search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நான் கேட்டேன், அவர் கொடுத்துட்டாரு - வைரலாகும் ஜாஃபரின் பதிவு!
    X

    நான் கேட்டேன், அவர் கொடுத்துட்டாரு - வைரலாகும் ஜாஃபரின் பதிவு!

    • ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • ஜெயிலர் படம் மூலம் இயக்குனர் நெல்சன் கம்பேக் கொடுத்திருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஜாஃபர். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறார். அந்த வகையில், இவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்து இருக்கிறார்.

    இதனிடையே ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய விலை உயர்ந்த கண்ணாடியை கொடுக்கும் படி, கேட்டதாகவும், உடனே ரஜினி அந்த கண்ணாடியை தனக்கு பரிசாக கொடுத்துவிட்டதாகவும் ஜாஃபர் பதிவிட்டுள்ளார்.

    மேலும் பதிவில் கண்ணாடியின் புகைப்படத்தையும் இணைத்து இருக்கிறார். ஜெயிலர் படத்தில் ரஜினி பயன்படுத்திய கண்ணாடியை கேட்டதும் கொடுத்ததற்கு ஜாஃபர் நடிகர் ரஜினிகாந்த்-க்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

    ஜெயிலர் திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

    Next Story
    ×