என் மலர்
சினிமா செய்திகள்

எட் ஷீரன் உடன் தீ இணையும் தனியிசை பாடலை தயாரிக்கிறார் சந்தோஷ் நாராயணன்
- இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் எட் ஷீரன் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.
- இந்தாண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் எட் ஷீரன் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
உலகளவில் பிரபலமானவர் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் மற்றும் இசையமைப்பாளரான எட் ஷீரன். இவர் உலகம் முழுவதும் பயணம் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
அந்தவகையில் எட் ஷீரன்கடந்த வருடம் மார்ச் மாதம் மும்பையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்தாண்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இந்நிலையில், எட் ஷீரன், இந்திய இசைக்கலைஞர்கள் தீ, ஹனுமன்கைண்ட் இணையும் தனியிசை பாடல் ஒன்றை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரித்திருக்கிறார்.
இப்படி ஒரு பாடலை தயாரித்ததில் பெருமைகொள்கிறேன் என தனது எக்ஸ் பக்கத்தில் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டுள்ளார்.
Next Story






