search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் விஜய் சேதுபதி
    X
    எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் விஜய் சேதுபதி

    ஜெய்ப்பூரில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி

    ஜெய்ப்பூரில் படப்பிடிப்பில் இருக்கும் விஜய் சேதுபதி மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
    சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர். தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் 72 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இயக்குனர்கள் பாரதிராஜா, பாடகர் மனோ, நடிகர்கள் விஜய், மயில்சாமி, சௌந்தரராஜா, அப்புக்குட்டி, ரகுமான் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ஜெய்ப்பூரில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    படக்குழுவினருடன் விஜய் சேதுபதி

    ஜெய்ப்பூரில் ‘அனபெல் சுப்ரமணியம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், விஜய் சேதுபதி, டாப்சி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
    Next Story
    ×