பொய்யான புனைக்கதைகள் என்பதை உணருகிறான்.
அவனை இந்த அரிதான காரியத்தில் களமிறக்கிய ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் உண்மையிலேயே உலக அமைதியை விரும்புகிறதா?, ஏடனின் ஆப்பிளை அந்த நிறுவனம் பெறுமா? என்ற கேள்விக்கு ’அஸஸின்ஸ் கிரீட்’ படம் பதில் தருகிறது.
புவிஈர்ப்பு விசைக்கு வசப்படாமல் அந்தரத்தில் உயரப் பறக்கும் சாகச காட்சிகள், கடந்த காலத்தின் பக்கம் பின்நோக்கி செல்லுதல் போன்ற ’அஸஸின்ஸ் கிரீட்’ விளையாட்டின் சிறப்பம்சங்களையும், இந்தப் படத்தின் டிரெய்லரையும் ஒப்பிட்டு பார்த்து, பரவசப்பட்ட ரசிகர்களின் பரவலான எதிர்பார்ப்பை இந்தப் படம் ஓரளவுக்கு நிறைவு செய்கிறது.
படத்தின் முதுகெலும்பாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிலிர்ப்பை ஊட்டினாலும், கடந்த காலத்தில் நடைபெற்றதாக காட்டப்பட வேண்டிய திரைக்கதையின் அமைப்பு நிகழ்காலத்தை சுற்றியே வட்டமடிப்பதால், அந்த காட்சிகளை எல்லாம் சுவைபட ரசிக்கவும், ருசிக்கவும் இயலவில்லை என்பது மிகப்பெரிய குறையாகவே தோன்றுகிறது.
கதாநாயகன் மீட்பதற்காக செல்லும் ’ஏடனின் ஆப்பிள்’ கருவியின் செயல்பாடு என்ன?, அது அளிக்கக்கூடிய பலன் என்ன? எப்போது, எந்தச் சூழலில் அதை பயன்படுத்தலாம்? போன்ற விளக்கங்கள் எதுவும் விவரிக்கப்படாததால், இந்த விளையாட்டை பயன்படுத்தி வரும் பலருக்கு படத்தின் திரைக்கதை என்ற அம்சம் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது.
இதற்கிடையில், ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனத்தின் உரிமையாளரான ஆலன் ரிக்கின்ஸ் (ஜெரெமி அயர்ன்ஸ்) மற்றும் அவரது மகளும் படத்தின் நாயகியுமான சோபியா (மேரியன் கோட்டிலார்ட்) இடையிலான அதிகாரப் போட்டி, நாயகனின் உண்மையான நோக்கம் என்ன? ஆகியவற்றை படத்தின் இயக்குனரான ஜஸ்ட்டின் கர்ஸல் உரிய முறையில் பதிவு செய்ய தவறிவிட்டதால், படத்துக்கும் ரசிகர்களுக்கும் இடையில் உணர்வுப்பூர்வமான ஒட்டுறவு இல்லாமல் போனதை, சில தொய்வான காட்சிகள் நிரூபிக்கின்றன.
மிகசிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்திருந்தும், அவர்களுக்கான திறமை பளிச்சிடும் காட்சி அமைப்புகளை வைக்க தவறியதால் ’சும்மா’ திரையில் வந்துபோகும் நடிகர்கள் அளவுக்கே அவர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது இயக்குனரின் மிகப்பெரிய குறை என்றும் கூறலாம்.
மிகப் பிரபலமான வீடியோ விளையாட்டாக அறியப்படும் ’அஸஸின்ஸ் கிரீட்’ பலவீனமான திரைக்கதை மற்றும் அழுத்தமில்லாத பாத்திரப் படைப்பால் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து, ஈர்க்கத் தவறிவிட்டது.
மொத்தத்தில், ’அஸஸின்ஸ் கிரீட்’ ‘அசட்டு கிரீட்’ ஆகவே தோன்றுகிறது.
அவ்வகையில், வீடியோ விளையாட்டாக பலரை கவர்ந்த ’அஸஸின்ஸ் கிரீட்’ என்ற ஆட்டம், ஹாலிவுட்டில் பெரிய திரைக்கான சினிமாப் படமாக உருவாகவுள்ளது என்ற செய்திகளும், இந்தப் படத்தில் இடம்பெறவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலும், அதையடுத்து வெளியான ஆர்ப்பாட்டமான டிரெய்லரும் ரசிகர்களின் நெஞ்சங்களில் ஒருவிதமான ஆர்வத்தீயை மூட்டி விட்டிருந்தன என்றால், அது மிகையல்ல.
சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ’அஸஸின்ஸ் கிரீட்’ திரைப்படம், அந்த ஆர்வத்தீயை கொளுந்துவிட்டு எரியச் செய்துள்ளதா? அல்லது, நீர்த்துப்போக வைத்துள்ளதா? என்பதை இங்கே பார்ப்போம்!
விபச்சார தரகரை கொன்ற குற்றத்துக்காக படத்தின் நாயகன் கேல்லம் லின்ச்-க்கு (மைக்கேல் ஃபாஸ்பென்டர்) மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், அவனது நன்னடத்தையை காரணம் காட்டி, தண்டனை ரத்து செய்யப்பட்டு, சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறான்.
இந்த மன்னிப்புக்கும், விடுதலைக்கும் பின்னணியில் பிரபல கோடீஸ்வரருக்கு சொந்தமான ஒரு தொழில் நிறுவனம் இருந்துள்ள ரகசியம் கேல்லம் லின்ச்சுக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.
இயேசு கிறிஸ்துவின் காலத்திலும், சாலமன் மன்னரின் காலத்திலும் நடைபெற்ற சிலுவை யுத்தங்களை எதிர்த்துவந்த புனிதப் போராளிகளின் வம்சாவழியை சேர்ந்த அகுலய்ர் டி நெர்ஹா என்பவரின் நேரடி வழித்தோன்றலான கேல்லம் லின்ச்சை வைத்து, உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கோடீஸ்வரரின் ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் தெரிவிக்கிறது.
‘அனிமஸ்’ என்ற இயந்திரத்துடன் கேல்லம் லின்ச் இணைக்கப்படுகிறான். அந்த இயந்திரத்தின் உதவியுடனும், அவனது மூதாதையரான அகுலய்ர் டி நெர்ஹாவின் பழைய நினைவலைகளின் துணையுடனும் ’ஏடனின் ஆப்பிள்’ என்ற கருவியைத் தேடி, கண்டுபிடிக்கும் காரியத்தில் கடந்தகாலத்தை நோக்கி, கேல்லம் லின்ச் களமிறக்கப்படுகிறான்.
ஆனால், இந்த சாகசத் தேடலில் எல்லாமே திட்டமிட்டப்படி நடக்க சாத்தியமில்லை. தனது வாழ்க்கையைப்பற்றி அறியவந்த சில உண்மைகள் பொய்யான புனைக்கதைகள் என்பதை உணருகிறான்.
அவனை இந்த அரிதான காரியத்தில் களமிறக்கிய ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனம் உண்மையிலேயே உலக அமைதியை விரும்புகிறதா?, ஏடனின் ஆப்பிளை அந்த நிறுவனம் பெறுமா? என்ற கேள்விக்கு ’அஸஸின்ஸ் கிரீட்’ படம் பதில் தருகிறது.
புவிஈர்ப்பு விசைக்கு வசப்படாமல் அந்தரத்தில் உயரப் பறக்கும் சாகச காட்சிகள், கடந்த காலத்தின் பக்கம் பின்நோக்கி செல்லுதல் போன்ற ’அஸஸின்ஸ் கிரீட்’ விளையாட்டின் சிறப்பம்சங்களையும், இந்தப் படத்தின் டிரெய்லரையும் ஒப்பிட்டு பார்த்து, பரவசப்பட்ட ரசிகர்களின் பரவலான எதிர்பார்ப்பை இந்தப் படம் ஓரளவுக்கு நிறைவு செய்கிறது.
படத்தின் முதுகெலும்பாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் சிலிர்ப்பை ஊட்டினாலும், கடந்த காலத்தில் நடைபெற்றதாக காட்டப்பட வேண்டிய திரைக்கதையின் அமைப்பு நிகழ்காலத்தை சுற்றியே வட்டமடிப்பதால், அந்த காட்சிகளை எல்லாம் சுவைபட ரசிக்கவும், ருசிக்கவும் இயலவில்லை என்பது மிகப்பெரிய குறையாகவே தோன்றுகிறது.
கதாநாயகன் மீட்பதற்காக செல்லும் ’ஏடனின் ஆப்பிள்’ கருவியின் செயல்பாடு என்ன?, அது அளிக்கக்கூடிய பலன் என்ன? எப்போது, எந்தச் சூழலில் அதை பயன்படுத்தலாம்? போன்ற விளக்கங்கள் எதுவும் விவரிக்கப்படாததால், இந்த விளையாட்டை பயன்படுத்தி வரும் பலருக்கு படத்தின் திரைக்கதை என்ற அம்சம் ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்துள்ளது.
இதற்கிடையில், ’ஆப்ஸ்ட்டர்கோ’ நிறுவனத்தின் உரிமையாளரான ஆலன் ரிக்கின்ஸ் (ஜெரெமி அயர்ன்ஸ்) மற்றும் அவரது மகளும் படத்தின் நாயகியுமான சோபியா (மேரியன் கோட்டிலார்ட்) இடையிலான அதிகாரப் போட்டி, நாயகனின் உண்மையான நோக்கம் என்ன? ஆகியவற்றை படத்தின் இயக்குனரான ஜஸ்ட்டின் கர்ஸல் உரிய முறையில் பதிவு செய்ய தவறிவிட்டதால், படத்துக்கும் ரசிகர்களுக்கும் இடையில் உணர்வுப்பூர்வமான ஒட்டுறவு இல்லாமல் போனதை, சில தொய்வான காட்சிகள் நிரூபிக்கின்றன.
மிகசிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்திருந்தும், அவர்களுக்கான திறமை பளிச்சிடும் காட்சி அமைப்புகளை வைக்க தவறியதால் ’சும்மா’ திரையில் வந்துபோகும் நடிகர்கள் அளவுக்கே அவர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது இயக்குனரின் மிகப்பெரிய குறை என்றும் கூறலாம்.
மிகப் பிரபலமான வீடியோ விளையாட்டாக அறியப்படும் ’அஸஸின்ஸ் கிரீட்’ பலவீனமான திரைக்கதை மற்றும் அழுத்தமில்லாத பாத்திரப் படைப்பால் ரசிகர்களை பெரிதாக கவர்ந்து, ஈர்க்கத் தவறிவிட்டது.
மொத்தத்தில், ’அஸஸின்ஸ் கிரீட்’ ‘அசட்டு கிரீட்’ ஆகவே தோன்றுகிறது.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏகனாபுரம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஏகனாபுரத்தில் வசித்து வரும் கதாநாயகன் ரவி பறை இசைக் கலைஞன். அந்த ஊரில் வாத்து மேய்க்க வரும் நாயகி ரித்திகா மீது அவருக்கு காதல் வருகிறது. ரித்திகாவும் ரவியை விரும்புகிறார். இந்நிலையில் வாத்து முட்டை வியாபாரியான ராஜசிம்மன் தவறான முறையில் ரித்திகாவை அடைய முயற்சிக்கிறார்.
இந்த விஷயம் ரித்திகா மூலம் ரவிக்கு தெரிய வருகிறது. ரித்திகாவை ராஜசிம்மனிடமிருந்து காப்பாற்றி அவளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் ரவி. அந்த நேரத்தில் அந்த ஊரில் பெரிய மனுஷியாக இருக்கும் ஜோதிஷா, ரவியின் காதலுக்கு குறுக்கே நின்று ரவியையும், ரித்திகாவையும் சேரவிடாமல் தடுக்கிறார்.
ஜோதிஷா எதற்காக ரவியின் காதலை எதிர்த்து அவர்களை சேரவிடாமல் தடுக்கிறாள்? என்பதை இறுதியில் சொல்லியிருக்கிறார்கள்.
கதாநாயகனாக வரும் ரவிக்கு முதல் படம் என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுக்க ரொம்பவுமே முயற்சி செய்திருக்கிறார். நடனம், சண்டைக் காட்சிகளில் அனுபவம் இல்லையென்பதால் ரசிக்க முடியவில்லை. வாத்து மேய்க்கும் பெண்ணாக வரும் ரித்திகா, கிராமத்து இளம் பெண்ணுக்குண்டான தோற்றத்திற்கு பொருந்தியிருக்கிறார். அதேபோல், கிராமத்து பெண்ணுக்குண்டான நளினங்களையும் தனது நடிப்பால் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
ஊர் பெரிய மனுஷியாக வரும் ஜோதிஷா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். வில்லனாக வரும் ராஜசிம்மன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி, படத்தில் உள்ள நிறைய கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயல்பான கிராமத்து கதையாக இப்படம் அழகாக மனதில் பதிகிறது. கிராமத்து மக்களின் முகங்கள், கிராமத்து பின்புலங்கள் என எதுவுமே செயற்கையாக தெரியாமல் அப்படியே நேரில் பார்ப்பது போன்ற உணர்வில் இயக்குனர் சுரேஷ் நட்சத்திரா படமாக்கியிருக்கிறார். அதேபோல், படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களிலும் ஹீரோயிசம் காட்டாமல் எதார்த்தமாக படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
முதல் பாதி மட்டும் ரொம்பவும் மெதுவாக நகர்வதுபோன்ற உணர்வை கொடுக்கிறது. அதேபோல் எடிட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மணிமாறன் இசையில் பாடல்கள் எல்லாம் இளையராஜாவை ஞாபகப்படுத்துகிறது. ஏ.எஸ்.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கதையோடு ஒன்றி பயணிக்க உதவி செய்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஏகனாபுரம்’ எதார்த்தபுரம்.
இந்த விஷயம் ரித்திகா மூலம் ரவிக்கு தெரிய வருகிறது. ரித்திகாவை ராஜசிம்மனிடமிருந்து காப்பாற்றி அவளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார் ரவி. அந்த நேரத்தில் அந்த ஊரில் பெரிய மனுஷியாக இருக்கும் ஜோதிஷா, ரவியின் காதலுக்கு குறுக்கே நின்று ரவியையும், ரித்திகாவையும் சேரவிடாமல் தடுக்கிறார்.
ஜோதிஷா எதற்காக ரவியின் காதலை எதிர்த்து அவர்களை சேரவிடாமல் தடுக்கிறாள்? என்பதை இறுதியில் சொல்லியிருக்கிறார்கள்.
கதாநாயகனாக வரும் ரவிக்கு முதல் படம் என்றாலும், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுக்க ரொம்பவுமே முயற்சி செய்திருக்கிறார். நடனம், சண்டைக் காட்சிகளில் அனுபவம் இல்லையென்பதால் ரசிக்க முடியவில்லை. வாத்து மேய்க்கும் பெண்ணாக வரும் ரித்திகா, கிராமத்து இளம் பெண்ணுக்குண்டான தோற்றத்திற்கு பொருந்தியிருக்கிறார். அதேபோல், கிராமத்து பெண்ணுக்குண்டான நளினங்களையும் தனது நடிப்பால் சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
ஊர் பெரிய மனுஷியாக வரும் ஜோதிஷா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். வில்லனாக வரும் ராஜசிம்மன் பார்வையிலேயே மிரட்டுகிறார். மற்றபடி, படத்தில் உள்ள நிறைய கதாபாத்திரங்களும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயல்பான கிராமத்து கதையாக இப்படம் அழகாக மனதில் பதிகிறது. கிராமத்து மக்களின் முகங்கள், கிராமத்து பின்புலங்கள் என எதுவுமே செயற்கையாக தெரியாமல் அப்படியே நேரில் பார்ப்பது போன்ற உணர்வில் இயக்குனர் சுரேஷ் நட்சத்திரா படமாக்கியிருக்கிறார். அதேபோல், படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களிலும் ஹீரோயிசம் காட்டாமல் எதார்த்தமாக படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
முதல் பாதி மட்டும் ரொம்பவும் மெதுவாக நகர்வதுபோன்ற உணர்வை கொடுக்கிறது. அதேபோல் எடிட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மணிமாறன் இசையில் பாடல்கள் எல்லாம் இளையராஜாவை ஞாபகப்படுத்துகிறது. ஏ.எஸ்.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு கதையோடு ஒன்றி பயணிக்க உதவி செய்திருக்கிறது.
மொத்தத்தில் ‘ஏகனாபுரம்’ எதார்த்தபுரம்.
சுரேஷ் ரவி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பேய் படமாக வெளிவந்துள்ள ‘மோ’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் சுரேஷ் ரவி மற்றும் அவரது நண்பர்களான ரமேஷ் திலக், தர்புகா சிவா ஆகியோர் இணைந்து நூதனமான முறையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் சினிமாவில் துணை நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முனிஸ்காந்தை வைத்து பேய் போல் மேக்கப் போட்டு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உலவ விடுகின்றனர். பின்னர், அங்கு பேய் இருப்பதாகவும் அதை விரட்டுவதாகவும் கூறி அந்த அடுக்குமாடி குடியிருப்பின் செகரட்டரியான செல்வாவை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள்.
ஒருகட்டத்தில் சுரேஷ் ரவி மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் நாடகம் செல்வாவுக்கு தெரிய வருகிறது. இதனால், அவர் இவர்களை போலீசில் மாட்டிவிடப் போவதாக கூற, அவர்களோ பயந்து நடுங்குகிறார்கள். அவர்களின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வா, தனக்கு தொழில்முறை போட்டியாளராக இருக்கும் மைம் கோபி வாங்கவிருக்கும் பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பதாக கூறி, அந்த பள்ளியை அவர் வாங்கவிடாமல் செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
மைம் கோபிக்கும் கெட்ட சக்திகள் மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது. இதனால், இவர்கள் பேய் இருப்பதாக பயமுறுத்தினால் மைம் கோபி அந்த பள்ளியை வாங்கமாட்டார் என்பது தெரிந்தே செல்வா இந்த வேலையை இவர்களை வைத்து செய்யச் சொல்கிறார். சுரேஷ் ரவியின் கூட்டாளிகளும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.
இறுதியில் அந்த பாழடைந்த பள்ளிக்கு சென்ற நண்பர்களின் கதி என்னவாயிற்று? இவர்கள் திட்டம் பலித்ததா? என்பதே மீதிக்கதை.
சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம்வந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முழுநீள கதாநாயகனாக மாறியிருக்கிறார். கதைக்கு முக்கியத்துவமான படம் என்றாலும், இவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இரண்டாவது பேய் படம். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். முண்டாசு பட்டி படத்திற்கு பிறகு முனீஸ்காந்த் தனியொரு ஆளாக காமெடி செய்யும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்திருக்கிறது. ஒருசில இடங்களில் இவரது காமெடி சிரிக்க வைத்தாலும், நிறைய இடங்களில் வலுக்கட்டாயமாக காமெடி திணிக்கப்பட்டிருக்கிறது.
ரமேஷ் திலக், தர்புகா சிவா, யோகி பாபு ஆகியோரும் படத்தின் காமெடிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். செல்வா, மைம் கோபி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை விட்டு வெளியே செல்லாமல் கதையோடு காமெடி காட்சிகளை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம். படத்திற்கு பெரிய பலமே இந்த காமெடிதான். ஜெப கூட்ட காட்சிகள், யோகி பாபு இங்கிலீஸ் பேசும் காட்சிகள், முனிஸ்காந்த் பேய் வேஷம் போடும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களில் சிரிப்பு சரவெடி. யோகி பாபுவுக்கு இன்னும் காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
படத்தில் பாடல் இல்லையென்றாலும, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. அதேபோல், விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘மோ’ அமோகம்.
ஒருகட்டத்தில் சுரேஷ் ரவி மற்றும் அவர்கள் கூட்டாளிகளின் நாடகம் செல்வாவுக்கு தெரிய வருகிறது. இதனால், அவர் இவர்களை போலீசில் மாட்டிவிடப் போவதாக கூற, அவர்களோ பயந்து நடுங்குகிறார்கள். அவர்களின் பயத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட செல்வா, தனக்கு தொழில்முறை போட்டியாளராக இருக்கும் மைம் கோபி வாங்கவிருக்கும் பாழடைந்த பள்ளியில் பேய் இருப்பதாக கூறி, அந்த பள்ளியை அவர் வாங்கவிடாமல் செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறார்.
மைம் கோபிக்கும் கெட்ட சக்திகள் மீது நிறைய நம்பிக்கை இருக்கிறது. இதனால், இவர்கள் பேய் இருப்பதாக பயமுறுத்தினால் மைம் கோபி அந்த பள்ளியை வாங்கமாட்டார் என்பது தெரிந்தே செல்வா இந்த வேலையை இவர்களை வைத்து செய்யச் சொல்கிறார். சுரேஷ் ரவியின் கூட்டாளிகளும் வேறு வழியில்லாமல் இதற்கு ஒப்புக் கொள்கிறார்கள்.
இறுதியில் அந்த பாழடைந்த பள்ளிக்கு சென்ற நண்பர்களின் கதி என்னவாயிற்று? இவர்கள் திட்டம் பலித்ததா? என்பதே மீதிக்கதை.
சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம்வந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முழுநீள கதாநாயகனாக மாறியிருக்கிறார். கதைக்கு முக்கியத்துவமான படம் என்றாலும், இவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இரண்டாவது பேய் படம். இப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லாவிட்டாலும், தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். முண்டாசு பட்டி படத்திற்கு பிறகு முனீஸ்காந்த் தனியொரு ஆளாக காமெடி செய்யும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்திருக்கிறது. ஒருசில இடங்களில் இவரது காமெடி சிரிக்க வைத்தாலும், நிறைய இடங்களில் வலுக்கட்டாயமாக காமெடி திணிக்கப்பட்டிருக்கிறது.
ரமேஷ் திலக், தர்புகா சிவா, யோகி பாபு ஆகியோரும் படத்தின் காமெடிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். செல்வா, மைம் கோபி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
ஆரம்பம் முதல் இறுதி வரை கதையை விட்டு வெளியே செல்லாமல் கதையோடு காமெடி காட்சிகளை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம். படத்திற்கு பெரிய பலமே இந்த காமெடிதான். ஜெப கூட்ட காட்சிகள், யோகி பாபு இங்கிலீஸ் பேசும் காட்சிகள், முனிஸ்காந்த் பேய் வேஷம் போடும் காட்சிகள், கிளைமாக்ஸ் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களில் சிரிப்பு சரவெடி. யோகி பாபுவுக்கு இன்னும் காட்சிகள் கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
படத்தில் பாடல் இல்லையென்றாலும, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. அதேபோல், விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘மோ’ அமோகம்.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி உள்ள மியாவ் படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள கீழே பார்ப்போம்...
ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இவர்கள் நான்கு பேரும் பெரிய பணக்காரர்கள் என்பதால் தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருக்கும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரியை இவர்கள் கிண்டல் செய்ய, அவள் நண்பர்களில் ஒருவரை அடித்து விடுகிறாள். இதனால், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊர்மிளாவை பழிவாங்க துடிக்கிறார்கள். அன்றிலிருந்து நண்பர்களில் ஒருவன் திடீரென கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது ஒரு பூனை என்று அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் நம்புகிறார்கள்.
ஆனால், கொல்லப்பட்டவனின் நண்பர்களோ இதற்கு ஊர்மிளாதான் காரணம் என்று அவள்மீது பழியை போடுகிறார்கள். இந்த கொலை விசாரணை போலீஸ் வசம் செல்ல, அடுத்ததாக மற்றொரு நண்பரும் கொல்லப்படுகிறார். இவரும் பூனையால் கொல்லப்பட்டதாக கூற, போலீஸ் குழம்புகிறது.
இறுதியில், நண்பர்கள் பூனையால்தான் கொல்லப்பட்டார்களா? பூனை உருவத்தில் மிரட்டும் அந்த நபர் யார்? மற்ற நண்பர்கள் அந்த பூனையிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகர்களான ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருப்பினும், வசதியான இளைஞர்கள் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்கள்.
மாடல் அழகியாக நடித்திருக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரி, துணிச்சலான பெண்ணாகவும், தன் மேல் விழுந்த பழியை துடைக்க போராடும் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் வரும் ஷைய்னி கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.
ஷெல்பி என்னும் கதாபாத்திரத்தில் பூனை நடித்திருக்கிறது. பூனையை வைத்து சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் யுவினாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறாள். வாட்ஸ் அப் மணி கதாபாத்திரத்தில் வரும் டேனியலின் காமெடி படத்தில் எடுபடவில்லை.
பேய் பழி வாங்கும் வழக்கமான கதையையே படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி. எல்லா பேய் படங்களிலும் வரும் வழக்கமான கதை, வழக்கமான காட்சிகள் என கொடுத்திருந்தாலும், புது முயற்சியாக பூனை பழி வாங்குவதாக அமைத்திருப்பது படத்திற்கு புதுமையாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது.
ஸ்ரீஜித் எடவனா இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் தேவை. போஜன் கே.தினேஷின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் ‘மியாவ்’ சத்தம் போதவில்லை.
இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரியை இவர்கள் கிண்டல் செய்ய, அவள் நண்பர்களில் ஒருவரை அடித்து விடுகிறாள். இதனால், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊர்மிளாவை பழிவாங்க துடிக்கிறார்கள். அன்றிலிருந்து நண்பர்களில் ஒருவன் திடீரென கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது ஒரு பூனை என்று அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் நம்புகிறார்கள்.
ஆனால், கொல்லப்பட்டவனின் நண்பர்களோ இதற்கு ஊர்மிளாதான் காரணம் என்று அவள்மீது பழியை போடுகிறார்கள். இந்த கொலை விசாரணை போலீஸ் வசம் செல்ல, அடுத்ததாக மற்றொரு நண்பரும் கொல்லப்படுகிறார். இவரும் பூனையால் கொல்லப்பட்டதாக கூற, போலீஸ் குழம்புகிறது.
இறுதியில், நண்பர்கள் பூனையால்தான் கொல்லப்பட்டார்களா? பூனை உருவத்தில் மிரட்டும் அந்த நபர் யார்? மற்ற நண்பர்கள் அந்த பூனையிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகர்களான ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருப்பினும், வசதியான இளைஞர்கள் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்கள்.
மாடல் அழகியாக நடித்திருக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரி, துணிச்சலான பெண்ணாகவும், தன் மேல் விழுந்த பழியை துடைக்க போராடும் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் வரும் ஷைய்னி கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.
ஷெல்பி என்னும் கதாபாத்திரத்தில் பூனை நடித்திருக்கிறது. பூனையை வைத்து சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் யுவினாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறாள். வாட்ஸ் அப் மணி கதாபாத்திரத்தில் வரும் டேனியலின் காமெடி படத்தில் எடுபடவில்லை.
பேய் பழி வாங்கும் வழக்கமான கதையையே படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி. எல்லா பேய் படங்களிலும் வரும் வழக்கமான கதை, வழக்கமான காட்சிகள் என கொடுத்திருந்தாலும், புது முயற்சியாக பூனை பழி வாங்குவதாக அமைத்திருப்பது படத்திற்கு புதுமையாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது.
ஸ்ரீஜித் எடவனா இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் தேவை. போஜன் கே.தினேஷின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் ‘மியாவ்’ சத்தம் போதவில்லை.
விஜய் வசந்த் - சிருஷ்டி டாங்கே நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘அச்சமின்றி’ படம் எப்படியிருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்...
விஜய் வசந்த், கருணாஸ், தேவதர்ஷினி, சண்முகசுந்தரம் நால்வரும் பிக் பாக்கெட் அடிப்பதையே தொழிலாக செய்து வருகிறார்கள். இவர்களுடைய ஏரியாவுக்கு இன்ஸ்பெக்டராக வருகிறார் சமுத்திரகனி. அதே ஏரியாவில் வாய் பேசமுடியாத வித்யா தனிமையில் வசித்து வருகிறார். அவர் மீது சமுத்திரகனி இரக்கம் காட்ட, அந்த இரக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது.
இந்நிலையில், ஒருநாள் பஸ்ஸில் விஜய் வசந்தை சந்திக்கிறாள் சிருஷ்டி டாங்கே. இவர்களுடைய முதல் சந்திப்பே மோதலாக மாறி, போலீஸ் நிலையம் வரை செல்கிறது. ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த சிருஷ்டி டாங்கே, விஜய்யிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன்பிறகு, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.
இந்நிலையில், சமுத்திரகனி காதலிக்கும் வித்யா ஒரு விபத்தில் இறக்கிறாள். அது விபத்து இல்லை, திட்டமிட்டு செய்த கொலை என்று சமுத்திரகனிக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க களமிறங்க நினைக்கும்போது, அவரது உயரதிகாரி, போலீஸ் மற்றும் ரவுடி கும்பலின் உதவியோடு இவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
அதிலிருந்து தப்பித்து செல்லும் சமுத்திரகனி, உயிர் பயத்தோடு ஓடிவரும் நாயகனையும் நாயகியையும் சந்திக்கிறார். சமுத்திரகனியை கொல்ல துடிப்பவர்களே, இவர்களையும் கொலை செய்ய துடிக்கிறார்கள் என்பதை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்கிறார்கள். மூன்று பேரும் இணைந்து தங்களை கொலை செய்ய நினைப்பவர்களை எதிர்க்க களமிறங்குகிறார்கள்.
அப்போது தங்களை கொல்லத் துடிக்கும் ரவுடி கும்பலின் பின்புலத்தில் கல்வியமைச்சர் ராதாரவியின் உதவியாளர் ஜெயக்குமார் ஜானகிராமன் இருப்பது தெரியவருகிறது. சமுத்திரகனி, விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே மூன்று பேரையும் அவர் கொல்ல துடிப்பதன் காரணம் என்ன? இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்களா? வித்யாவை யார்? எதற்காக கொன்றார்கள்? என்பதற்கு விறுவிறுப்புடன் கூடிய பதிலை பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.
பிக்பாக்கெட் திருடனாக வரும் விஜய் வசந்த் தனது நகைச்சுவை கலந்த எதார்த்த நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். முதல் பாதியில் இவரது கதாபாத்திரம் நகைச்சுவையாக நகர்ந்தாலும், சமுத்திரகனியிடம் இணைந்த பிறகு ஆக்சனுக்கு மாறுகிறது. ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். தனக்கேற்ற சரியான கதையை தேர்வு செய்து, நாயகன் அந்தஸ்தை முழுமையாக காட்டிக் கொள்ளாமல், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை முழுமையாக கொடுத்திருக்கிறார்.
சிருஷ்டி டாங்கே அழகு பதுமையாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். காதல் காட்சிகள் மட்டுமில்லாது, செண்டிமெண்ட் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். பரபரப்பான காட்சிகளில் தனது நடிப்பை சிறப்பாக செய்து தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார்.
பொறுப்பான போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரகனி, வழக்கம்போல் தனது அசாத்தியமான நடிப்பை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். தான் காதலித்த பெண்ணின் மரணத்திற்கு பிறகு செண்டிமெண்ட் கலந்த கோபத்தோடு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது.
ராதாரவியின் கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் வில்லத்தனமாக சித்தரித்து, இறுதியில் அவர் மிகவும் நேர்மையானவர் என்பதுபோல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இதை உணர்ந்து சிறப்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு பெயர் வரும்படி செய்திருக்கிறார் ராதாரவி. குறிப்பாக, இறுதிக் காட்சியில் நீதிமன்றத்தில் இவர் பேசும் வசனங்கள் மிகவும் யோசிக்கக்கூடியதாக உள்ளது.
இதுவரையிலான படங்களில் பிரியமான அம்மாவாக வந்த சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தில் பிடிவாத சரண்யாவாக நடித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் நடத்தும் மிகப்பெரிய தொழிலபதிரான இவர், தனது கட்டுப்பாட்டுக்குள் அனைவரையும் கொண்டு வரும் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு இந்த கதாபாத்திரம் புதிது என்றாலும் அதை அழகாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இனிமேல், சரண்யா பொன்வண்ணன் இதுமாதிரியான கதாபாத்திரங்களிலும் நடித்து அவரது நடிப்பு திறமையை இன்னும் மேலே கொண்டுவர வேண்டும் என்பதுதான் படம் பார்த்தவர்களின் ஆவலாக உள்ளது.
வாய் பேசமுடியாமல் வரும் வித்யா, வக்கீலாக வரும் ரோகிணி, கலெக்டராக வரும் தலைவாசல் விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாஸ், தேவதர்ஷினி, சண்முக சுந்தரம் கூட்டணியில் காமெடி ரசிக்கும்படி இருக்கிறது.
ஏற்கெனவே, விஜய் வசந்தை வைத்து ‘என்னமோ நடக்குது’ என்ற ஹிட் படத்தை கொடுத்த ராஜபாண்டியே இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களும், அரசாங்கமும், மக்களும் கல்வியை எப்படி நாடுகிறார்கள்? என்பதை விவாதத்துக்கு கொண்டு வந்து, அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார். படத்தில் இவர் சொல்லியிருக்கும் கருத்தை எல்லோருக்கும் எளிதில் புரியும்படி திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பது படத்திற்கு பெரிய பலம். அதேபோல், கல்வி முறையில் கட்டாயம் மாற்றம் வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு படத்தை எடுத்திருக்கும் இந்த குழுவை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் எல்லாம் இளையராஜாவின் சாயல் இருக்கிறது. சுட்ட பழமாக இருந்தாலும் சுவையாக இருக்கிறது. பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவும் அருமையாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா சுழன்று படமாக்கியிருக்கிறது.
மொத்தத்தில் ‘அச்சமின்றி’ ஒரு கல்வி புரட்சி.
இந்நிலையில், ஒருநாள் பஸ்ஸில் விஜய் வசந்தை சந்திக்கிறாள் சிருஷ்டி டாங்கே. இவர்களுடைய முதல் சந்திப்பே மோதலாக மாறி, போலீஸ் நிலையம் வரை செல்கிறது. ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த சிருஷ்டி டாங்கே, விஜய்யிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன்பிறகு, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.
இந்நிலையில், சமுத்திரகனி காதலிக்கும் வித்யா ஒரு விபத்தில் இறக்கிறாள். அது விபத்து இல்லை, திட்டமிட்டு செய்த கொலை என்று சமுத்திரகனிக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க களமிறங்க நினைக்கும்போது, அவரது உயரதிகாரி, போலீஸ் மற்றும் ரவுடி கும்பலின் உதவியோடு இவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
அதிலிருந்து தப்பித்து செல்லும் சமுத்திரகனி, உயிர் பயத்தோடு ஓடிவரும் நாயகனையும் நாயகியையும் சந்திக்கிறார். சமுத்திரகனியை கொல்ல துடிப்பவர்களே, இவர்களையும் கொலை செய்ய துடிக்கிறார்கள் என்பதை ஒருவருக்கொருவர் அறிந்து கொள்கிறார்கள். மூன்று பேரும் இணைந்து தங்களை கொலை செய்ய நினைப்பவர்களை எதிர்க்க களமிறங்குகிறார்கள்.
அப்போது தங்களை கொல்லத் துடிக்கும் ரவுடி கும்பலின் பின்புலத்தில் கல்வியமைச்சர் ராதாரவியின் உதவியாளர் ஜெயக்குமார் ஜானகிராமன் இருப்பது தெரியவருகிறது. சமுத்திரகனி, விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே மூன்று பேரையும் அவர் கொல்ல துடிப்பதன் காரணம் என்ன? இந்த கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்களா? வித்யாவை யார்? எதற்காக கொன்றார்கள்? என்பதற்கு விறுவிறுப்புடன் கூடிய பதிலை பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள்.
பிக்பாக்கெட் திருடனாக வரும் விஜய் வசந்த் தனது நகைச்சுவை கலந்த எதார்த்த நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். முதல் பாதியில் இவரது கதாபாத்திரம் நகைச்சுவையாக நகர்ந்தாலும், சமுத்திரகனியிடம் இணைந்த பிறகு ஆக்சனுக்கு மாறுகிறது. ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். தனக்கேற்ற சரியான கதையை தேர்வு செய்து, நாயகன் அந்தஸ்தை முழுமையாக காட்டிக் கொள்ளாமல், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை முழுமையாக கொடுத்திருக்கிறார்.
சிருஷ்டி டாங்கே அழகு பதுமையாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். காதல் காட்சிகள் மட்டுமில்லாது, செண்டிமெண்ட் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். பரபரப்பான காட்சிகளில் தனது நடிப்பை சிறப்பாக செய்து தனது கதாபாத்திரத்தை பூர்த்தி செய்திருக்கிறார்.
பொறுப்பான போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரகனி, வழக்கம்போல் தனது அசாத்தியமான நடிப்பை எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். தான் காதலித்த பெண்ணின் மரணத்திற்கு பிறகு செண்டிமெண்ட் கலந்த கோபத்தோடு எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது.
ராதாரவியின் கதாபாத்திரத்தை ஆரம்பத்தில் வில்லத்தனமாக சித்தரித்து, இறுதியில் அவர் மிகவும் நேர்மையானவர் என்பதுபோல் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இதை உணர்ந்து சிறப்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு பெயர் வரும்படி செய்திருக்கிறார் ராதாரவி. குறிப்பாக, இறுதிக் காட்சியில் நீதிமன்றத்தில் இவர் பேசும் வசனங்கள் மிகவும் யோசிக்கக்கூடியதாக உள்ளது.
இதுவரையிலான படங்களில் பிரியமான அம்மாவாக வந்த சரண்யா பொன்வண்ணன், இந்த படத்தில் பிடிவாத சரண்யாவாக நடித்துள்ளார். கல்வி நிறுவனங்கள் நடத்தும் மிகப்பெரிய தொழிலபதிரான இவர், தனது கட்டுப்பாட்டுக்குள் அனைவரையும் கொண்டு வரும் மிடுக்கான தோற்றத்துடன் கம்பீரமாக வலம் வந்திருக்கிறார். இவருக்கு இந்த கதாபாத்திரம் புதிது என்றாலும் அதை அழகாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இனிமேல், சரண்யா பொன்வண்ணன் இதுமாதிரியான கதாபாத்திரங்களிலும் நடித்து அவரது நடிப்பு திறமையை இன்னும் மேலே கொண்டுவர வேண்டும் என்பதுதான் படம் பார்த்தவர்களின் ஆவலாக உள்ளது.
வாய் பேசமுடியாமல் வரும் வித்யா, வக்கீலாக வரும் ரோகிணி, கலெக்டராக வரும் தலைவாசல் விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கருணாஸ், தேவதர்ஷினி, சண்முக சுந்தரம் கூட்டணியில் காமெடி ரசிக்கும்படி இருக்கிறது.
ஏற்கெனவே, விஜய் வசந்தை வைத்து ‘என்னமோ நடக்குது’ என்ற ஹிட் படத்தை கொடுத்த ராஜபாண்டியே இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களும், அரசாங்கமும், மக்களும் கல்வியை எப்படி நாடுகிறார்கள்? என்பதை விவாதத்துக்கு கொண்டு வந்து, அதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார். படத்தில் இவர் சொல்லியிருக்கும் கருத்தை எல்லோருக்கும் எளிதில் புரியும்படி திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பது படத்திற்கு பெரிய பலம். அதேபோல், கல்வி முறையில் கட்டாயம் மாற்றம் வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு படத்தை எடுத்திருக்கும் இந்த குழுவை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
பிரேம்ஜி அமரனின் இசையில் பாடல்கள் எல்லாம் இளையராஜாவின் சாயல் இருக்கிறது. சுட்ட பழமாக இருந்தாலும் சுவையாக இருக்கிறது. பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவும் அருமையாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் எல்லாம் இவரது கேமரா சுழன்று படமாக்கியிருக்கிறது.
மொத்தத்தில் ‘அச்சமின்றி’ ஒரு கல்வி புரட்சி.
ரகுமான் நடிப்பில் கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘துருவங்கள் பதினாறு’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது.
துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார்? அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா? என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.
இறுதியில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு சாதாரண கதையை இவ்வளவு நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் கொடுக்கமுடியுமா? என்று வியக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும், பார்ப்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
அதேபோல், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால் ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட் செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல் அமைந்திருப்பது சிறப்பு.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கேற்றவாறு வேறுபடுத்தி காட்டி, படம் முழுக்க புத்துணர்ச்சியோடு பயணிக்க உதவியிருக்கிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் ரகுமான், படம் முழுக்க அலட்டல் இல்லாத, ஒரு போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். இவரது அனுபவ நடிப்பு எந்த இடத்திலும் அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் சென்றிருக்கிறது. பல்வேறு தோற்றங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.
அதேபோல், டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்து, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படைக்கும் வரலாறு.
துப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா? காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார்? அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா? என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.
இறுதியில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
ஒரு சாதாரண கதையை இவ்வளவு நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் கொடுக்கமுடியுமா? என்று வியக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும், பார்ப்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
அதேபோல், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால் ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட் செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல் அமைந்திருப்பது சிறப்பு.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கேற்றவாறு வேறுபடுத்தி காட்டி, படம் முழுக்க புத்துணர்ச்சியோடு பயணிக்க உதவியிருக்கிறது.
காவல்துறை அதிகாரியாக வரும் ரகுமான், படம் முழுக்க அலட்டல் இல்லாத, ஒரு போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். இவரது அனுபவ நடிப்பு எந்த இடத்திலும் அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் சென்றிருக்கிறது. பல்வேறு தோற்றங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.
அதேபோல், டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்து, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படைக்கும் வரலாறு.
ரஃபி, மீனாட்சி, மீரா நந்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நேர்முகம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
சிறு வயதில் தாயை இழந்து சித்தி கொடுமைக்கு ஆளான ஆதித்யா மேனன், ஒரு மனோதத்துவ மருத்துவர். இவர் சொந்தமாக கிளினிக் ஒன்றை வைத்திருக்கிறார். இவருக்கு பெண்கள் என்றால் சுத்தமாக பிடிக்காது. அவரிடம் சிகிச்சைக்கு வரும் இளம் ஜோடிகளை இவர் பல நாள் அடித்து உதைத்து, அவர்களை பலவிதங்களில் பயமுறுத்தி பிரித்து அனுப்புகிறார்.
இந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா? அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகன் ரஃபி-க்கு இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். படத்தில் ரொம்பவும் சீரியசாய் வசனமெல்லாம் பேசியிருக்கிறார். இரண்டு நாயகிகளுடனும் டூயட் பாடுகிறார். ஆனால், நடிப்பதற்குதான் ரொம்பவும் திணறியிருக்கிறார். ‘கருப்பசாமி குத்தகைகாரர்’ படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக வந்த மீனாட்சி, இந்த படத்தில் கிளமாரில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறார். ஆனால், அவரை அந்த கதாபாத்திரத்தில் ரசிக்கத்தான் முடியவில்லை. மற்றொரு நாயகியான மீரா நந்தன், பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே வருகிறார். மற்றவர்களைவிட இவரது நடிப்பு ஓகேதான்.
சைக்கோ வில்லனாக வரும் ஆதித்யா மேனன், படத்தில் ஏனோதானேவென்று நடித்திருக்கிறார். இவரை சரியாக வேலை வாங்கவில்லை என்றே தோன்றுகிறது. காமெடி போலீசாக வரும் பாண்டியராஜன், நெல்லை சிவா, சிஷர் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை.
‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’ உள்ளிட்ட காதல் படங்களை கொடுத்த முரளி கிருஷ்ணா, இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் டுவிஸ்டுக்கு மேல் டுவிஸ்டுகள் வைத்துக்கொண்டே போயிருக்கிறார். இன்றைய டிரெண்டுக்கு ஏற்றார்போல் கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், இயக்கத்திலும், நடிகர்கள் தேர்விலும், அவர்களை வேலை வாங்கும் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஜெகதீஷ் விஷ்வத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரியதாக கைகொடுக்கவில்லை. முரளி கிருஷ்ணாவின் இசையும் படத்தில் சொல்லும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘நேர்முகம்’ கோணல்.
இந்நிலையில், இவரிடம் நாயகன் ரஃபியும், அவரது காதலியான நாயகி மீனாட்சியும் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் அந்த மருத்துவமனைக்கு வந்த பிறகு ஆதித்யா மேனன் அடைத்து வைத்துள்ள பல ஜோடிகளில் சிலர் மர்மமான முறையில் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், காணாமல் போன காதல் ஜோடிகளை பாண்டியராஜன் தலைமையிலான போலீஸ் குழு தேட ஆரம்பிக்கிறது. இறுதியில், காதல் ஜோடிகளை அடைத்து வைத்திருக்கும் ஆதித்யா மேனனை சட்டத்தின் முன் நிறுத்தியதா? அடைத்து வைக்கப்பட்டிருந்த ஜோடிகளை கொலை செய்த மர்ம நபர் யார்? என்பதை கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகன் ரஃபி-க்கு இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். படத்தில் ரொம்பவும் சீரியசாய் வசனமெல்லாம் பேசியிருக்கிறார். இரண்டு நாயகிகளுடனும் டூயட் பாடுகிறார். ஆனால், நடிப்பதற்குதான் ரொம்பவும் திணறியிருக்கிறார். ‘கருப்பசாமி குத்தகைகாரர்’ படத்தில் குடும்ப பாங்கான பெண்ணாக வந்த மீனாட்சி, இந்த படத்தில் கிளமாரில் வந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறார். ஆனால், அவரை அந்த கதாபாத்திரத்தில் ரசிக்கத்தான் முடியவில்லை. மற்றொரு நாயகியான மீரா நந்தன், பிளாஷ்பேக் காட்சியில் மட்டுமே வருகிறார். மற்றவர்களைவிட இவரது நடிப்பு ஓகேதான்.
சைக்கோ வில்லனாக வரும் ஆதித்யா மேனன், படத்தில் ஏனோதானேவென்று நடித்திருக்கிறார். இவரை சரியாக வேலை வாங்கவில்லை என்றே தோன்றுகிறது. காமெடி போலீசாக வரும் பாண்டியராஜன், நெல்லை சிவா, சிஷர் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை.
‘பார்வை ஒன்றே போதுமே’, ‘பேசாத கண்ணும் பேசுமே’ உள்ளிட்ட காதல் படங்களை கொடுத்த முரளி கிருஷ்ணா, இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் டுவிஸ்டுக்கு மேல் டுவிஸ்டுகள் வைத்துக்கொண்டே போயிருக்கிறார். இன்றைய டிரெண்டுக்கு ஏற்றார்போல் கிரைம் திரில்லர் படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், இயக்கத்திலும், நடிகர்கள் தேர்விலும், அவர்களை வேலை வாங்கும் விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஜெகதீஷ் விஷ்வத்தின் ஒளிப்பதிவு மிகப்பெரியதாக கைகொடுக்கவில்லை. முரளி கிருஷ்ணாவின் இசையும் படத்தில் சொல்லும்படியாக இல்லை.
மொத்தத்தில் ‘நேர்முகம்’ கோணல்.






