என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘சூர்யா 40’?
Byமாலை மலர்25 Jun 2021 8:57 AM GMT (Updated: 25 Jun 2021 8:57 AM GMT)
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’ படம், தமிழகத்தை உலுக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராவதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் மீண்டும் தொடங்க உள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக வைத்து ‘சூர்யா 40’ எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் பெண்களுக்காக போராடுபவராக நடிக்கிறாராம் சூர்யா. அதனால் பொள்ளாச்சியில் நடந்த சில உண்மை சம்பவங்களை இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் சேர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X