என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கொரோனாவால் வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது - நித்யாமேனன்
Byமாலை மலர்12 Aug 2020 7:02 AM GMT (Updated: 12 Aug 2020 7:02 AM GMT)
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நித்யாமேனன், கொரோனாவால் வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ளது என கூறியுள்ளார்.
அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “நிஜ வாழ்க்கையையும் சினிமாவையும் நான் ஒன்றாக கலக்க மாட்டேன். படப்பிடிப்புக்கு போனால் அந்த வேலையை வீட்டுக்கு சுமந்து கொண்டு வரமாட்டேன். அதே மாதிரி படப்பிடிப்பு அரங்கில் அடியெடுத்து வைத்து விட்டால் எனது சொந்த வாழ்க்கை அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்கள் எதையும் தொழில் மேல் விழ விடமாட்டேன்.
சிலநேரம் நாம் செய்யும் கதாபாத்திரங்கள் சொல்ல முடியாத தாக்கம் ஏற்படுத்தும். சில வேடங்கள் நமக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கும். இப்போதைய கொரோனா ஊரடங்கில் எல்லோரும் வீட்டில்தான் முடங்கி இருக்க வேண்டி உள்ளது. இந்த ஓய்வு நேரத்தை நம்ம பற்றி நாமே தெரிந்து கொள்ளவும் நம்மை விமர்சனம் செய்யவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
எனக்குள் இருக்கும் குறைகள் எது என்று கண்டுபிடித்து விட்டேன். கொரோனா வாழ்க்கையை போராட்டமாக மாற்றிவிட்டது. நிறைய பேர் சாப்பாட்டுக்கு வழியின்றி போராடுகிறார்கள். எங்களை போன்றவர்கள் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து போராடுகிறோம். எல்லோருமே ஒருவிதத்தில் போராடிக்கொண்டு இருக்கிறோம்”. இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X