என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை- நிதி அகர்வால்

என்னை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன்.அந்த நிலையை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.
என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை- நிதி அகர்வால்
Published on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார், நிதி அகர்வால். தற்போது தன்னை பற்றி நிதி அகர்வால் கூறிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது.

அதில், 'திடீரென உடல் எடை அதிகரித்து காணப்படுகிறீர்கள். திடீரென வெகுவாக எடை குறைகிறீர்கள்' என்று பலரும் என்னை கேட்பதுண்டு. என் உடல் அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கிறது. அது என்னவென்று என்னாலேயே உணர முடியவில்லை.

என்னை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன். அந்த நிலையை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். எனவே சரியான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

தமிழில் 'ஈஸ்வரன்', 'பூமி' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு, சென்னையில் ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com