என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
படத்தின் வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் பவன் கல்யாண்
Byமாலை மலர்12 April 2021 6:08 AM GMT (Updated: 12 April 2021 6:08 AM GMT)
தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள ‘வக்கீல் சாப்’ திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியில் வெளியான பிங்க் படம், தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ‘வக்கீல் சாப்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த பவன் கல்யாண், இப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ஆதலால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
ஆனால், இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட முடியாமல் தவித்து வருகிறார் பவன் கல்யாண். ஏனெனில் பவன் கல்யாணின் உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நடிகர் பவன் கல்யாண், தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.
இதனை உறுதி செய்து, அவரது ஜனசேனா கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கட்சியை சேர்ந்த பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவன் கல்யாண் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X