என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்த சி.எஸ்.கே வீரர் - பத்தே நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்த சோனுசூட்
Byமாலை மலர்7 May 2021 11:51 AM GMT (Updated: 7 May 2021 2:57 PM GMT)
சிஎஸ்கே வீரர் ஒருவர் தனது உறவினருக்காக ஆக்சிஜன் கேட்டு வந்த நிலையில், நடிகர் சோனு சூட் பத்தே நிமிடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா தற்போது ஐபிஎல்-லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். அவர், தனது 65 வயது அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவை என்றும், தயவு செய்து யாராவது உதவி செய்யுங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். ரெய்னாவின் இந்த டுவிட்டை பார்த்த நடிகர் சோனு சூட், பத்தே நிமிடத்தில் உங்கள் அத்தைக்கு ஆக்சிஜன் சென்று சேரும் என பதிலளித்திருந்தார்.
அதேபோல் சொன்னபடி சுரேஷ் ரெய்னாவின் அத்தை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு பத்து நிமிடத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்பி வைத்துள்ளார் சோனுசூட். இதனையடுத்து நடிகர் சோனு சூட்டுக்கு, சுரேஷ் ரெய்னா தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். கடந்தாண்டு கொரோனா லாக்டவுன் போடப்பட்ட சமயத்தில் இருந்து தற்போது வரை ஏழை மக்கள், மாணவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என ஏராளமானோருக்கு சோனு சூட் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X