என் மலர்
சினிமா செய்திகள்

ஸ்ரேயா
மகளுக்காக புதிய முடிவு எடுத்த ஸ்ரேயா
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, தனது மகள் ராதாவுக்காக புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘சினிமா குறித்த எனது எண்ணங்கள் தற்போது மாறிவிட்டன. எனது மகள் ராதா என் படங்களைப் பார்த்து பெருமைப்படும்படியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.
நான் நடிக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் இருபது ஆண்டுகள் வரை நடிப்பேன். இந்த நீண்ட பயணத்திற்கு ரசிகர்களின் அன்புதான் காரணம். இன்னும் 20 ஆண்டுகள் ரசிகர்களின் அன்பை பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக எவ்வளவு உழைக்கவும் தயாராக இருக்கிறேன்.

மகளுடன் ஸ்ரேயா
பத்து மாதங்களுக்கு முன் பார்சிலோனாவில் ஒரு மகளை பெற்றெடுத்தேன். அவளுக்கு ராதா என பெயர் வைத்தோம். ராதா வந்த பிறகு எனது வாழ்க்கையே மாறிவிட்டது. குழந்தையை ஜாக்கிரதையாக வளர்க்க பிரத்யேகமாக யோசிக்கிறேன். எனக்கு கதக் நடனத்தை பின்னணியாக வைத்து வரும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது” என்றார்.
Next Story






