search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வனிதா
    X
    வனிதா

    நடிகை வனிதா மீது வழக்கு பதிவு

    நடிகை வனிதா மீது சென்னை போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் சர்ச்சை ஆனது. இந்நிலையில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

     ஐயப்பன்தாங்கலில் உள்ள குடியிருப்பில் கொரோனா காலத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தியதாக அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுசெயலாளர் நிஷாதோட்டா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வனிதா

    தனது திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் ஆட்களை திரளசெய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

     முன்னதாக தன்னையும், தனது கணவரையும் தாக்கி பேசியதாக நடிகை வனிதா விஜயகுமார் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×