என் மலர்
சினிமா

இயக்குனர் அமீர்
குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இயக்குனர் அமீர்
தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை போட வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் தனது குடும்பத்தினருடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெருந்தொற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் மூலமாக ஓமந்தூரார் சிறப்பு பல்நோக்கு அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவர் பக்தவச்சலம் முன்னிலையில் நானும் எனது குடும்பத்தாரும் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டோம்.

இயக்குனர் அமீர்
நம்மிடையே நிலவக்கூடிய தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை புறந்தள்ளிவிட்டு பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை ஏற்றுக்கொண்டு கோவிட்19 நோயிலிருந்து முழுவதுமாக விடுபடுவோம். வளமான ஆரோக்கியமான நோயில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story






