search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விமானத்தில் பறந்து வந்து சென்னையில் ஜெயிலர் படம் பார்த்த ஜப்பான் தம்பதி
    X

    விமானத்தில் பறந்து வந்து சென்னையில் ஜெயிலர் படம் பார்த்த ஜப்பான் தம்பதி

    • ’ஜெயிலர்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள்.


    ஜப்பான் தம்பதி

    ரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஜப்பானில் அவரது படத்துக்கு தனி மவுசே உண்டு. அந்த நாட்டில் ஒசாகா பகுதி ரஜினி மன்றத்தின் தலைவராக இருந்து வரும் யாசூடா ஹிதோஷி என்ற தீவிர ரசிகர் தனது மனைவியுடன் ஒசாகாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். இன்று காலை அவர் சென்னையில் உள்ள தியேட்டரில் மற்ற ரசிகர்களுடன் அமர்ந்து ஆரவாரத்துடன் ஜெயிலர் படத்தை பார்த்து ரசித்தார். படம் முடிந்து வெளியில் வந்த அவர் தனது மனைவியுடன் தலைவர் படத்தை பார்ப்பதற்காகவே சென்னை வந்ததாக தமிழில் பேசி அனைவரையும் அசரவைத்தார். ஜப்பான் ரசிகரின் கொண்டாட்டம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    Next Story
    ×