என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ராஜா ஸ்டுடியோவை உருவாக்கி வரும் இளையராஜா
Byமாலை மலர்14 July 2020 1:48 PM GMT (Updated: 14 July 2020 1:48 PM GMT)
இசையமைப்பாளர் இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் புதியதாக ராஜா ஸ்டுடியோவை உருவாக்கி வருகிறார்.
இசையமைப்பாளர் இளையராஜா வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தனது பாடல்களைப் பதிவு செய்து வந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் எல்.வி.பிரசாத் இளையராஜாவுக்கு அங்கு இடம் வழங்கினார், மேலும் இளையராஜா இந்த ஸ்டுடியோவிலிருந்து மிகப் பெரிய ஹிட் பாடல்களைப் பதிவு செய்திருந்தார்.
எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத்தும், பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத், இளையராஜாவை ஸ்டுடியோவை விட்டு வெளியேற வேண்டும் என்று விரும்பினார். அப்போது, இளையராஜாவுக்கு ஆதரவாக கோலிவுட்டும் திரண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பலன்கிடைக்கவில்லை. இளையராஜாவும் இனிமேல் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.
தற்போது இளையராஜா கோடம்பாக்கத்தில் எம்.எம்.பிரிவ்யூ தியேட்டரை ரெக்கார்டிங் ஸ்டுடியோவாக மாற்றுவதற்காக வாங்கி இருக்கிறார். இந்த ஸ்டுடியோவுக்கு ராஜா ஸ்டுடியோ என்று பெயரிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ராஜா ஸ்டுடியோ செப்டம்பரில் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X