என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அமிதாப்பின் உருக்கமான பதிவு
Byமாலை மலர்10 Jan 2021 11:09 AM GMT (Updated: 11 Jan 2021 1:49 PM GMT)
டுவிட்டரில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பதிவிட்ட புகைப்படமும், அதன் பின்னணியும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்தி சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் டுவிட்டரில் 4.5 கோடி ரசிகர்களை பெற்றதையொட்டி, அவரது ரசிகர் ஜாஸ்மின் என்பவர் வாழ்த்து புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் அமிதாப், தனது தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். இந்தப் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ள அமிதாப் பச்சன், அந்த புகைப்படத்தின் பின்னணியை விளக்கியுள்ளார்.
அமிதாப் கூறியிருப்பதாவது, ‘கூலி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் எனக்கு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பியபோது, என்னை பார்க்க வந்த தந்தை உடைந்து, கண்ணீர்விட்டு அழுதார். அப்போது, அவரது காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படம் இது. தந்தையிடம் இருக்கும் சிறுவன் அபிஷேக் பச்சன். இதுவரை கூலி திரைப்படம் பார்க்கவில்லை. இந்த வலியுடன் இனியும் அந்த படத்தை பார்க்கமாட்டேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1982ம் ஆண்டு கூலி படப்பிடிப்பு தளத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அமிதாப் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. அந்த ஆபரேஷன் செய்யும்போது அமிதாப்புக்கு வேறொருவரின் ரத்தம் கொடுக்கப்பட்டது.
அந்த நபருக்கு இருந்த ஹெபடைடீஸ் பி என்ற கல்லீரல் நோய், அமிதாப்புக்கும் தொற்றிக்கொண்டது. இதனால் இன்றும் கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வளவு சோகம் நிறைந்த நினைவலைகளைக் கொண்டுள்ளார். அமிதாப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து வரும் ரசிகர்கள், அவரின் நினைவுகளைக் கேட்டு தங்களின் சோகத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X