search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் 5
    X
    பிக்பாஸ் 5

    பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய 2 பேர்... யார் யார் தெரியுமா?

    இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியேற்றுப் படலம் நடக்கும்.
    தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும்.

    வருண்-அக்‌ஷரா
    வருண்-அக்‌ஷரா

    அதன்படி இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றுள்ளது. அக்‌ஷரா மற்றும் வருண் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    80 நாட்களை கடந்து வலிமையான போட்டியாளர்கள் என்று பேர் எடுத்த அக்‌ஷரா மற்றும் வருண் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி போறப்போகிறார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
    Next Story
    ×