search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிசுகிசு
    X
    கிசுகிசு

    எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.... புலம்பும் நடிகை

    தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை, பட வாய்ப்புக்காக எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் கிடைக்காததால் புலம்பி வருகிறாராம்.
    தமிழில் கண் கட்டிய படம் மூலம் அறிமுகமான நடிகை, முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்திருந்தாராம். அவர்களுடன் நடித்ததால் தான் ஒரு பெரிய நடிகை என்று நினைக்க ஆரம்பித்து விட்டாராம். சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகம் சேர்ந்ததால் முன்னணி நடிகையாகி விட்டோம் என்று நினைத்து பல சின்ன படங்களை நடிக்க மறுத்து வருகிறாராம்.

    ஆனால், நடிகை எதிர்பார்த்த பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லையாம். இதனால் போட்டோஷூட், நடிகர்கள், இயக்குனர்களுக்கு தூது என பல முயற்சிகளில் இறங்கினாராம். ஆனால், எதுவும் நடிகைக்கு கைகொடுக்கவில்லையாம். இதனால், நடிகை புலம்பி வருகிறாராம்.
    Next Story
    ×