என் மலர்
தரவரிசை
மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய் - ப்ரணிதா இணைந்து நடித்துள்ள `எனக்கு வாய்த்த அடிமைகள்' படத்தின் விமர்சனத்தை கீழே படிப்போம்.
சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும் ஜெய், அதே கம்பெனியில் கூடவே பணிபுரியும் பிரணிதா மீது காதல் கொள்கிறார். அவளிடம் தனது காதலை சொல்வதற்கு முன்பே இரண்டு பேரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் கசமுசாவும் நடந்துவிடுகிறது. அதன்பின்னர், தனது காதலை அவளிடம் சொல்லி, இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்நிலையில், ஒருநாள் பார்ட்டியில் வேறொருவருடன் பிரணிதா நெருக்கமாக இருப்பதை பார்க்கும் ஜெய், மனமுடைந்து அவளை பிரிந்து செல்கிறார். மிகவும் மன உளைச்சலில் இருக்கும் ஜெய், இதற்காக மனோதத்துவ நிபுணரான தம்பி ராமையாவிடம் செல்கிறார். ஆனால், தம்பி ராமையாவின் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள முடியாத ஜெய், ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார்.
தன்னுடைய தற்கொலை முடிவை நண்பர்களான காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோர்களிடம் சொல்கிறார் ஜெய். ஆனால், அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் ஜெய் தற்கொலை செய்துகொள்ளப்போவது உண்மைதான் என்பதை அறிந்து அவரை காப்பாற்ற மூவரும் புறப்படுகிறார்கள். அந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள்.
தற்கொலை முடிவுக்கு போன ஜெய், டிவியில் சந்தானத்தின் பேச்சை கேட்டு மனம் திருந்தி தற்கொலை முடிவை கைவிடுகிறார். அதன்பின்னர், தன்னை காப்பாற்ற புறப்பட்ட நண்பர்கள் பிரச்சினையில் மாட்டிக் கொண்டதை அறிந்து கொள்கிறார். அவர்களை ஜெய் எப்படி மீட்டார்? ப்ரணிதாவுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
ஜெய் வழக்கம்போல் தனது அலட்டல் இல்லாத நடிப்பில் ரசிக்க வைக்கிறார். தற்கொலை செய்துகொள்ளும் முடிவோடு வரும் இவர், அதை செய்யாமல் சினிமா பாடல்களை கேட்டு அலப்பறை பண்ணும் இடங்களில் எல்லாம் கிளாப்ஸ் வாங்குகிறார். அதேபோல், தனக்கு உதவி செய்ய முன்வந்த தம்பிராமையாவை நடுஇரவில் இவர் செய்யும் டார்ச்சர்கள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.
நாயகி ப்ரணிதாவுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. இருப்பினும், ஓரளவுக்கு கிளாமரில் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். நண்பர்களாக வரும் காளி வெங்கட், கருணாகரன், நவீன் ஆகியோர் காமெடியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஆங்காங்கே சில தொய்வுகள் இருக்கிறது.
மனோதத்துவ நிபுணராக வரும் தம்பி ராமையா தன் பங்குக்கு காமெடியில் கலக்கியிருக்கிறார். கருப்பு ராக்காக வரும் மொட்டை ராஜேந்திரன், டிவி தொகுப்பாளராக வரும் படவா கோபி ஆகியோரும் படத்தின் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். சந்தானம் ஒரேயொரு காட்சியில் வந்தாலும், படத்தில் காதலர்களுக்கு நல்ல கருத்தை சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.
இயக்குனர் மகேந்திரன் ராஜாமணி முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், ஓவர் காமெடி படத்தை முழுமையாக ரசிக்க முடியாமல் செய்துவிட்டது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர், அதை எல்லை மீறாமல் கொடுத்திருந்தால் படத்தை கண்டிப்பாக ரசித்திருக்கலாம்.
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் எல்லாம் கேட்பதற்கு அழகாக இருக்கிறது. அதை படமாக்கியவிதமும் அருமை. ‘கண்ணாடி பூவுக்கு வண்ணமில்லை’ என்ற பாடலை படமாக்கிய விதம், அந்த பாடலை வெகுவாக ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். மகேஷ் முத்துச்சுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா தனித்துவம் காண்பித்திருக்கிறது.
மொத்தத்தில் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ காமெடி கலாட்டா.
மகேஷ் பாபு - ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் வெளியான இவண் ஒரு துணிச்சல்காரன் படத்தின் விமர்சனத்தை கீழே படிக்கலாம்.
மும்பையில் கல்லூரி மாணவனாக வருகிறார் மகேஷ்பாபு. நடிப்பில் ஆர்வம் இருக்கும் மகேஷ்பாபு கல்லூரி விடுமுறை நாட்களில் சின்ன சின்ன விளம்பரங்களில் மாடலாகவும் நடித்து வருகிறார். மும்பையின் பிரதான பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மகேஷ் பாபு சிறு வயதிலிருந்தே தனது மாமாவான பிரகாஷ்ராஜின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகிறார்.
பிரகாஷ்ராஜ் மும்பை புறநகரில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். பிரகாஷ்ராஜ் மீது மிகுந்த அன்பாகவும், பாசமாகவும் இருக்கும் மகேஷ்பாபு கல்லூரி விடுமுறை நாட்களில் தனது வீட்டிற்கு சென்று வருகிறார்.
சுற்றிலும் மலைகளுடன் கூடிய சுற்றுலாப் பகுதியில் இருக்கும் அந்த ஊருக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து சுற்றுலா வரும் ப்ரீத்தி ஜிந்தா மீது முதல் சந்திப்பிலேயே காதல் கொள்கிறார் மகேஷ்பாபு.
ஆனால் ப்ரீத்தி ஜிந்தாவோ கண்டுகொள்ளாமல் இருக்கிறார். எனினும் ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னர் இருவருக்கும் இடையேயான காதல் பிரகாஷ் ராஜுக்கு தெரிய வருகிறது. இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் பிரகாஷ்ராஜின் பேச்சை கேட்டு ப்ரீத்தி ஜிந்தாவுடனான காதலை முறித்துக் கொள்கிறார் மகேஷ்பாபு.
அதனைத்தொடர்ந்து அதற்கான காரணத்தை ப்ளாஸ்பேக்காக கூறுகிறார். விவசாயிகளை கொடுமைப்படுத்தும் வில்லனாக வரும் ஜெயப்பிரகாஷிடம் இருந்து விவசாயிகளையும், அவர்களது நிலங்களையும் மீட்கும் போராட்டத்தில் மகேஷ்பாபுவின் தந்தையான கிருஷ்ணமூர்த்தியையும், தாயையும் ஜெயப்பிரகாஷின் ஆட்கள் கொலை செய்கின்றனர். தாய், தந்தையை இழந்துதவிக்கும் மகேஷ்பாபுவை ஜெயப்பரகாஷின் தங்கையின் கணவனான பிரகாஷ் ராஜ் அழைத்துக் கொண்டு மும்பை செல்கிறார்.
அப்போது பிரகாஷ்ராஜுடன் வர மறுக்கும் அவரது மனைவியிடம், தனது மகளை மகேஷ் பாபுவையே திருமணம் செய்ய வைப்பதாக சபதம் செய்ததாகவும் கூறிய பின் மகேஷ் பாபுவுடன் ஐதராபாத் செல்லும் பிரகாஷ்ராஜுக்கு ப்ரீத்தி ஜிந்தாதான் தனது மகள் என்று தெரிய வருகிறது. பின்னர் மகேஷ்பாபு-ப்ரீத்தி ஜிந்தா இருவருக்கும் இடையேயான காதல் மீண்டும் மலர்கிறது.
இந்நிலையில், பிரகாஷ்ராஜின் சபதத்தை நிறைவேற்றி ப்ரீத்தி ஜிந்தாவை மகேஷ்பாபு மணக்கிறாரா, விவசாயிகளை மகேஷ்பாபு காப்பாற்றுகிறாரா என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதி கதை.
தனது முதல் படத்திலேயே மகேஷ்பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாணவனாக நடிப்பது முதல் காதல், சண்டை காட்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ப்ரீத்தி ஜிந்தா சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளில் அவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.
படத்தில் சிலகாட்சிகளில் வந்தாலும் பிரமானந்தம் மற்றும் எம்.எஸ்.நாராயணாவின் நகைச்சுவைகள் சிரிக்கும்படி உள்ளது.
படத்தின் இயக்குநர் கோவாலமுடி ராகவேந்திர ராவ் சிறப்பாக திரைக்கதையை அமைத்துள்ளார். காதல், சண்டை, காமெடி என அனைத்து காட்சிகளையும் ரசிக்கும் படி அமைத்துள்ளது சிறப்பு.
மணி சர்மாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சண்ட் படத்தை சிறப்பாக காட்சிபடுத்தியுள்ளார்.
மொத்தத்தில் துணிச்சல்காரன் வென்றான்.
பிரகாஷ்ராஜ் மும்பை புறநகரில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார். பிரகாஷ்ராஜ் மீது மிகுந்த அன்பாகவும், பாசமாகவும் இருக்கும் மகேஷ்பாபு கல்லூரி விடுமுறை நாட்களில் தனது வீட்டிற்கு சென்று வருகிறார்.
சுற்றிலும் மலைகளுடன் கூடிய சுற்றுலாப் பகுதியில் இருக்கும் அந்த ஊருக்கு ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து சுற்றுலா வரும் ப்ரீத்தி ஜிந்தா மீது முதல் சந்திப்பிலேயே காதல் கொள்கிறார் மகேஷ்பாபு.
ஆனால் ப்ரீத்தி ஜிந்தாவோ கண்டுகொள்ளாமல் இருக்கிறார். எனினும் ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. பின்னர் இருவருக்கும் இடையேயான காதல் பிரகாஷ் ராஜுக்கு தெரிய வருகிறது. இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவிக்கும் பிரகாஷ்ராஜின் பேச்சை கேட்டு ப்ரீத்தி ஜிந்தாவுடனான காதலை முறித்துக் கொள்கிறார் மகேஷ்பாபு.
அதனைத்தொடர்ந்து அதற்கான காரணத்தை ப்ளாஸ்பேக்காக கூறுகிறார். விவசாயிகளை கொடுமைப்படுத்தும் வில்லனாக வரும் ஜெயப்பிரகாஷிடம் இருந்து விவசாயிகளையும், அவர்களது நிலங்களையும் மீட்கும் போராட்டத்தில் மகேஷ்பாபுவின் தந்தையான கிருஷ்ணமூர்த்தியையும், தாயையும் ஜெயப்பிரகாஷின் ஆட்கள் கொலை செய்கின்றனர். தாய், தந்தையை இழந்துதவிக்கும் மகேஷ்பாபுவை ஜெயப்பரகாஷின் தங்கையின் கணவனான பிரகாஷ் ராஜ் அழைத்துக் கொண்டு மும்பை செல்கிறார்.
அப்போது பிரகாஷ்ராஜுடன் வர மறுக்கும் அவரது மனைவியிடம், தனது மகளை மகேஷ் பாபுவையே திருமணம் செய்ய வைப்பதாக சபதம் செய்ததாகவும் கூறிய பின் மகேஷ் பாபுவுடன் ஐதராபாத் செல்லும் பிரகாஷ்ராஜுக்கு ப்ரீத்தி ஜிந்தாதான் தனது மகள் என்று தெரிய வருகிறது. பின்னர் மகேஷ்பாபு-ப்ரீத்தி ஜிந்தா இருவருக்கும் இடையேயான காதல் மீண்டும் மலர்கிறது.
இந்நிலையில், பிரகாஷ்ராஜின் சபதத்தை நிறைவேற்றி ப்ரீத்தி ஜிந்தாவை மகேஷ்பாபு மணக்கிறாரா, விவசாயிகளை மகேஷ்பாபு காப்பாற்றுகிறாரா என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதி கதை.
தனது முதல் படத்திலேயே மகேஷ்பாபு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மாணவனாக நடிப்பது முதல் காதல், சண்டை காட்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ப்ரீத்தி ஜிந்தா சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக காதல் காட்சிகளில் அவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.
படத்தில் சிலகாட்சிகளில் வந்தாலும் பிரமானந்தம் மற்றும் எம்.எஸ்.நாராயணாவின் நகைச்சுவைகள் சிரிக்கும்படி உள்ளது.
படத்தின் இயக்குநர் கோவாலமுடி ராகவேந்திர ராவ் சிறப்பாக திரைக்கதையை அமைத்துள்ளார். காதல், சண்டை, காமெடி என அனைத்து காட்சிகளையும் ரசிக்கும் படி அமைத்துள்ளது சிறப்பு.
மணி சர்மாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சண்ட் படத்தை சிறப்பாக காட்சிபடுத்தியுள்ளார்.
மொத்தத்தில் துணிச்சல்காரன் வென்றான்.
ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி ஐயர், ஷிவதா ஐயர் நடித்துள்ள `அதே கண்கள்' படத்தின் விமர்சனத்தை காணலாம்.
நாயகன் கலையரசன் கண்பார்வையற்றவர். 15 வயது இருக்கும் போது ஏற்படும் காய்ச்சலில் பார்வை இழக்கிறார். கண்பார்வையற்ற கலையரசன் ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். கலையின் தோழியாக வரும் ஜனனி ஐயர் ஒருகட்டத்தில் கலை மீது காதல் கொள்கிறார். எனினும் தனது காதலை கலையிடம் வெளிப்படுத்தாமல் தனுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, கலைக்கு ஷிவதா நாயரின் நட்பு கிடைக்கிறது. பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் தனக்கு உள்ள கடன் பிரச்சனை குறித்து கலையிடம் தெரிவிக்கிறார் ஷிவதா.
அப்போது, ஷிவதாவின் கடனை அடைப்பதாக கூறும் கலை தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். அதன்பிறகு, விபத்தில் சிக்கும் கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 3 வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் கலைக்கு கண்பார்வையும் கிடைக்கிறது.
பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் கலை ஷிவதாவை தேடுகிறார். ஷிவதா குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், ஜனனி ஐயருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்தநேரத்தில் கலையை பார்க்க வரும் ஷிவதாவின் தந்தை அவளை கடன் கொடுத்தவர்கள் கடத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்.
பின்னர் ஷிவதாவை காப்பாற்ற செல்லும் இடத்தில் ஷிவதாவின் தந்தை கொலை செய்யப்பட்டு, கொலைப்பழி சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் கலை வீட்டிலேயே தஞ்சமடைகிறார். அப்போது ஒருநாள் டிவியில் ஷிவதாவின் தந்தை விபத்தில் இறந்ததாக வரும் செய்தியை பார்க்கும் கலை, இந்த சம்பவம் குறித்த அறிந்துகொள்வதற்கு களத்தில் இறங்குகிறார். அவருக்கு துணைாக போலீஸ் அதிகாரியாக பாலசரவணன் வருகிறார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பர்களை கண்டுபிடித்து கலை ஷிவதாவை காப்பாற்றுகிறாரா, ஜனனி ஐயருடன் திருமணம் செய்கிறாரா என்பது படத்தின் சுவாரஸ்யமான த்ரில் கதை.
கலையரசன் தனக்குரிய கதாபாத்திரத்தில் தேவைக்கேற்ப துல்லியமாக நடித்துள்ளார். குறிப்பாக கண்பார்வையற்றவராக குறைவான நேரங்களே வந்தாலும், அந்த காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டப்படும்படி உள்ளது.
ஜனனி ஐயர் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.
தனித்துவமான படங்களை தேர்தெடுத்து நடிக்கும் ஷிவதா நாயர் இப்படத்திலும் தனக்குரிய கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளார். முதல் பாதியில் காதல் காட்சிகளில் புன்சிரிப்புடன் வரும் ஷிவதா, இரண்டாவது பாதியில் மிரட்டியுள்ளார். அழகான சொர்ணாக்காவாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
கதைக்கு தேவையான இடத்தில் வரும் பாலசரவணன் அவரது நடிப்பிலும், காமெடியிலும் எப்போதும் போல கலக்கியிருக்கிறார்.
இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே படமாக்கியிருப்பது சிறப்பு. குறிப்பாக ஷிவதாவின் கதாபாத்திரத்திரத்தை மிரட்டலாக கொடுத்திருப்பது மிகச்சிறப்பு.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் காதிற்கு இனிமையான உள்ளது. படத்தின் பின்னணி இசை, குறிப்பாக ஷிவதா வரும் காட்சிகளில் பாடலோடு வரும் பின்னணி இசை அனைவரையும் கவரும்படி இருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவளர் ரவிவர்மன் நீலமேகம் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், அதே கண்கள் ரசிக்க வைக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, கலைக்கு ஷிவதா நாயரின் நட்பு கிடைக்கிறது. பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் தனக்கு உள்ள கடன் பிரச்சனை குறித்து கலையிடம் தெரிவிக்கிறார் ஷிவதா.
அப்போது, ஷிவதாவின் கடனை அடைப்பதாக கூறும் கலை தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். அதன்பிறகு, விபத்தில் சிக்கும் கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 3 வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் கலைக்கு கண்பார்வையும் கிடைக்கிறது.
பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் கலை ஷிவதாவை தேடுகிறார். ஷிவதா குறித்த தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், ஜனனி ஐயருடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்தநேரத்தில் கலையை பார்க்க வரும் ஷிவதாவின் தந்தை அவளை கடன் கொடுத்தவர்கள் கடத்தி வைத்திருப்பதாக கூறுகிறார்.
பின்னர் ஷிவதாவை காப்பாற்ற செல்லும் இடத்தில் ஷிவதாவின் தந்தை கொலை செய்யப்பட்டு, கொலைப்பழி சுமத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் கலை வீட்டிலேயே தஞ்சமடைகிறார். அப்போது ஒருநாள் டிவியில் ஷிவதாவின் தந்தை விபத்தில் இறந்ததாக வரும் செய்தியை பார்க்கும் கலை, இந்த சம்பவம் குறித்த அறிந்துகொள்வதற்கு களத்தில் இறங்குகிறார். அவருக்கு துணைாக போலீஸ் அதிகாரியாக பாலசரவணன் வருகிறார்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பர்களை கண்டுபிடித்து கலை ஷிவதாவை காப்பாற்றுகிறாரா, ஜனனி ஐயருடன் திருமணம் செய்கிறாரா என்பது படத்தின் சுவாரஸ்யமான த்ரில் கதை.
கலையரசன் தனக்குரிய கதாபாத்திரத்தில் தேவைக்கேற்ப துல்லியமாக நடித்துள்ளார். குறிப்பாக கண்பார்வையற்றவராக குறைவான நேரங்களே வந்தாலும், அந்த காட்சிகளில் அவரது நடிப்பு பாராட்டப்படும்படி உள்ளது.
ஜனனி ஐயர் தனக்குரிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் இவரது நடிப்பு அனைவரையும் ஈர்க்கிறது.
தனித்துவமான படங்களை தேர்தெடுத்து நடிக்கும் ஷிவதா நாயர் இப்படத்திலும் தனக்குரிய கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளார். முதல் பாதியில் காதல் காட்சிகளில் புன்சிரிப்புடன் வரும் ஷிவதா, இரண்டாவது பாதியில் மிரட்டியுள்ளார். அழகான சொர்ணாக்காவாக அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
கதைக்கு தேவையான இடத்தில் வரும் பாலசரவணன் அவரது நடிப்பிலும், காமெடியிலும் எப்போதும் போல கலக்கியிருக்கிறார்.
இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் தேவையில்லாத காட்சிகளை திணிக்காமல் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டுமே படமாக்கியிருப்பது சிறப்பு. குறிப்பாக ஷிவதாவின் கதாபாத்திரத்திரத்தை மிரட்டலாக கொடுத்திருப்பது மிகச்சிறப்பு.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் காதிற்கு இனிமையான உள்ளது. படத்தின் பின்னணி இசை, குறிப்பாக ஷிவதா வரும் காட்சிகளில் பாடலோடு வரும் பின்னணி இசை அனைவரையும் கவரும்படி இருக்கிறது.
படத்தின் ஒளிப்பதிவளர் ரவிவர்மன் நீலமேகம் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
மொத்தத்தில், அதே கண்கள் ரசிக்க வைக்கிறது.
ஹிருத்திக் ரோஷன் - யாமி கவுதம் நடிப்பில் இந்தியில் வெளிவந்த ‘காபில்’ என்ற படம் ‘பலம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. இந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் ஹிருத்திக் ரோஷன் பார்வையற்றவர். இருந்தும், இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். காதால் கேட்டு, அந்த கதாபாத்திரத்து ஏற்ப டப்பிங் கொடுக்கும் திறமை பெற்றவர். இவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறும்போது, கண் தெரியாத யாமி கவுதமின் அறிமுகம் கிடைக்கிறது. தனக்கு கண் தெரியாத சூழலில் கண் தெரியாத ஒருவரை எப்படி திருமணம் செய்துகொள்வது என்று யாமி கவுதம் யோசிக்கிறார்.
ஆனால், ஹிருத்திக் ரோஷன் அவளிடம் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவருடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அரசியல் பிரமுகர் ஒருவரின் தம்பியால் இவர்கள் குடும்பத்துக்குள் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
அந்த அரசியல் பிரமுகரின் தம்பி இவர்கள் இருவருக்கும் கண் தெரியாது என்பதை அறிந்துகொண்டு, ஒருநாள் ஹிருத்திக் ரோஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து யாமி கவுதமை பலாத்காரம் செய்துவிடுகிறார். இதுகுறித்து அறிந்த ஹிருத்திக் ரோஷன் போலீஸ் நிலையத்தை நாடுகிறார். போலீசோ அரசியல் புள்ளியின் தம்பி இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாமல், அதற்குண்டான ஆதாரங்களையெல்லாம் அழித்துவிடுகிறார்கள்.
இதனால், மனமுடைந்த ஹிருத்திக் ரோஷன் வீட்டில் ரொம்பவும் மவுனமாகவே இருக்கிறார். தன்னை இரண்டு பேர் கற்பழித்துவிட்டார்கள் என்பதால்தான் ஹிருத்திக் ரோஷன் அதுபோல் இருப்பதாக நினைக்கும் யாமி கவுதம், அவனிடமிருந்து பிரிந்து செல்வதாக கூறுகிறாள். அதற்கும் ஹிருத்திக் ரோஷன் அமைதியாகவே இருக்கிறார்.
மறுநாள், ஹிருத்திக் ரோஷன் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது யாமி கவுதம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துகிடக்கிறாள். அவள் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்று யோசிக்கும் ஹிருத்திக் ரோஷனுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் தகவல்கள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இறுதியில், அவள் எதற்காக தற்கொலை செய்துகொண்டாள்? தனது மனைவியை பலாத்காரம் செய்தவர்களை ஹிருத்திக் ரோஷன் கண் தெரியாத சூழ்நிலையில் எப்படி பழிவாங்கினார்? என்பதே மீதிக்கதை.
ஹிருத்திக் ரோஷன்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. அவருடைய சினிமா பயணத்தில் இந்த படத்தில்தான் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. படத்தின் ஆரம்பத்தில் ஹிருத்திக் பயங்கரமான டான்ஸ் ஒன்றை ஆடியிருப்பார். கண் தெரியாத ஒருவரால் கவனம் சிதறாமல் சிறப்பாக ஆடமுடியும் என்பதை இந்த பாடலில் ஆடி நிரூபித்திருப்பார் ஹிருத்திக். அந்த பாடலில் இவருடைய ஆட்டத்தை பார்க்கும்போது நமக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்தமுறை ஹிருத்திக் ரோஷனுக்கு ஹிட் படம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தோடு இந்த படம் வெளிவந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு இருப்பதால், ரசிகர்கள் தனது ஹீரோவை மாஸாக பார்க்கத்தான் எண்ணுவார்கள். ஆனால், ஹிருத்திக் அதையெல்லாம் உடைத்தெறிந்து எந்தவித அலட்டலும் இல்லாமல், ஒரு எதார்த்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது துணிச்சலான காரியம்தான். அவருடைய துணிச்சல் கண்டிப்பாக கைகொடுத்திருக்கிறது எனலாம்.
யாமி கவுதம் கண் தெரியாதவராக வந்தாலும் பார்க்க அழகாகவே இருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஹிருத்திக்-யாமி கவுதம் இருவருக்குமுண்டான காதல் காட்சிகளும் அழகாக இருக்கிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் சஞ்சய் குப்தா, ஹிருத்திக் ரோஷனுடன் முதன்முதலாக கைகோர்த்திருக்கிறார். இந்திய சினிமாவுக்கு அதரபழசான பழிவாங்கும் கதை என்றாலும், அதை எப்படி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார் என்பது பெரிய ஆவலாக இருந்தது. அந்த ஆவலை பூர்த்தி செய்திருக்கிறார். சஞ்சய் குப்தா, கொரியன் படங்களை தழுவியே பெரும்பாலான படங்களை எடுத்திருக்கிறார். அதேபோல் இந்த படத்தையும் ரொம்பவும் திரில்லிங்காகவே கொண்டு போயிருக்கிறார். பழிவாங்கும் கதைகளுக்கு உண்டான வழக்கமான காட்சியமைப்புகளே இருப்பதால், தொடர்ந்து ரசிக்கமுடியவில்லை. முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி கொஞ்சம் விறுவிறுப்படைகிறது.
ராஜேஷ் ரோஷன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பழைய கிளாசிக் பாடல்களை ரீமேக் செய்திருப்பது பெரிதாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை. சுதீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘பலம்’ நிறைவு.
ஆனால், ஹிருத்திக் ரோஷன் அவளிடம் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவருடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அரசியல் பிரமுகர் ஒருவரின் தம்பியால் இவர்கள் குடும்பத்துக்குள் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
அந்த அரசியல் பிரமுகரின் தம்பி இவர்கள் இருவருக்கும் கண் தெரியாது என்பதை அறிந்துகொண்டு, ஒருநாள் ஹிருத்திக் ரோஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து யாமி கவுதமை பலாத்காரம் செய்துவிடுகிறார். இதுகுறித்து அறிந்த ஹிருத்திக் ரோஷன் போலீஸ் நிலையத்தை நாடுகிறார். போலீசோ அரசியல் புள்ளியின் தம்பி இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாமல், அதற்குண்டான ஆதாரங்களையெல்லாம் அழித்துவிடுகிறார்கள்.
இதனால், மனமுடைந்த ஹிருத்திக் ரோஷன் வீட்டில் ரொம்பவும் மவுனமாகவே இருக்கிறார். தன்னை இரண்டு பேர் கற்பழித்துவிட்டார்கள் என்பதால்தான் ஹிருத்திக் ரோஷன் அதுபோல் இருப்பதாக நினைக்கும் யாமி கவுதம், அவனிடமிருந்து பிரிந்து செல்வதாக கூறுகிறாள். அதற்கும் ஹிருத்திக் ரோஷன் அமைதியாகவே இருக்கிறார்.
மறுநாள், ஹிருத்திக் ரோஷன் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது யாமி கவுதம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துகிடக்கிறாள். அவள் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்று யோசிக்கும் ஹிருத்திக் ரோஷனுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் தகவல்கள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இறுதியில், அவள் எதற்காக தற்கொலை செய்துகொண்டாள்? தனது மனைவியை பலாத்காரம் செய்தவர்களை ஹிருத்திக் ரோஷன் கண் தெரியாத சூழ்நிலையில் எப்படி பழிவாங்கினார்? என்பதே மீதிக்கதை.
ஹிருத்திக் ரோஷன்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. அவருடைய சினிமா பயணத்தில் இந்த படத்தில்தான் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. படத்தின் ஆரம்பத்தில் ஹிருத்திக் பயங்கரமான டான்ஸ் ஒன்றை ஆடியிருப்பார். கண் தெரியாத ஒருவரால் கவனம் சிதறாமல் சிறப்பாக ஆடமுடியும் என்பதை இந்த பாடலில் ஆடி நிரூபித்திருப்பார் ஹிருத்திக். அந்த பாடலில் இவருடைய ஆட்டத்தை பார்க்கும்போது நமக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்தமுறை ஹிருத்திக் ரோஷனுக்கு ஹிட் படம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தோடு இந்த படம் வெளிவந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு இருப்பதால், ரசிகர்கள் தனது ஹீரோவை மாஸாக பார்க்கத்தான் எண்ணுவார்கள். ஆனால், ஹிருத்திக் அதையெல்லாம் உடைத்தெறிந்து எந்தவித அலட்டலும் இல்லாமல், ஒரு எதார்த்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது துணிச்சலான காரியம்தான். அவருடைய துணிச்சல் கண்டிப்பாக கைகொடுத்திருக்கிறது எனலாம்.
யாமி கவுதம் கண் தெரியாதவராக வந்தாலும் பார்க்க அழகாகவே இருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஹிருத்திக்-யாமி கவுதம் இருவருக்குமுண்டான காதல் காட்சிகளும் அழகாக இருக்கிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் சஞ்சய் குப்தா, ஹிருத்திக் ரோஷனுடன் முதன்முதலாக கைகோர்த்திருக்கிறார். இந்திய சினிமாவுக்கு அதரபழசான பழிவாங்கும் கதை என்றாலும், அதை எப்படி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார் என்பது பெரிய ஆவலாக இருந்தது. அந்த ஆவலை பூர்த்தி செய்திருக்கிறார். சஞ்சய் குப்தா, கொரியன் படங்களை தழுவியே பெரும்பாலான படங்களை எடுத்திருக்கிறார். அதேபோல் இந்த படத்தையும் ரொம்பவும் திரில்லிங்காகவே கொண்டு போயிருக்கிறார். பழிவாங்கும் கதைகளுக்கு உண்டான வழக்கமான காட்சியமைப்புகளே இருப்பதால், தொடர்ந்து ரசிக்கமுடியவில்லை. முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி கொஞ்சம் விறுவிறுப்படைகிறது.
ராஜேஷ் ரோஷன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பழைய கிளாசிக் பாடல்களை ரீமேக் செய்திருப்பது பெரிதாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை. சுதீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘பலம்’ நிறைவு.
2012-ஆம் ஆண்டு தெலுங்கில் ‘6’ என்ற பெயரில் ஜெகபதி பாபு நடித்து வெளிவந்த படமே தற்போது ‘சூரக்கோட்டை மர்மம்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இந்த படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒருநாள் என்பது 24 மணி நேரம் என்றால், சூரக்கோட்டை என்ற குக்கிராமத்தில் வாழும் மனிதர்களுக்கு மட்டும் 12 மணி நேரம்தான் ஒருநாள் கணக்கு. அவர்கள் காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்தால் மாலை 6 மணிக்குள் அவர்கள் வீட்டுக்குள் சென்றுவிடவேண்டும். அப்படி யாராவது 6 மணிக்கு மேல் வெளியே சுற்றித் திரிந்தால் அவர்கள் இறந்துவிடுவார்கள்.
இப்படியான மர்மங்கள் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்தான் நாயகன் ஜெகபதி பாபு. இவர் ஐ.ஏ.எஸ். படிப்பு முடித்துவிட்டு அந்த ஊருக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நினைக்கிறார். ஆனால், இவர் படித்து முடித்தவுடன் எதிர்பாராதவிதமாக இறந்துபோகிறார்.
நிறைவேறாத ஆசைகளுடன் இவர் இறந்துபோன பிறகுதான் அந்த ஊரில் மாலை 6 மணிக்கு மேல் இறக்கின்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. இதனால் கிராம மக்களின் சந்தேகம் இவர்கூடவே வலம் வரும் நாயகி காயத்ரி ஐயர் மேல் விழுகிறது. உண்மையில், இந்த சம்பவங்களுக்கெல்லாம் யார் காரணம்? ஜெகபதிபாபு உண்மையில் இறந்துவிட்டாரா? என்பதை பிற்பாதியில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் ஜெகபதி பாபுதான் படத்தில் இவரது முகத்தை வெறும் 15 நிமிடங்கள்தான் பார்க்க முடிகிறது. மற்றபடி, இவரது முகத்தை பார்க்கமுடியவில்லை. அதனால், இவரை நம்பி போனவர்களுக்கு படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம்தான். நாயகி காயத்ரி ஐயர் படத்தின் முக்கால் பாகம் நிறைந்திருக்கிறார். கதைப்படி இவர் கிராமத்து பெண். ஆனால், படம் முழுக்க கிளாமர் உடையிலேயே இயக்குனர் வலம்வர வைத்திருப்பது ஏனோ தெரியவில்லை.
வில்லனாக வரும் பள்ளிரெட்டி புருதிராஜ் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் பலவீனமானவர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருப்பவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை. ரொம்பவும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் லிங்காத். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இந்த படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? என்றால் சந்தேகமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கிறது.
ரவி வர்மாவின் இசையிலும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. லேகா ரத்னகுமாரின் பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். பிரபா கரணின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘சூரக்கோட்டை மர்மம்’ புரியவில்லை.
இப்படியான மர்மங்கள் இருக்கும் ஊரில் பிறந்து வளர்ந்தவர்தான் நாயகன் ஜெகபதி பாபு. இவர் ஐ.ஏ.எஸ். படிப்பு முடித்துவிட்டு அந்த ஊருக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நினைக்கிறார். ஆனால், இவர் படித்து முடித்தவுடன் எதிர்பாராதவிதமாக இறந்துபோகிறார்.
நிறைவேறாத ஆசைகளுடன் இவர் இறந்துபோன பிறகுதான் அந்த ஊரில் மாலை 6 மணிக்கு மேல் இறக்கின்ற சம்பவங்கள் எல்லாம் நடக்கிறது. இதனால் கிராம மக்களின் சந்தேகம் இவர்கூடவே வலம் வரும் நாயகி காயத்ரி ஐயர் மேல் விழுகிறது. உண்மையில், இந்த சம்பவங்களுக்கெல்லாம் யார் காரணம்? ஜெகபதிபாபு உண்மையில் இறந்துவிட்டாரா? என்பதை பிற்பாதியில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் ஜெகபதி பாபுதான் படத்தில் இவரது முகத்தை வெறும் 15 நிமிடங்கள்தான் பார்க்க முடிகிறது. மற்றபடி, இவரது முகத்தை பார்க்கமுடியவில்லை. அதனால், இவரை நம்பி போனவர்களுக்கு படத்தில் மிகப்பெரிய ஏமாற்றம்தான். நாயகி காயத்ரி ஐயர் படத்தின் முக்கால் பாகம் நிறைந்திருக்கிறார். கதைப்படி இவர் கிராமத்து பெண். ஆனால், படம் முழுக்க கிளாமர் உடையிலேயே இயக்குனர் வலம்வர வைத்திருப்பது ஏனோ தெரியவில்லை.
வில்லனாக வரும் பள்ளிரெட்டி புருதிராஜ் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் பலவீனமானவர் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மற்றபடி, படத்தில் நடித்திருப்பவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை. ரொம்பவும் சிறிய பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஸ்ரீகாந்த் லிங்காத். தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு இந்த படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? என்றால் சந்தேகமே. படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கிறது.
ரவி வர்மாவின் இசையிலும் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. லேகா ரத்னகுமாரின் பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கலாம். பிரபா கரணின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘சூரக்கோட்டை மர்மம்’ புரியவில்லை.
இயக்குநர் யுரேகா- சாண்ட்ரா எமி இணைந்து நடித்துள்ள சிவப்பு எனக்கு பிடிக்கும் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்க்கலாம்.
சென்னையில் எழுத்தாளராக வரும் யுரேகா புத்தகம் ஒன்றை எழுத முடிவு செய்கிறார். சிவப்பு விளக்கு பகுதியை மையமாகக் கொண்ட ஒரு புத்தகத்தை எழுத நினைக்கும் யுரோகா அதற்காக விலைமாது ஒருவரை நேர்க்காணல் செய்ய விரும்புகிறார்.
இதற்காக சிகப்பு விளக்கு பகுதிக்கு செல்லும் யுரேகா, அங்கு வாழும் பெண்ணாண சாண்ட்ராவிடம், அவரது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை கேட்கிறார். குறிப்பாக சிவப்பு விளக்கு பகுதியில் சாண்ட்ரா சந்தித்த வித்தியாசமான மற்றும் மாறுபட்ட மனிதர்கள் பற்றியும் அவர்களால் சாண்ட்ரா அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் கேட்கிறார்.
இதில் தனது வாழ்க்கையில், மறக்க முடியாததாக 5 மனிதர்கள் பற்றி சாண்ட்ரா விவரிக்கிறார். ஒரு இளைஞர், டாக்டர், சாமியார், திருநங்கை, தீவிரவாதி உள்ளிட்ட 5 பேரால் தான் அனுபவித்த கொடுமைகளை விவரிக்கும் சாண்ட்ரா, காவல் அதிகாரியின் மாமூல் தொல்லை குறித்தும் கவலை தெரிவிக்கிறார்.
சென்னையில் தினமும் பல்வேறு வகையான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக பாலியல் தொல்லை, கள்ளத்தொடர்பு,
விபசாரம், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளே அதிகளவில் பதியப்படுகிறது. இதற்கு தீர்வு காண சென்னையில் சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் யுரேகா, அவ்வாறு சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்குவதன் மூலம் குற்றங்கள் குறையும் என்றும் நம்புகிறார்.
இந்தியாவில் மும்பை உட்பட ஒரு சில மாநிலங்களில் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன. அதேபோல் சென்னையில் சிவப்பு விளக்கு பகுதியை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் யுரோகா.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் கல்வி, வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செய்யும் தொல்லையால், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க சிவப்பு விளக்கு பகுதியை சென்னையில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யும் யுரோகா, இதன்மூலம் ரவுடி, தொழிலதிபர்கள் மூலம் தொல்லைக்குள்ளாகும் விலைமாதுக்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புவது சிறப்பு.
படத்தில் யுரேகா, சாண்ட்ரா எமியை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அனைவரும் அவர்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். தணிக்கைக்குழுவில் ஏ சான்றிதழ் பெற்றாலும்,இப்படம் காமம், கவர்ச்சி, பாலியல் உள்ளிட்ட காட்சிகளின்றி அமைந்துள்ளது.
எழுத்தாளராக நடித்துள்ள யுரேகா அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார். எழுத்தாளருக்கு தேவையான கேள்விகளுடனும், கிண்டலுடனும் படத்தில் வலம் வருகிறார்.
அதே போல் சிவப்பு விளக்கு பகுதியில் வரும் பெண்ணாக நடித்துள்ள சாண்ட்ராவும் படம் முழுவதும் கவர்ச்சி, காமம் இன்றி திரையில்
வலம்வருகிறார்.
மேலும், படம் முழுவதும் கவர்ச்சி, காமம், பாலியல் போன்ற காட்சிகள் இல்லாமல் சிறப்பான திரைக்கதையை அமைத்திருப்பது யுரேகாவின் நேர்த்தியான இயக்கத்தை காட்டுகிறது. பாலியல் சம்பந்தமான எந்தவித காட்சிகளின்றியும் யுரேகா படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் சிவப்பு எனக்கு பிடிக்கும் சிவப்பு பகுதி வேண்டி சிவப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட புதுமையான கதை.
இதற்காக சிகப்பு விளக்கு பகுதிக்கு செல்லும் யுரேகா, அங்கு வாழும் பெண்ணாண சாண்ட்ராவிடம், அவரது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை கேட்கிறார். குறிப்பாக சிவப்பு விளக்கு பகுதியில் சாண்ட்ரா சந்தித்த வித்தியாசமான மற்றும் மாறுபட்ட மனிதர்கள் பற்றியும் அவர்களால் சாண்ட்ரா அனுபவித்த கஷ்டங்கள் குறித்தும் கேட்கிறார்.
இதில் தனது வாழ்க்கையில், மறக்க முடியாததாக 5 மனிதர்கள் பற்றி சாண்ட்ரா விவரிக்கிறார். ஒரு இளைஞர், டாக்டர், சாமியார், திருநங்கை, தீவிரவாதி உள்ளிட்ட 5 பேரால் தான் அனுபவித்த கொடுமைகளை விவரிக்கும் சாண்ட்ரா, காவல் அதிகாரியின் மாமூல் தொல்லை குறித்தும் கவலை தெரிவிக்கிறார்.
சென்னையில் தினமும் பல்வேறு வகையான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. குறிப்பாக பாலியல் தொல்லை, கள்ளத்தொடர்பு,
விபசாரம், கற்பழிப்பு உள்ளிட்ட வழக்குகளே அதிகளவில் பதியப்படுகிறது. இதற்கு தீர்வு காண சென்னையில் சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் யுரேகா, அவ்வாறு சிகப்பு விளக்கு பகுதியை உருவாக்குவதன் மூலம் குற்றங்கள் குறையும் என்றும் நம்புகிறார்.
இந்தியாவில் மும்பை உட்பட ஒரு சில மாநிலங்களில் சிவப்பு விளக்கு பகுதிகள் உள்ளன. அதேபோல் சென்னையில் சிவப்பு விளக்கு பகுதியை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறார் யுரோகா.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து இளைஞர்கள், பெரியவர்கள் என பலர் கல்வி, வேலைவாய்ப்புக்காக சென்னைக்கு வருகின்றனர். அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செய்யும் தொல்லையால், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க சிவப்பு விளக்கு பகுதியை சென்னையில் உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்யும் யுரோகா, இதன்மூலம் ரவுடி, தொழிலதிபர்கள் மூலம் தொல்லைக்குள்ளாகும் விலைமாதுக்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் நம்புவது சிறப்பு.
படத்தில் யுரேகா, சாண்ட்ரா எமியை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அனைவரும் அவர்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். தணிக்கைக்குழுவில் ஏ சான்றிதழ் பெற்றாலும்,இப்படம் காமம், கவர்ச்சி, பாலியல் உள்ளிட்ட காட்சிகளின்றி அமைந்துள்ளது.
எழுத்தாளராக நடித்துள்ள யுரேகா அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார். எழுத்தாளருக்கு தேவையான கேள்விகளுடனும், கிண்டலுடனும் படத்தில் வலம் வருகிறார்.
அதே போல் சிவப்பு விளக்கு பகுதியில் வரும் பெண்ணாக நடித்துள்ள சாண்ட்ராவும் படம் முழுவதும் கவர்ச்சி, காமம் இன்றி திரையில்
வலம்வருகிறார்.
மேலும், படம் முழுவதும் கவர்ச்சி, காமம், பாலியல் போன்ற காட்சிகள் இல்லாமல் சிறப்பான திரைக்கதையை அமைத்திருப்பது யுரேகாவின் நேர்த்தியான இயக்கத்தை காட்டுகிறது. பாலியல் சம்பந்தமான எந்தவித காட்சிகளின்றியும் யுரேகா படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் சிவப்பு எனக்கு பிடிக்கும் சிவப்பு பகுதி வேண்டி சிவப்பு இல்லாமல் எடுக்கப்பட்ட புதுமையான கதை.
பார்த்திபன்-சாந்தனு-பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
சென்னையில் டிராவல்ஸ் கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன். இவருக்கு ஒருநாள் வெளிநாட்டில் இருந்து வரும் சாந்தனுவின் அறிமுகம் கிடைக்கிறது. சாந்தனுவை பற்றி நன்கு தெரிந்திருக்கும் பார்த்திபன், அவரை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்க வைக்கிறார். சாந்தனுவும் பார்த்திபனின் பேச்சில் மயங்கி, அவர் சொல்லும் இடத்திலேயே தங்க முடிவு செய்கிறார்.
அந்த பங்களாவில் பணிபுரியும் பார்வதி நாயரை பார்த்தவுடனே சாந்தனுவுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவளும் சாந்தனுவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். ஒருகட்டத்தில் பார்த்திபனின் மனைவிதான் பார்வதி நாயர் என்பது சாந்தனுவுக்கு தெரிய வருகிறது.
பார்த்திபனின் வயதுக்கும், பார்வதி நாயரின் வயதுக்கும் ஒத்துப்போகாத நிலையில், இந்த திருமணம் எப்படி நடந்தது? என்று சாந்தனு கேட்கையில், அதற்கு பார்த்திபன், தான் சிறுவயதிலிருந்தே பார்வதி நாயரை தூக்கி வளர்த்ததாகவும், அவளுக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோன நிலையில், வேறு வழியின்றி சிறுவயதிலிருந்து தனக்கு ஆதரவளித்த பார்வதி நாயருடைய அம்மாவுக்கு நன்றிகடன் செலுத்தும்வகையில் அவளை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு நடந்த ஒரு விபத்தில் தனக்கு காலில் அடிபட்டதையும், இதையடுத்து, தாம்பத்ய ரீதியாக தனது மனைவியை திருப்திபடுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட வேதனையையும் சொல்லி முடிக்கிறார்.
இதையெல்லாம் பொறுமையாக கேட்ட சாந்தனு, அவர் மீது இரக்கப்படுவதா? அல்லது வேதனைப்படுவதா? என்ற நிலைமையில் இருக்கிறார்.
இந்நிலையில், அடிக்கடி பார்வதி நாயருக்கு வலிப்பு வருவதும், அதற்காக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதையும் சாந்தனு அறிகிறார். ஒருமுறை வலிப்பு வரும்போது அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், சாந்தனு. அந்த நேரத்தில் சாந்தனுவிடம், மருத்துவர் அவள் தாம்பத்யத்தில் முழு திருப்தி கிடைக்காததால்தான் வலிப்பு வருவதாக கூறுகிறார்.
இதையெல்லாம் கேட்ட சாந்தனு இதற்கு என்ன முடிவெடுத்தார்? சாந்தனுவை பார்த்திபன் தன்னுடனே தங்க வைக்க காரணம் என்ன? என்பதற்கெல்லாம் பிற்பாதியில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
பார்த்திபன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். வெறுமனே நடிக்கவேண்டும் என்பதைவிட இப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பார்த்திபனின் வழக்கமான நக்கல், நையாண்டி வசனங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கிறது.
இப்படத்தின் நாயகன் சாந்தனு என்பதைவிட, அவரைவிட அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி பார்வதி நாயர். கடைசிவரை இவருடைய கதாபாத்திரம் மர்மமாகவே செல்வது சிறப்பு. அவருடைய தோற்றத்தை விட, நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.
சாந்தனு, இப்படத்தில் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடனத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வந்துபோனாலும் சிம்ரன் ரசிக்க வைத்திருக்கிறார். தம்பிராமையாவின் காமெடி வழக்கம்போல்தான் என்றாலும், ஒருசில இடங்களில் அதிகமான முகபாவனைகளை கொடுத்து ரசிக்க விடாமல் செய்துவிடுகிறார்.
இந்தப் படம் முற்றிலும் புதுமையமான கதைக்களம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு, வேறு கோணத்தில் யோசித்து எடுக்கப்பட்ட கதையென்று சொல்லிவிட முடியும்.
ஏனென்றால், இந்தப் படத்தில் கதையைவிட, வசனங்கள், திரைக்கதை, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மை என அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது. அவ்வப்போது கொஞ்சம் கிளாமரான காட்சிகளும் வந்துபோகிறது. குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு எதையும் அளவுக்கு மீறி கொண்டு செல்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார், பார்த்திபன்.
கதாபாத்திரங்களின் போக்கு வேறுவிதமாக இருந்தாலும், அது சரியென்று சொல்லும்படி முடிவை வைத்திருந்தாலும், குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத ஒரு படத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
சத்யாவின் இசையமைப்பில் பாடல்கள் சுமார் ரகம்தான். ‘டமுக்காட்டலாம் டமுக்காட்டலாம்’ பாடல் கேட்பதற்கு மட்டும் குதூகலம் கொடுத்திருக்கிறது. அதை தனது நடனத்தினால் மேலும் மெருகேற்றியிருக்கிறார் சாந்தனு. அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ முழுமையடைந்து விட்டது.
அந்த பங்களாவில் பணிபுரியும் பார்வதி நாயரை பார்த்தவுடனே சாந்தனுவுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவளும் சாந்தனுவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். ஒருகட்டத்தில் பார்த்திபனின் மனைவிதான் பார்வதி நாயர் என்பது சாந்தனுவுக்கு தெரிய வருகிறது.
பார்த்திபனின் வயதுக்கும், பார்வதி நாயரின் வயதுக்கும் ஒத்துப்போகாத நிலையில், இந்த திருமணம் எப்படி நடந்தது? என்று சாந்தனு கேட்கையில், அதற்கு பார்த்திபன், தான் சிறுவயதிலிருந்தே பார்வதி நாயரை தூக்கி வளர்த்ததாகவும், அவளுக்கு நடக்க இருந்த திருமணம் நின்றுபோன நிலையில், வேறு வழியின்றி சிறுவயதிலிருந்து தனக்கு ஆதரவளித்த பார்வதி நாயருடைய அம்மாவுக்கு நன்றிகடன் செலுத்தும்வகையில் அவளை திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு நடந்த ஒரு விபத்தில் தனக்கு காலில் அடிபட்டதையும், இதையடுத்து, தாம்பத்ய ரீதியாக தனது மனைவியை திருப்திபடுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட வேதனையையும் சொல்லி முடிக்கிறார்.
இதையெல்லாம் பொறுமையாக கேட்ட சாந்தனு, அவர் மீது இரக்கப்படுவதா? அல்லது வேதனைப்படுவதா? என்ற நிலைமையில் இருக்கிறார்.
இந்நிலையில், அடிக்கடி பார்வதி நாயருக்கு வலிப்பு வருவதும், அதற்காக அவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதையும் சாந்தனு அறிகிறார். ஒருமுறை வலிப்பு வரும்போது அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், சாந்தனு. அந்த நேரத்தில் சாந்தனுவிடம், மருத்துவர் அவள் தாம்பத்யத்தில் முழு திருப்தி கிடைக்காததால்தான் வலிப்பு வருவதாக கூறுகிறார்.
இதையெல்லாம் கேட்ட சாந்தனு இதற்கு என்ன முடிவெடுத்தார்? சாந்தனுவை பார்த்திபன் தன்னுடனே தங்க வைக்க காரணம் என்ன? என்பதற்கெல்லாம் பிற்பாதியில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.
பார்த்திபன் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். வெறுமனே நடிக்கவேண்டும் என்பதைவிட இப்படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பார்த்திபனின் வழக்கமான நக்கல், நையாண்டி வசனங்களும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கிறது.
இப்படத்தின் நாயகன் சாந்தனு என்பதைவிட, அவரைவிட அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி பார்வதி நாயர். கடைசிவரை இவருடைய கதாபாத்திரம் மர்மமாகவே செல்வது சிறப்பு. அவருடைய தோற்றத்தை விட, நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.
சாந்தனு, இப்படத்தில் கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடனத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் வந்துபோனாலும் சிம்ரன் ரசிக்க வைத்திருக்கிறார். தம்பிராமையாவின் காமெடி வழக்கம்போல்தான் என்றாலும், ஒருசில இடங்களில் அதிகமான முகபாவனைகளை கொடுத்து ரசிக்க விடாமல் செய்துவிடுகிறார்.
இந்தப் படம் முற்றிலும் புதுமையமான கதைக்களம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு, வேறு கோணத்தில் யோசித்து எடுக்கப்பட்ட கதையென்று சொல்லிவிட முடியும்.
ஏனென்றால், இந்தப் படத்தில் கதையைவிட, வசனங்கள், திரைக்கதை, ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தன்மை என அனைத்தும் அருமையாக அமைந்துள்ளது. அவ்வப்போது கொஞ்சம் கிளாமரான காட்சிகளும் வந்துபோகிறது. குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு எதையும் அளவுக்கு மீறி கொண்டு செல்லாமல் அழகாக சொல்லியிருக்கிறார், பார்த்திபன்.
கதாபாத்திரங்களின் போக்கு வேறுவிதமாக இருந்தாலும், அது சரியென்று சொல்லும்படி முடிவை வைத்திருந்தாலும், குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாத ஒரு படத்தை பார்த்திபன் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
சத்யாவின் இசையமைப்பில் பாடல்கள் சுமார் ரகம்தான். ‘டமுக்காட்டலாம் டமுக்காட்டலாம்’ பாடல் கேட்பதற்கு மட்டும் குதூகலம் கொடுத்திருக்கிறது. அதை தனது நடனத்தினால் மேலும் மெருகேற்றியிருக்கிறார் சாந்தனு. அர்ஜுன் ஜனாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ முழுமையடைந்து விட்டது.
ஹாலிவுட்டில் XXX பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்துள்ள ‘தி ரிட்டன் ஆப் ஸேண்டர் கேஜ்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
வானில் இருந்து செயற்கைகோள் ஒன்று எரிந்து பூமியில் விழுகிறது. இந்த செயற்கைகோள் எப்படி கீழே விழுந்தது என்பது குறித்த ஆய்வில் முக்கியமான தலைவர்கள் எல்லாம் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஒரு கருவி மூலமாக அந்த செயற்கைகோள் செயலிழக்கச் செய்யப்பட்டு பூமியில் வீழ்த்தப்பட்டதாக தெரிய வருகிறது.
எரிந்து பூமியில் விழுந்த செயற்கைக்கோளுடன் இருந்த அந்த கருவியை வைத்து, அந்த கருவியை யார் செய்திருப்பார்கள்? யார் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று உயர்மட்ட விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்தநேரத்தில், இவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அந்த கருவியை திருடி சென்றுவிடுகிறார்.
இந்நிலையில், அந்த கருவியை கண்டுபிடிப்பதற்காக வின் டீசல் தலைமையில் XXX குழுவை களமிறக்க அமெரிக்கா ராணுவம் முடிவு செய்கிறது. XXX குழுவில் இருந்து விலகி இருக்கும் வின் டீசல், நாட்டின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைக்காக இந்த குழுவில் இணைகிறார். வின் டீசலுடன் மேலும் 3 பேர் XXX குழுவில் இணைகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சக்திகள் உண்டு.
இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து கருவியை திருடிச் சென்றவர்களை தேடி புறப்படுகின்றனர். கருவியை திருடியவர்கள் ஒரு தீவில் இருப்பதை அறிந்து அங்குபோய் சேருகிறார்கள். அங்கு சென்றபிறகுதான் ஏற்கெனவே, XXX குழுவில் இருந்தவர்களான டோனி ஜா, தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர்தான் இந்த கருவியை திருடியதாக தெரிகிறது. அவர்கள் எதற்காக இந்த கருவியை திருடினார்கள்? அவர்கள்தான் செயற்கைகோளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார்களா? அல்லது வேறு யாருக்கும் இதற்கு தொடர்பு இருந்ததா? என்பதே கண்டுபிடித்து, அதை அழிப்பதே மீதிக்கதை.
XXX படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான காட்சிகளும் நினைவுக்கு வரும். அதேபோல், இந்த படத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. XXX படவரிசையில் முதல் பாகத்தில் நடித்தபிறகு, தற்போது மூன்றாம் பாகத்தில் நடித்திருக்கிறார் வின் டீசல். இரண்டாம் பாகத்தில் இவர் இல்லையென்ற குறையை மூன்றாம் பாகத்தில் அவர் பூர்த்தி செய்திருக்கிறார். அவருடைய உடல் வாகு, அதற்கேற்ற ஆக்ஷன் காட்சிகளெல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
தீபிகா படுகோனேவுக்கு ஹாலிவுட்டுக்கு புதிது என்றாலும், ஆக்ஷன் காட்சிகளெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஹாலிவுட் நடிகைகளுக்கு போட்டி போடும் அளவுக்கு இவரது ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. இந்திய நடிகர், நடிகைகளுக்கு ஹாலிவுட்டில் இடம் கிடைத்தாலும், அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படுவது கிடையாது. ஆனால், இந்த படத்தில் தீபிகா படுகோனேவுக்கு முதல் படமாக இருந்தாலும் நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவர்ச்சியிலும் ரொம்பவுமே தாராளம் காட்டியிருக்கிறார்.
முதல் இரண்டு பாகத்திலும் வந்த சாமுவேல் எல்.ஜாக்சன் இந்த பாகத்திலும் வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டோனி ஜா, டோனி யென் ஆகியோரும் சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது ஆக்ரோஷ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும், காட்சியமைப்புகளில் விறுவிறுப்பு, ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதால் படம் பார்க்கிறவர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாமல் செல்கிறது. அதை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் கருஷோ. குறிப்பாக, எதிரியிடம் பேசிக் கொண்டிருக்கும் வின் டீசல், தனது விரலை உயர்த்தி ஒன்று இரண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவரது விரல்களுக்கு இடையில் குண்டு பாய்ந்து எதிரி வீழ்வது எல்லாம் ரசிகர்களை ஒருநொடியில் அதிர்ச்சியாக்கியிருக்கிறது.
படத்தில் நிறைய காட்சிகள் நிஜவாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தாலும், அதை பார்க்கும்போது நமக்கே வியக்க வைக்கும் வண்ணம் தத்ரூபமாக காட்சிப்படுத்தியருப்பது சிறப்பு.
மொத்தத்தில் 'XXX தி ரிட்டன் ஆப் ஸேண்டர் கேஜ்' ஆக்ஷன் பிரியர்களுக்கு சரியான விருந்து.
எரிந்து பூமியில் விழுந்த செயற்கைக்கோளுடன் இருந்த அந்த கருவியை வைத்து, அந்த கருவியை யார் செய்திருப்பார்கள்? யார் இந்த நாச வேலையில் ஈடுபட்டிருப்பார்கள் என்று உயர்மட்ட விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அந்தநேரத்தில், இவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு அந்த கருவியை திருடி சென்றுவிடுகிறார்.
இந்நிலையில், அந்த கருவியை கண்டுபிடிப்பதற்காக வின் டீசல் தலைமையில் XXX குழுவை களமிறக்க அமெரிக்கா ராணுவம் முடிவு செய்கிறது. XXX குழுவில் இருந்து விலகி இருக்கும் வின் டீசல், நாட்டின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைக்காக இந்த குழுவில் இணைகிறார். வின் டீசலுடன் மேலும் 3 பேர் XXX குழுவில் இணைகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சக்திகள் உண்டு.
இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து கருவியை திருடிச் சென்றவர்களை தேடி புறப்படுகின்றனர். கருவியை திருடியவர்கள் ஒரு தீவில் இருப்பதை அறிந்து அங்குபோய் சேருகிறார்கள். அங்கு சென்றபிறகுதான் ஏற்கெனவே, XXX குழுவில் இருந்தவர்களான டோனி ஜா, தீபிகா படுகோனே உள்ளிட்ட 4 பேர்தான் இந்த கருவியை திருடியதாக தெரிகிறது. அவர்கள் எதற்காக இந்த கருவியை திருடினார்கள்? அவர்கள்தான் செயற்கைகோளை செயலிழக்க செய்யும் கருவியை கண்டுபிடித்தார்களா? அல்லது வேறு யாருக்கும் இதற்கு தொடர்பு இருந்ததா? என்பதே கண்டுபிடித்து, அதை அழிப்பதே மீதிக்கதை.
XXX படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகளும், விறுவிறுப்பான காட்சிகளும் நினைவுக்கு வரும். அதேபோல், இந்த படத்தில் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. XXX படவரிசையில் முதல் பாகத்தில் நடித்தபிறகு, தற்போது மூன்றாம் பாகத்தில் நடித்திருக்கிறார் வின் டீசல். இரண்டாம் பாகத்தில் இவர் இல்லையென்ற குறையை மூன்றாம் பாகத்தில் அவர் பூர்த்தி செய்திருக்கிறார். அவருடைய உடல் வாகு, அதற்கேற்ற ஆக்ஷன் காட்சிகளெல்லாம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
தீபிகா படுகோனேவுக்கு ஹாலிவுட்டுக்கு புதிது என்றாலும், ஆக்ஷன் காட்சிகளெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஹாலிவுட் நடிகைகளுக்கு போட்டி போடும் அளவுக்கு இவரது ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. இந்திய நடிகர், நடிகைகளுக்கு ஹாலிவுட்டில் இடம் கிடைத்தாலும், அவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படுவது கிடையாது. ஆனால், இந்த படத்தில் தீபிகா படுகோனேவுக்கு முதல் படமாக இருந்தாலும் நல்லதொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கவர்ச்சியிலும் ரொம்பவுமே தாராளம் காட்டியிருக்கிறார்.
முதல் இரண்டு பாகத்திலும் வந்த சாமுவேல் எல்.ஜாக்சன் இந்த பாகத்திலும் வந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். டோனி ஜா, டோனி யென் ஆகியோரும் சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது ஆக்ரோஷ நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
படத்தின் கதை சாதாரணமாக இருந்தாலும், காட்சியமைப்புகளில் விறுவிறுப்பு, ஆக்ஷன் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதால் படம் பார்க்கிறவர்களுக்கு எந்தவித சலிப்பும் ஏற்படாமல் செல்கிறது. அதை அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் கருஷோ. குறிப்பாக, எதிரியிடம் பேசிக் கொண்டிருக்கும் வின் டீசல், தனது விரலை உயர்த்தி ஒன்று இரண்டு என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, அவரது விரல்களுக்கு இடையில் குண்டு பாய்ந்து எதிரி வீழ்வது எல்லாம் ரசிகர்களை ஒருநொடியில் அதிர்ச்சியாக்கியிருக்கிறது.
படத்தில் நிறைய காட்சிகள் நிஜவாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள முடியாதபடி இருந்தாலும், அதை பார்க்கும்போது நமக்கே வியக்க வைக்கும் வண்ணம் தத்ரூபமாக காட்சிப்படுத்தியருப்பது சிறப்பு.
மொத்தத்தில் 'XXX தி ரிட்டன் ஆப் ஸேண்டர் கேஜ்' ஆக்ஷன் பிரியர்களுக்கு சரியான விருந்து.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள ‘பச்சைக்கிளி பரிமளா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
நாயகன் தாமோதரன் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில், மாடர்ன் பெண் ஒருத்தியை திருமணம் செய்துகொண்டு, அவளுடன் உல்லாசமாக குடும்பம் நடத்தி வருகிறார் நாயகன். இவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையிலேயே, நாயகனின் மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இவரை விட்டு ஓடிவிடுகிறாள்.
மனைவி தன்னை பிரிந்த சோகத்தில் குடியே கதியென்று கிடக்கிறார் நாயகன். அப்போதுதான் விபச்சார தொழில் செய்யும் நாயகி சக்தி ஸ்ரீயின் அறிமுகம் நாயகனுக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே, கணவனை பிரிந்து வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுந்த சக்திஸ்ரீக்கு, தாமோதரனின் வலி புரியவே, அவரை அரவணைத்து ஆதரவு கொடுக்கிறாள்.
சக்தி ஸ்ரீயின் அரவணைப்பும், ஆதரவும் தாமோதரனுக்கு நிம்மதியை கொடுக்கவே, குடிப்பழக்கத்தில் இருந்து விலகுகிறார். இதேவேளையில், நாயகனின் நண்பரும் மாடர்ன் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், அவருக்கோ கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
தனக்கு மாடர்ன் பெண் கிடைக்காத விரக்தியில், தனக்கு மனைவியாக வந்த கிராமத்து பெண்ணை மாடர்ன் பெண்ணாக மாற்ற முயற்சிக்கிறார் நாயகனின் நண்பர். அந்த முயற்சி அவருக்கு எந்தவிதமான வலிகளை கொடுத்தது. தாமோதரன்-சக்திஸ்ரீயின் உறவு எந்த நிலைமைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புதுமுகங்கள் என்பதால் யாரிடமும் அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. அவரவர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாடர்ன் பெண்ணை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்ற சமூக அக்கறையோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார். நாகரீக வாழ்க்கைக்கும், புதுவிதமான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு செல்லும் இளைஞர்களின் வலியை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். ஆனால், அதை சரியான காட்சியமைப்பு இல்லாமல் படமாக்கியிருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. சிறு பட்ஜெட் படமென்பதால் நடிகர், நடிகைகள் தேர்விலும் அதிகம் கவனம் செலுத்த தவறியிருக்கிறார்.
குபேரன் இசையில் பாடல்களை ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் இரைச்சல்தான். கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் குளுமை சேர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘பச்சைக்கிளி பரிமளா’ பறக்கவில்லை.
மனைவி தன்னை பிரிந்த சோகத்தில் குடியே கதியென்று கிடக்கிறார் நாயகன். அப்போதுதான் விபச்சார தொழில் செய்யும் நாயகி சக்தி ஸ்ரீயின் அறிமுகம் நாயகனுக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே, கணவனை பிரிந்து வேறு வழியில்லாமல் விபச்சாரத்தில் விழுந்த சக்திஸ்ரீக்கு, தாமோதரனின் வலி புரியவே, அவரை அரவணைத்து ஆதரவு கொடுக்கிறாள்.
சக்தி ஸ்ரீயின் அரவணைப்பும், ஆதரவும் தாமோதரனுக்கு நிம்மதியை கொடுக்கவே, குடிப்பழக்கத்தில் இருந்து விலகுகிறார். இதேவேளையில், நாயகனின் நண்பரும் மாடர்ன் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார். ஆனால், அவருக்கோ கிராமத்து பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள்.
தனக்கு மாடர்ன் பெண் கிடைக்காத விரக்தியில், தனக்கு மனைவியாக வந்த கிராமத்து பெண்ணை மாடர்ன் பெண்ணாக மாற்ற முயற்சிக்கிறார் நாயகனின் நண்பர். அந்த முயற்சி அவருக்கு எந்தவிதமான வலிகளை கொடுத்தது. தாமோதரன்-சக்திஸ்ரீயின் உறவு எந்த நிலைமைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நடித்திருக்கும் நாயகன், நாயகி முதற்கொண்டு அனைவரும் புதுமுகங்கள் என்பதால் யாரிடமும் அவ்வளவாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. அவரவர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாடர்ன் பெண்ணை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என்ற சமூக அக்கறையோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார். நாகரீக வாழ்க்கைக்கும், புதுவிதமான வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு செல்லும் இளைஞர்களின் வலியை படத்தில் சொல்ல வந்திருக்கிறார். ஆனால், அதை சரியான காட்சியமைப்பு இல்லாமல் படமாக்கியிருப்பதால் ரசிக்க முடியாமல் போகிறது. சிறு பட்ஜெட் படமென்பதால் நடிகர், நடிகைகள் தேர்விலும் அதிகம் கவனம் செலுத்த தவறியிருக்கிறார்.
குபேரன் இசையில் பாடல்களை ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையும் இரைச்சல்தான். கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் குளுமை சேர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘பச்சைக்கிளி பரிமளா’ பறக்கவில்லை.
விஜய்-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கி வெளிவந்துள்ள ‘பைரவா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
ஒய்.ஜி.மகேந்திரன் மேனேஜராக பணிபுரியும் தனியார் வங்கியில், வராத கடன் தொகையை வசூலித்து கொடுப்பவராக பணிபுரிந்து வருபவர்தான் விஜய். இவருடன் சதீஷும் சேர்ந்து அதே பணியை செய்து வருகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் சிபாரிசின் பேரில் வங்கியில் வாங்கிய ரூ.64 லட்சம் பணத்தை மைம் கோபி அந்த பணத்தை திருப்புக்கொடுக்க முடியாது என்று அவரை ஏமாற்றி விடுகிறார்.
இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணமும் நடக்கவுள்ளதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொடுக்கிறார்.
அதன்பின்னர், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் தோழியான கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வருகிறாள். கீர்த்தி சுரேஷை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் விஜய். பின்னர், அவளையே சுற்றி சுற்றி வருகிறார்.
திருமணம் முடிந்து, கீர்த்தி சுரேஷ் ஊருக்கு திரும்பும் வேளையில், பஸ் நிலையத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்த நினைக்கிறார் விஜய். ஆனால், அப்போது கீர்த்தி சுரேஷை ரவுடி கும்பல் ஒன்று தீர்த்துக்கட்ட வருகிறது. பின்னர், ஒரு டெலிபோன் அழைப்பு வந்ததும், அந்த ரவுடி கும்பல் கீர்த்தி சுரேஷை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு சென்றுவிடுகிறது.
இதைப் பார்க்கும் விஜய், அந்த ரவுடி கும்பலுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் என்ன சம்பந்தம் என்று அவளிடமே கேட்கிறார். அப்போது, கீர்த்தி சுரேஷ் தான் திருநெல்வேலியில் மருத்துவ கல்லூரியில் படித்து வருவதாகவும், தன்னுடன் படித்து வந்த சக தோழியான அபர்ணா வினோத்தை கல்லூரியின் முதல்வரான ஜெகபதி பாபு ஆட்களை வைத்து கொலை செய்துவிட்டு, அவள்மீது தவறான பழியை சுமத்தி விட்டதாகவும் கூறுகிறாள். மேலும், இந்த கொலை சம்பந்தமாக ஜெகபதி பாபு மீது தான் வழக்கு தொடர்ந்திருப்பதால் எனக்கும், என்னுடைய குடும்பத்துக்கும் ஜெகபதி பாபுவால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறுகிறாள்.
இதைக்கேட்ட விஜய், ஜெகபதி பாபுவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் முயற்சியில் களமிறங்குகிறார். இதில் விஜய் வெற்றி பெற்றாரா? நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
விஜய்யின் படத்தில் அறிமுகமாகும் காட்சியே மிகப்பெரிய மாஸாக உள்ளது. முதல் ஆக்ஷன் காட்சியில் மைம் கோபியின் ஆட்களை கிரிக்கெட் விளையாடியே துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளக்கிறது. கீர்த்தி சுரேஷிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடன் லூட்டி அடிக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
ஜெகபதி பாபுவுக்கு விஜய் தான் யார் என்பதை அறிமுகம் செய்யும் காட்சியிலிருந்து, ஜெகபதி பாபு கொடுக்கும் ஒவ்வொரு இடையூறுகளையும் தகர்ந்தெறிந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் விஜய் மாஸ் காட்டியிருக்கிறார். இளமையான தோற்றம், ஸ்டைலான நடிப்பு, பவர்புல் வசனங்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் என விஜய் தனியொரு ஆளாக படத்தை தாங்கிச் சென்றிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க அழகு பதுமையாக வலம் வந்திருக்கிறார். புடவையில் பார்க்கும்போது வழக்கம்போல கொள்ளை அழகு. விஜய்க்கு ஏற்ற ஜோடியாக இவர் அமைந்திருக்கிறார். ‘பாப்பா பாப்பா’ பாடலில் விஜய்யுக்கு இணையாக ஆட்டம் போட்டு கலக்கியிருக்கிறார். அந்த பாடலில் இவருடைய முக பாவணைகள் எல்லாம் மிகவும் ரசிக்க வைக்கிறது.
வில்லன்களாக வரும் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். ஜெகபதி பாபுவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜியும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காமெடிக்கு சதீஷ், தம்பி ராமையா, ஸ்ரீமன், நான் கடவுள் ராஜேந்திரன் என நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், படத்தில் பெரிதாக காமெடி எடுபடவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதேபோல், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அபர்ணா வினோத், சிஜா ரோஸ் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.
இயக்குனர் பரதன், நாட்டுக்கு முக்கியமானது மருத்துவம். அந்த மருத்துவத்தை சொல்லிக் கொடுக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் தகுதியான நபர்களிடம் இருக்கிறதா? என்பதை சுட்டிக்காட்டும்படியான படமாக இதை கொடுத்திருக்கிறார். விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு தன்னால் என்ன கொடுக்கமுடியுமோ? அந்தளவுக்கு கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இவருடைய வசனங்கள்தான் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பஞ்ச் டயலாக்குகள் மட்டுமில்லாமல், சாதாரண வசனங்களிலும் ஒரு பஞ்ச் இருப்பது சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தியை கொடுக்கும் என்று நம்பலாம். படத்திற்கு தேவையில்லாத காட்சிகள் ஆங்காங்கே இருப்பது படத்தின் வேகத்திற்கு தடை போடுகிறது. அந்த காட்சிகளை கொஞ்சம் நீக்கிவிட்டு பார்த்தால் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. ஆனால், சில பாடல்கள் சரியான இடங்களில் அமையாதது சிறிது சலிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிக்கட்டும் வகையில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறது.
அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் எல்லாம் புத்தம் புதிதாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவும், சத்யாவின் ஆடை வடிவமைப்பும் கலர்புல்லாக இருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளில் தனித்துவம் காட்டியிருக்கிறது. பிரவின் கே.எல். எடிட்டிங் படத்திற்கு இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.
மொத்தத்தில் ‘பைரவா’ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணமும் நடக்கவுள்ளதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொடுக்கிறார்.
அதன்பின்னர், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் தோழியான கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வருகிறாள். கீர்த்தி சுரேஷை பார்த்ததும் அவள்மீது காதல் வயப்படுகிறார் விஜய். பின்னர், அவளையே சுற்றி சுற்றி வருகிறார்.
திருமணம் முடிந்து, கீர்த்தி சுரேஷ் ஊருக்கு திரும்பும் வேளையில், பஸ் நிலையத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்த நினைக்கிறார் விஜய். ஆனால், அப்போது கீர்த்தி சுரேஷை ரவுடி கும்பல் ஒன்று தீர்த்துக்கட்ட வருகிறது. பின்னர், ஒரு டெலிபோன் அழைப்பு வந்ததும், அந்த ரவுடி கும்பல் கீர்த்தி சுரேஷை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு சென்றுவிடுகிறது.
இதைப் பார்க்கும் விஜய், அந்த ரவுடி கும்பலுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் என்ன சம்பந்தம் என்று அவளிடமே கேட்கிறார். அப்போது, கீர்த்தி சுரேஷ் தான் திருநெல்வேலியில் மருத்துவ கல்லூரியில் படித்து வருவதாகவும், தன்னுடன் படித்து வந்த சக தோழியான அபர்ணா வினோத்தை கல்லூரியின் முதல்வரான ஜெகபதி பாபு ஆட்களை வைத்து கொலை செய்துவிட்டு, அவள்மீது தவறான பழியை சுமத்தி விட்டதாகவும் கூறுகிறாள். மேலும், இந்த கொலை சம்பந்தமாக ஜெகபதி பாபு மீது தான் வழக்கு தொடர்ந்திருப்பதால் எனக்கும், என்னுடைய குடும்பத்துக்கும் ஜெகபதி பாபுவால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறுகிறாள்.
இதைக்கேட்ட விஜய், ஜெகபதி பாபுவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் முயற்சியில் களமிறங்குகிறார். இதில் விஜய் வெற்றி பெற்றாரா? நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
விஜய்யின் படத்தில் அறிமுகமாகும் காட்சியே மிகப்பெரிய மாஸாக உள்ளது. முதல் ஆக்ஷன் காட்சியில் மைம் கோபியின் ஆட்களை கிரிக்கெட் விளையாடியே துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளக்கிறது. கீர்த்தி சுரேஷிடம் காதல் செய்யும் காட்சிகளும், அவருடன் லூட்டி அடிக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.
ஜெகபதி பாபுவுக்கு விஜய் தான் யார் என்பதை அறிமுகம் செய்யும் காட்சியிலிருந்து, ஜெகபதி பாபு கொடுக்கும் ஒவ்வொரு இடையூறுகளையும் தகர்ந்தெறிந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் விஜய் மாஸ் காட்டியிருக்கிறார். இளமையான தோற்றம், ஸ்டைலான நடிப்பு, பவர்புல் வசனங்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் என விஜய் தனியொரு ஆளாக படத்தை தாங்கிச் சென்றிருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க அழகு பதுமையாக வலம் வந்திருக்கிறார். புடவையில் பார்க்கும்போது வழக்கம்போல கொள்ளை அழகு. விஜய்க்கு ஏற்ற ஜோடியாக இவர் அமைந்திருக்கிறார். ‘பாப்பா பாப்பா’ பாடலில் விஜய்யுக்கு இணையாக ஆட்டம் போட்டு கலக்கியிருக்கிறார். அந்த பாடலில் இவருடைய முக பாவணைகள் எல்லாம் மிகவும் ரசிக்க வைக்கிறது.
வில்லன்களாக வரும் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். ஜெகபதி பாபுவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜியும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காமெடிக்கு சதீஷ், தம்பி ராமையா, ஸ்ரீமன், நான் கடவுள் ராஜேந்திரன் என நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் இருந்தாலும், படத்தில் பெரிதாக காமெடி எடுபடவில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதேபோல், ஒய்.ஜி.மகேந்திரனுக்கும் இன்னும் கொஞ்சம் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அபர்ணா வினோத், சிஜா ரோஸ் ஒருசில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.
இயக்குனர் பரதன், நாட்டுக்கு முக்கியமானது மருத்துவம். அந்த மருத்துவத்தை சொல்லிக் கொடுக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் தகுதியான நபர்களிடம் இருக்கிறதா? என்பதை சுட்டிக்காட்டும்படியான படமாக இதை கொடுத்திருக்கிறார். விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு தன்னால் என்ன கொடுக்கமுடியுமோ? அந்தளவுக்கு கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இவருடைய வசனங்கள்தான் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பஞ்ச் டயலாக்குகள் மட்டுமில்லாமல், சாதாரண வசனங்களிலும் ஒரு பஞ்ச் இருப்பது சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தியை கொடுக்கும் என்று நம்பலாம். படத்திற்கு தேவையில்லாத காட்சிகள் ஆங்காங்கே இருப்பது படத்தின் வேகத்திற்கு தடை போடுகிறது. அந்த காட்சிகளை கொஞ்சம் நீக்கிவிட்டு பார்த்தால் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.
சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. ஆனால், சில பாடல்கள் சரியான இடங்களில் அமையாதது சிறிது சலிப்பை ஏற்படுத்துகிறது. இதை சரிக்கட்டும் வகையில் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறது.
அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் எல்லாம் புத்தம் புதிதாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவும், சத்யாவின் ஆடை வடிவமைப்பும் கலர்புல்லாக இருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகளில் தனித்துவம் காட்டியிருக்கிறது. பிரவின் கே.எல். எடிட்டிங் படத்திற்கு இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.
மொத்தத்தில் ‘பைரவா’ ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.
ஜுராசிக் அட்டாக் என்ற பெயரில் ஹாலிவுட்டில் வெளிவந்த படம் தமிழிலும் டப்பாகி வெளியாகியுள்ளது. இப்படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்..
அமேசான் காடுகளை சுற்றிப் பார்க்க நினைக்கும் தந்தை-மகன் இருவரும் ஒரு தனி விமானத்தில் பயணிக்கின்றனர். அமேசான் காடுகளின் மீது பயணிக்கும்போது, இவர்களுடைய விமானம் பழுதடைந்து காட்டுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் இருவரும் சிறு காயத்துடன் தப்பித்தாலும், அங்கிருக்கும் டைனோசர், தந்தையை கொடூரமாக கொன்று விடுகிறது. மகன் மட்டும் தப்பித்து காட்டுக்குள் செல்கிறான்.
அதேநேரத்தில் தீவிரவாத கும்பல் ஒன்று அமெரிக்காவின் பெண் அணு விஞ்ஞானியை கடத்திக் கொண்டுபோய் வைத்துவிடுகிறார்கள். அவளை மீட்பதற்காக அமெரிக்க ராணுவத்தின் 5 பேர் கொண்ட குழு காட்டுக்குள் பயணமாக தொடங்குகிறது. தீவிரவாதிகள் இருக்கும் காட்டுக்குள் விமானம் செல்ல முடியாது. மாறாக, ஆற்று வழிப் பாதையிலோ அல்லது நடந்துதான் செல்லவேண்டும்.
எனவே, விமானம் மேலே பறந்து கொண்டிருக்கும்போதே பாராசூட் உதவியுடன் இவர்கள் கீழே குதிக்கிறார்கள். இவர்களும் டைனோசர் இருக்கும் காட்டுப் பகுதியிலேயே குதிக்கிறார்கள். அங்கிருக்கும் டைனோசரிடமிருந்து இவர்கள் தப்பித்து, அணு விஞ்ஞானியை காப்பாற்றினார்கள்? காட்டுக்குள் தப்பி ஓடிய மகன் என்ன ஆனான்? என்பதே மீதிக்கதை.
ஜுராசிக் பார்க் பட வரிசையை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தைத்தான் தரும். இப்படத்தில் கிராபிக்சில் உருவாக்கிய டைனோசர்கள் எல்லாம் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளும் ரொம்பவும் செயற்கையாகவே தோன்றுகிறது.
அதேபோல், படத்தில் டைனோசர் வரும் காட்சிகளும் மிகவும் குறைவே. அவற்றை வீரர்கள் சுடும்போது அவைகள் செத்து விழும் காட்சிகள் எல்லாம் நமக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. ஜுராசிக் என்ற பெயரை வைத்துக் கொண்டு எப்படிவேண்டுமானாலும் படத்தை எடுத்தால் படத்தை பார்க்க வருவார்கள் என்று இயக்குனர் நினைத்திருப்பார்போல. டைனோசரின் தாக்குதலை கண்டு வரலாம் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம்தான்.
மொத்தத்தில் ‘ஜுராசிக் அட்டாக்’ தாக்கம் இல்லை.
அதேநேரத்தில் தீவிரவாத கும்பல் ஒன்று அமெரிக்காவின் பெண் அணு விஞ்ஞானியை கடத்திக் கொண்டுபோய் வைத்துவிடுகிறார்கள். அவளை மீட்பதற்காக அமெரிக்க ராணுவத்தின் 5 பேர் கொண்ட குழு காட்டுக்குள் பயணமாக தொடங்குகிறது. தீவிரவாதிகள் இருக்கும் காட்டுக்குள் விமானம் செல்ல முடியாது. மாறாக, ஆற்று வழிப் பாதையிலோ அல்லது நடந்துதான் செல்லவேண்டும்.
எனவே, விமானம் மேலே பறந்து கொண்டிருக்கும்போதே பாராசூட் உதவியுடன் இவர்கள் கீழே குதிக்கிறார்கள். இவர்களும் டைனோசர் இருக்கும் காட்டுப் பகுதியிலேயே குதிக்கிறார்கள். அங்கிருக்கும் டைனோசரிடமிருந்து இவர்கள் தப்பித்து, அணு விஞ்ஞானியை காப்பாற்றினார்கள்? காட்டுக்குள் தப்பி ஓடிய மகன் என்ன ஆனான்? என்பதே மீதிக்கதை.
ஜுராசிக் பார்க் பட வரிசையை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ஏமாற்றத்தைத்தான் தரும். இப்படத்தில் கிராபிக்சில் உருவாக்கிய டைனோசர்கள் எல்லாம் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது. படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்கள் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சண்டைக் காட்சிகளும் ரொம்பவும் செயற்கையாகவே தோன்றுகிறது.
அதேபோல், படத்தில் டைனோசர் வரும் காட்சிகளும் மிகவும் குறைவே. அவற்றை வீரர்கள் சுடும்போது அவைகள் செத்து விழும் காட்சிகள் எல்லாம் நமக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கின்றன. ஜுராசிக் என்ற பெயரை வைத்துக் கொண்டு எப்படிவேண்டுமானாலும் படத்தை எடுத்தால் படத்தை பார்க்க வருவார்கள் என்று இயக்குனர் நினைத்திருப்பார்போல. டைனோசரின் தாக்குதலை கண்டு வரலாம் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம்தான்.
மொத்தத்தில் ‘ஜுராசிக் அட்டாக்’ தாக்கம் இல்லை.
புதுமுகங்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘உன்னை தொட்டு கொள்ள வா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
ஹாஸ்டலில் தங்கி படித்து வரும் நாயகி அஞ்சனாவுக்கு தன்னை ஒரு மர்ம உருவம் பின்தொடர்வது போலவே உணர்வு அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பயந்து நடுங்கும் அஞ்சனாவை அவரது தோழிகள் கிராமத்தில் இருக்கும் அவளது பாட்டியின் வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள்.
நாயகி அஞ்சனாவின் தாத்தா லிவிங்ஸ்டன் மிகப்பெரிய ஜமீன்தார். அவர் இறந்துவிட்ட நிலையில் அவளது பாட்டி பல்லவி மட்டும் அந்த கிராமத்து வீட்டில் வசித்து வருகிறார்.
பாட்டியின் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி இருக்கும் அஞ்சனாவுக்கு அங்கேயும் மர்ம உருவத்தால் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால், அங்கேயும் நிம்மதியில்லாமல் தவிக்கிறாள் நாயகி. இதற்கிடையில், அந்த ஊருக்கு வரும் நாயகன் சிலம்பரசனும், அஞ்சனாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்நிலையில், தன்னை அச்சுறுத்தும் மர்ம உருவம் யார் என்று தெரியாமல் குழம்பி போகிறார் நாயகி. ஒருகட்டத்தில் தனது தாத்தா லிவிங்ஸ்டன் செய்த தவறால்தான் இந்த மர்ம உருவம் தன்னை துன்புறுத்துவதை கண்டறிகிறாள். அவளுடைய தாத்தா செய்த அந்த தவறு என்ன? அதனால் பாதிக்கப்பட்டது யார்? என்பதை சொல்வதே மீதிக்கதை.
படத்தின் கதை முழுக்க நாயகி அஞ்சனாவே நிறைந்திருக்கிறார். அதனால், தனது கதாபாத்திரத்தின் வலு தெரிந்து ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகளில் இவர் பயப்படுவதுகூட ரொம்பவும் செயற்கையாக இருப்பது படத்தை ரசிக்க தோன்றவில்லை.
நாயகன் சிலம்பரசனுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. இருப்பினும், சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். பாட்டியாக வரும் பல்லவி, தாத்தாவாக வரும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். லிவிங்ஸ்டனிடன் உதவியாளராக வரும் காதல் தண்டபாணியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றபடி, படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த படம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அதற்குள் நிறைய திகில் படங்கள் வெளியாகி, ரசிகர்களை பீதியாக்கியுள்ள நிலையில், இந்த படம் பெரிதாக பீதியை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. இருப்பினும், இன்னமும் கிராமங்களில் வழிபட்டு வரும் பெண் தெய்வங்கள் உருவான கதையை இந்த படத்தில் சொல்லியிருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
வசந்தமணியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் மிரட்டவில்லை. சாய் நடராஜின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளும் பெரிதாக இல்லை.
மொத்தத்தில் ‘உன்னைத் தொட்டுக் கொள்ள வா’ தொட முடியவில்லை.
நாயகி அஞ்சனாவின் தாத்தா லிவிங்ஸ்டன் மிகப்பெரிய ஜமீன்தார். அவர் இறந்துவிட்ட நிலையில் அவளது பாட்டி பல்லவி மட்டும் அந்த கிராமத்து வீட்டில் வசித்து வருகிறார்.
பாட்டியின் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணி இருக்கும் அஞ்சனாவுக்கு அங்கேயும் மர்ம உருவத்தால் தொடர்ந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால், அங்கேயும் நிம்மதியில்லாமல் தவிக்கிறாள் நாயகி. இதற்கிடையில், அந்த ஊருக்கு வரும் நாயகன் சிலம்பரசனும், அஞ்சனாவும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இந்நிலையில், தன்னை அச்சுறுத்தும் மர்ம உருவம் யார் என்று தெரியாமல் குழம்பி போகிறார் நாயகி. ஒருகட்டத்தில் தனது தாத்தா லிவிங்ஸ்டன் செய்த தவறால்தான் இந்த மர்ம உருவம் தன்னை துன்புறுத்துவதை கண்டறிகிறாள். அவளுடைய தாத்தா செய்த அந்த தவறு என்ன? அதனால் பாதிக்கப்பட்டது யார்? என்பதை சொல்வதே மீதிக்கதை.
படத்தின் கதை முழுக்க நாயகி அஞ்சனாவே நிறைந்திருக்கிறார். அதனால், தனது கதாபாத்திரத்தின் வலு தெரிந்து ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். நிறைய காட்சிகளில் இவர் பயப்படுவதுகூட ரொம்பவும் செயற்கையாக இருப்பது படத்தை ரசிக்க தோன்றவில்லை.
நாயகன் சிலம்பரசனுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. இருப்பினும், சில காட்சிகளே வந்தாலும் சிறப்பாக செய்திருக்கிறார். பாட்டியாக வரும் பல்லவி, தாத்தாவாக வரும் லிவிங்ஸ்டன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். லிவிங்ஸ்டனிடன் உதவியாளராக வரும் காதல் தண்டபாணியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மற்றபடி, படத்தில் உள்ள மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை. இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்த படம் இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அதற்குள் நிறைய திகில் படங்கள் வெளியாகி, ரசிகர்களை பீதியாக்கியுள்ள நிலையில், இந்த படம் பெரிதாக பீதியை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. இருப்பினும், இன்னமும் கிராமங்களில் வழிபட்டு வரும் பெண் தெய்வங்கள் உருவான கதையை இந்த படத்தில் சொல்லியிருப்பதற்காக இயக்குனரை பாராட்டலாம்.
வசந்தமணியின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் மிரட்டவில்லை. சாய் நடராஜின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம். கிராபிக்ஸ் காட்சிகளும் பெரிதாக இல்லை.
மொத்தத்தில் ‘உன்னைத் தொட்டுக் கொள்ள வா’ தொட முடியவில்லை.






