search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பவதாரிணி மறைவு: அன்பு மகளே என்ற இளையராஜாவின் உருக்கமான பதிவு
    X

    பவதாரிணி மறைவு: அன்பு மகளே என்ற இளையராஜாவின் உருக்கமான பதிவு

    • இளையராஜாவின் மகள் பவதாரிணி நேற்று இரவு காலமானார்.
    • அவரது உடல் விமானம் மூலம் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது.

    சென்னை:

    கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து தியாகராய நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், அன்பு மகளே என பதிவிட்டு பவதாரிணியின் சிறுவயது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    Next Story
    ×