என் மலர்
சினிமா

லிங்குசாமி
தவறான செய்தி... லிங்குசாமி கோபம்
தமிழில் ரன், ஜீ, சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய லிங்குசாமி கோபமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு செய்திருக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் நேற்று பாதுகாப்பான முறையில் நடந்து முடிந்தது. ரஜினி, விஜய், கமல், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதேபோல் திரைப் பிரபலங்கள் சிலர் தேர்தலில் வாக்களிக்காமல் இருந்துள்ளனர்.
இதில் இயக்குனர் லிங்குசாமியும் ஓட்டு போட வில்லை என்று செய்திகள் வெளியானது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராஜ்முந்திரியில் எனது அடுத்த படத்திற்கான வேலைக்கு இடையில், என் வாக்கை செலுத்தவே சென்னை வந்து பதிவு செய்தேன்.

சில ஊடகங்கள் நான் வாக்கை செலுத்தவில்லை என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் எனது கடமையை செய்தது போல் நீங்களும் உங்கள் கடமையை சரியாக செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று புகைப்படத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
Next Story






