என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அந்த காட்சியில் அழுதுவிட்டேன் - அதிதி பாலன்
Byமாலை மலர்15 Feb 2021 2:14 PM GMT (Updated: 15 Feb 2021 2:14 PM GMT)
அருவி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அதிதிபாலன், அந்த காட்சிகளில் நடிக்கும் போது அழுதுவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அருவி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அதிதி பாலன், விஜய் சேதுபதியுடன் குட்டி ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அருவி படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு இந்த படத்தில் நடித்துள்ளேன். காரணம் நல்ல கதைக்காக காத்திருந்தேன். அதேநேரம் எனக்கு வந்த கதைகள் சில பிடிக்கவில்லை. தொடர்ந்து வந்த கதைகளும் பெண்களை மையப்படுத்தியே வந்தது.
அருவி போன்று இல்லாமல் வித்தியாசமான கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆசையாக இருந்தேன். இந்நிலையில்தான் நலன் குமாரசாமி சொன்ன கதை பிடித்திருந்தது. இந்த கூட்டணியில் விஜய் சேதுபதியும் இணைந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்கும். விஜய் சேதுபதி என்னிடம் இயல்பாக பழகியதோடு, நிறைய அவரிடம் கற்றுக்கொண்டேன். காதல் காட்சிகளில் இதுவரை நான் நடித்ததில்லை.
முதல்முறையாக விஜய் சேதுபதியுடன் நடிக்கும்போது கொஞ்சம் சிரமமாக இருந்தது. அப்போது நான் அழுதுவிட்டேன். விஜய் சேதுபதி அனுபவம் மிக்கவர் என்பதால் அவரால் இயல்பாக நடித்துவிட முடிகிறது’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X