என் மலர்
சினிமா

கிசு கிசு
அமைதி காக்கும் நடிகை - பலவிதமாக பேசும் டோலிவுட் வட்டாரங்கள்
கடந்த சில நாட்களாக நடிகை அமைதியாக இருப்பதால், டோலிவுட் வட்டாரங்கள் பல விதமாக பேசி வருகிறார்களாம்.
சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஆக்டிவ்வாக இல்லாதவர்கள் கூட தற்போது தினமும் ஒரு வீடியோ அல்லது பதிவு என பிஸியாக உள்ளார்களாம். ஆனால், எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் யூ டர்ன் போட்ட நடிகை, கடந்த பத்து நாட்களாக அமைதியாக இருப்பது டோலிவுட்டில் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளதாம்.
எந்த ஒரு நன்கொடையையும் அவர் அறிவிக்கவில்லையாம். தனது சமூக சேவை நிறுவனம் மூலம் என்ன உதவி செய்கிறார் என்பதையும் தெரிவிக்கவில்லையாம். ஒரு சிலரோ நடிகை கர்ப்பமாக இருப்பதால் ஓய்வில் இருக்கிறார் என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இப்படியான கிசுகிசுக்கள் மேலும் பரவாமல் தடுக்க நடிகை சீக்கிரமே ஏதாவது ஒன்றை பதிவிட வேண்டும் என திரையுலகில் எதிர்பார்க்கிறார்களாம்.
Next Story






