என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
செல்வராகவன் மீது காதல் வர அந்த கதைதான் காரணம் - கீதாஞ்சலி செல்வராகவன்
Byமாலை மலர்18 March 2021 3:26 PM GMT (Updated: 18 March 2021 3:26 PM GMT)
முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன் மீது தனக்கு காதல் வர காரணமான கதை பற்றி அவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் வீடியோ மூலம் கூறியிருக்கிறார்.
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே ஆகிய படங்களை இயக்கினார்.
சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
இந்நிலையில் இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2010ஆம் ஆண்டும் செல்வராகவன் உருவாக்கி கானல் நீர் என்ற கதையை படித்துதான் செல்வராகவன் மீது காதல் வயப்பட்டேன் என்று கூறுகிறார். மேலும் கானல் நீர் திரைப்படம் தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X