என் மலர்
சினிமா

சித்ரா
2 மாதத்துக்கு முன் பதிவு திருமணம் செய்த சித்ரா - விசாரணையில் அம்பலம்
தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சின்னத்திரை நடிகை சித்ரா, 2 மாதத்துக்கு முன் பதிவு திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர் சித்ரா. இவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்திருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நடிகை சித்ரா கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஹேம்நாத்துடன் பதிவு திருமணம் செய்திருப்பது தெரிய வந்தது. அவர்கள் அக்டோபர் 19-ந் தேதி பதிவு திருமணம் செய்து உள்ளனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






