இயக்குனர்களின் முடிவு எனக்கு வசதியாக இருக்கிறது - உதயநிதி ஸ்டாலின்

இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’.இப்படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து கண்ணை நம்பாதே படக்குழு மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தனர். கண்ணை நம்பாதே படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அதில் "இயக்குனர்கள் சாதுவான கதைகளை சொல்கிறார்கள். எனக்கு, என்னுடைய உடல் வாக்கிற்கு அந்த மாதிரி கதைகள் தான் சரியாக இருக்கும் என அவர்கள் முடிவு செய்து விடுகிறார்கள். எனக்கும் அது வசதியாக இருக்கிறது, முடிந்தவரை 'மனிதன்' திரைப்படத்திற்கு பிறகு வித்தியாசமான கதைக்களம் கொஞ்சம் சவாலான கதாபாத்திரங்கள் இப்படி செய்யனும் என்ற நோக்கத்தோடு திரைப்படம் நடித்து வருகிறேன்." என்று உதயநிதி ஸ்டாலின் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com