search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அரவிந்த்சாமி
    X
    அரவிந்த்சாமி

    சினிமா டிக்கெட் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? - அரவிந்த்சாமி டுவிட்

    டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை என நடிகர் அரவிந்த் சாமி டுவிட் செய்துள்ளார்.
    விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் ஜனவரி 13-ந்தேதி வெளியாகவுள்ளது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் அதை ரத்து செய்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதே வேளையில், வழக்கம்போல் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர். டிக்கெட் விற்பனை விவகாரம் தொடர்பாக, முதன் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. 

    அரவிந்த்சாமியின் டுவிட்டர் பதிவு

    இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை". இவ்வாறு அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×