search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராமர் கோவில் திறப்பு - நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்த பாடல் வைரல்
    X

    ராமர் கோவில் திறப்பு - நடிகை சுகன்யா எழுதி, இசையமைத்த பாடல் வைரல்

    • ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.
    • பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா செய்துள்ளார்.

    அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான சுகன்யா 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற பாடலை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார்.

    பக்தி ரசம் சொட்டும் வகையில் அமைந்துள்ள இந்த பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் பாடும் வகையில் அமைந்துள்ளது. 'ஜெய் ஸ்ரீ ராம்' பாடல் வீடியோவாக வெளியாகி வைரல் ஆகி வருகிறது. பாடலின் வரிகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட உள்ளன. இப்பாடலின் இசை ஒருங்கிணைப்பை சி. சத்யா செய்துள்ளார்.


    பாடல் குறித்து பேசிய நடிகை சுகன்யா, "500 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள நிலையில் நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியபோது என் நெற்றியில் நான் வரைந்த ஸ்ரீ ராமர் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது கோவில் திறப்பு விழா நடைபெற உள்ள வேளையில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த பாடலை சமர்பிக்கிறேன்," என்று கூறினார்.



    Next Story
    ×