என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
போடா போடி 2-ம் பாகம் உருவாகிறது.... சிம்புவுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை
Byமாலை மலர்20 Dec 2020 6:55 AM GMT (Updated: 20 Dec 2020 6:55 AM GMT)
சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் பதம் குமார் அறிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் ‘போடா போடி’. சிம்பு நாயகனாக நடித்த இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்திருந்தார். 2012-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பதம் குமார் இப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்நிலையில், போடா போடி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் சிம்புவே அப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ரித்திகா பால் நடிக்க உள்ளாராம்.
முதல் பாகத்தை போன்றே இந்த படமும் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட உள்ளதாகவும் அடுத்தாண்டு மே மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறி உள்ளார். ‘போடா போடி 2’ முதல் பாகத்தின் தொடர்ச்சி இல்லை எனக்கூறி உள்ள பதம் குமார், அது முதல் பாகத்தை இணைக்கும் ஒரு கதையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X