search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சேரன்
    X
    சேரன்

    தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட வேண்டும் - சேரன்

    தமிழக அரசால் தனி ஓடிடி தளம் உருவாக்கப்பட்டால், அதன்மூலம் சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு விடிவு காலம் என சேரன் தெரிவித்துள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைத்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. அவற்றுக்கு ஓடிடி-யில் வரவேற்பு கிடைப்பதை கருத்தில் கொண்டு மலையாள சினிமாவுக்கென பிரத்யேகமாக ஓடிடி தளம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓடிடி தளம் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

    இந்நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள இயக்குனர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்று தனி ஓடிடி தளம் அவசியம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இதுபோன்ற முயற்சி நமது தமிழ் திரைப்படத்துறைக்கும் தமிழக அரசால் உருவாக்கப்படவேண்டும். 

    சேரனின் டுவிட்டர் பதிவு
    சேரனின் டுவிட்டர் பதிவு

    சிறு முதலீட்டு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு இதன் மூலமே விடிவு காலம். அரசுக்கும் வருமானம் கிடைக்க வாய்ப்பு அதிகம். தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் அவசியம்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள சேரன், தமிழக முதல்வர் ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது டுவிட்டர் பக்கங்களையும் அதில் டேக் செய்துள்ளார்.
    Next Story
    ×