என் மலர்
சினிமா

நரேன் - கார்த்தி
நரேன் பிறந்தநாளுக்கு கார்த்தி கொடுத்த பரிசு
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, கைதி படத்தில் நடித்து பிரபலமான நரேனின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, அஞ்சாதே’, போன்ற படங்களில் நடித்த நரேனின் நடிப்பு இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குனர் சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குனர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது.
இதில் நாயகியாக ஷ்ர்தா சிவதாஸ் நடிக்கிறார். இவர் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்தவர். முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் (Sherizze Sean) நடிக்கிறார்.

குரல் படத்தின் பர்ஸ்ட் லுக்
இப்படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் நரேன் பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story






