என் மலர்
சினிமா

கிசுகிசு
அநியாயத்துக்கு சம்பளம் கேட்கும் பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அநியாயத்துக்கு சம்பளம் கேட்கிறாராம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த நடிகர் தற்போது தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்துள்ளாராம். நடிகரின் நடிப்பை பார்த்து தெலுங்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகரை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்து வருகிறார்களாம்.
இதனை பயன்படுத்தி நடிகர் தன்னுடைய சம்பளத்தை 10 மடங்காக உயர்த்தி விட்டாராம். மேலும் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறாராம். கொஞ்சம் புகழ்ந்து பேசியதுமே சம்பளத்தை உயர்த்தி விட்டார் என அக்கட தேசத்து தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை நடிகர் சரியாக பயன்படுத்திக் கொள்கிறாராம்.
Next Story






