search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
    X

    பி.சி. ஸ்ரீராம்

    மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

    • சினிமா துறையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
    • இவர் சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

    இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.


    பி.சி.ஸ்ரீராம்

    மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    பி.சி.ஸ்ரீராம்

    அதில், "பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று அனைவரிடமும் உண்மையை பேசியுள்ளார். நேரடி தொடர்பும் வெளிப்படை தன்மையும் அச்சமின்மையும் இருக்கும் இன்றைய உலகில் இது அவரது வலிமையைக் காட்டுகிறது. அவர் இன்னும் உயர்ந்து நிற்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.


    Next Story
    ×